அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, August 16, 2006

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண பகவானை எத்துனை பேர் கடவுளாக ஏற்று கொள்கிறார்களோ தெரியாது...ஆனால் தேசம் முழுக்க கோடிக்கணக்கானோர் ஒரு நண்பனாக, ஒரு வழிகாட்டியாக, ஒரு குருவாக ஏன் ஒரு மிக சிறந்த காதலனாக கூடவும் ஏற்று கொள்கிறார்கள்.. இந்த முறை சி.என்.என். தொலைக்காட்சி இந்த ஜென்மாஷ்டமியை ஒரு முக்கிய செய்தியாக கருதி இந்தியாவின் பல பகுதிகளிலும் எப்படி ஒரு திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் என்று ஒளிபரப்பி கொண்டிருக்கிறது. நல்ல நட்புக்கும், அற்புதமான காதலுக்கும், தெளிவாக அரசியல் வித்தைகளுக்கும் கிருஷ்ணபகவான் ஒரு அடையாளமாக கொள்ளபடுவதை, அதனை தேசத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒப்பு கொள்வதை உலக நாடுகள் கவனிக்கின்றன. மிக சிலரை மட்டுமே கடவுளாகவும் அதே நேரம் மனிதனாகவும் உலகம் ஒப்பு கொள்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் அனைத்து பாவ புண்ணியங்களையும், நல்லது கெட்டதுகளையும் கடவுளாக பிறந்தாலும் செய்யவேண்டியுள்ளது என்பது கிருஷ்ணனின் வாழ்க்கை. சில சித்து வித்தைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எல்லா மனிதர்களின் உள்மனது ஆசைகளாகவே வெளிப்படுத்தபட்டு இருக்கின்றன. ஜெயமோகனின் ஒரு சிறுகதை உண்டு - யாதவர்களின் அழிவுக்கு பிறகு கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்து கொள்ள வேண்டி ஏகலைவனின் அம்புக்கு பலியாக தயாராகிறார். இறுதியாக தன் காதலி ராதையை பார்க்க கோகுலம் செல்கிறார். அங்கு தன்னை போலவே ஒரு சிறுவனின் குழலோசைக்கு பசுக்களும் பறவைகளும் மயங்கி நிற்பதை காண்கிறார். அவருக்கு தாகம் எடுக்கிறது. ஒரு குளத்தில் நீர் அருந்த குனிகிறார். தண்ணீரில் அவர் முகத்தின் பிம்பத்தை காண்கிறார். முகம் பொலிவிலந்து இருக்கிறது. சுருக்கங்கள் முகத்தில். தலைமுடிகள் கொஞ்சம் நரைத்து இருக்கின்றன. சில நிமிட சிந்தனைகளுக்கு பிறகு அவர் ராதையை காணாமலேயே திரும்பி விடுகிறார் என கதை முடிகிறது. மிக சிறிய ஒரு கற்பனை சம்பவத்தை சொல்லியிருந்த போதிலும் அதில் எல்லா மனிதர்களது அந்திம கால இயல்புகளும் சொல்லபட்டு இருக்கின்றன. மகாபாரதத்தின் எல்லா கிளை கதைகளிலும் கிருஷ்ணர் ஒரு பாத்திரமாகவே இருந்திருக்கிறார். எல்லா சூழ்ச்சிகளுக்கு பின்னாலும், எல்லா சாதனைகளுக்கு பின்னாலும், எல்லா தந்திரங்களுக்கு பின்னரும் அவர் இருந்திருக்கிறார். பகவத்கீதை சரியான முறையில் படிக்கபட்டால் அவற்றில் சாணக்கியருக்கு இணையான அரசியல் தந்திரங்களை காணலாம். என்.டி.ஆர் ஆக இருந்தாலும், கேலண்டர் கிருஷ்ணராக இருந்தாலும், எந்த கோவில் அவதார வடிவாக இருந்தாலும்... கிருஷ்ணர் நிறைய வாழ்க்கை முறை சார்ந்த கருத்துகளில் பின்பற்றபட வேண்டிய தோழன் என்பது உண்மை.

2 comments:

Jeyakumar @ Vetriselvan said...

Nalla sinthanaigal

Jeyakumar @ Vetriselvan said...

Good thoughts.