அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, November 05, 2008

கொஞ்சம் இடைவெளி...கொஞ்சம் சங்கதி...

ஒரு நீண்ட இடைவெளி.. கிட்டதட்ட முழுமையான 6 மாதங்கள். நிறைய மாற்றங்கள் - சில புது வரவுகள், சில கருத்து வேறுபாடுகள், சில சங்கடங்கள், சில இழப்புகள், சில சந்தோஷங்கள் என முற்றிலும் அனுபவங்கள் நிறைந்ததாகவே எல்லா நாட்களும் அமைகின்றன. ஒவ்வொரு நாளிலும் ஒரு முழு திரைப்படம் அல்லது நாவலுக்குரிய சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நம்மை சுற்றி - எவ்வளவு கவனிக்கிறோம் என்பது மட்டுமே சங்கதி.

நிறைய படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதாமல் இருந்ததாலேயே எழுதவேண்டும் என்ற எண்ணம் நிறைந்து இருந்தது. குறிப்புகளில் இருக்கும் கருத்துகள் எல்லாம் மெல்ல மெல்ல எழுத வேண்டும். அலுவலக வேலை அமைப்பு மாறி இருக்கிறது - உருப்படியாக ஏதேனும் செய்யும் திருப்தி இருக்கிறது. வெகுதூர பயணங்கள் தினம் இருந்ததெல்லாம் இப்போது இல்லை - நேரம் கிடைக்கிறது. திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. பெண் நிச்சயம் கணிப்பொறி சார்ந்த துறை கிடையாது - இதனை பற்றிய விவாதம் அவசியமாகிறது - பின்னர் கவனிப்போம். இயல்பியல் வல்லுனர். கோபிசெட்டிபாளயம் அடுத்த நம்பியூர். பெண்ணை விட மாமனார் வெகு சுவரஸ்யமானவர். கலகலப்பான குடும்ப அமைப்பு. டிசம்பர் 8ல் திருமணம் - அனைவரும் வருக... :-) ...

வெகுநாளைக்கு பிறகு மறுபடி எழுத நவம்பர் 6 - எந்த காரணமும் இல்லை. 32 வயது ஆரம்பிக்கும் ஒரு முதிர் இளைஞனின் (விட்டு கொடுப்பமா என்னா..!!!) கருத்துகளின் என்ன வகையான தொனி இருக்கும் என அறிந்து கொள்வதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். புதிய டிஜிட்டல் கேமிரா 8.1 மெகா பிக்ஸல் - புகைப்பட ஆர்வத்தை அதிகமாக்கி உள்ளது. ஒரு அனுபவம் முதிர்த்த நண்பரிடம் தொழில்நுட்பம் கற்று வருகிறேன். சென்னை கொஞ்சமாக பழகி விட்டது. இலக்கிய வட்டம் விரிவாகி உள்ளது. படிப்பது அதிகமாகி பகிர்ந்து கொள்வது குறைந்து விட்டது. நல்ல சினிமா, நல்ல புத்தகம் பற்றிய நம் கருத்துகள் எல்லாம் வெற்று புலம்பல்களை போல தொனியில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் சில தோழமைகள் பொருத்துகொண்டு இன்னும் பேசிவருவது ஒரு மகிழ்ச்சி.

மற்றபடி சமூகமும் வாழ்வும் நலமே.. இனி கொஞ்சம் தொடர்ச்சியான பதிவுகள் செய்ய வேண்டும் (குறிப்பு புத்தகம் நிறம்பி விட்டது). வலைப்பூக்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் எதிரொலிகளையும் பதிவு செய்யவேண்டும்.

அப்புறம் என்ன.. மறுபடி உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி (யாருமே இல்லாத இடத்துல இப்படி ஒரு டயலாக்...;-) .

3 comments:

கதிர் said...

சோடா குடிங்க....

கதிர் said...

நிறைந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்கண்ணன் said...

அப்புறம் என்ன.. மறுபடி உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி (யாருமே இல்லாத இடத்துல இப்படி ஒரு டயலாக்...;-) .

Muthu I am here :)