அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

இங்கேயும் கொஞ்சம் பாருங்கள்...

மரபு மீறி புனைந்த கவிதைகள்...

http://onceinourlife.blogspot.com/

தொலைகாட்சியும் முகமறியா மனிதர்களும்...

நேரடி ஒளிபரப்புகளான பாடல் வழங்கும் அல்லது ஒளி/ஒலிப்பதிவு செய்யபட்ட பாடல் வழங்கும் நிகழ்ச்சிகளை பார்த்ததுண்டா நீங்கள்.. ஓவ்வொருமுறை கோவை வரும்போதும் எப்படியாவது தொலைகாட்சியில் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது..மோசமான உச்சரிப்புகள், அர்த்தமில்லாத கேள்விகள், உபயோகமில்லாத பதில்கள்...தொகுப்பாளினியின் உடையலங்காரம் மட்டுமே (ரகசியமான) கவனிப்புக்கு உள்ளாகிறது... பாடல்களை விட பேசும் விஷயங்கள் முட்டாள்தனமானவை. எனினும் முகமறியா மனிதர்களுடன் கொள்ளும் பேச்சு சார்ந்த உறவு கவனிக்கதக்கது. சமீப சில வருடங்களில் இத்தகைய தொலைபேசி மனிதர்கள் அதிகமாகி உள்ளார்கள். தொலைகாட்சியின் டி ஆர் பி ரேட்டிங் இத்தகைய விளம்பரதார் நிகழ்ச்சிகளை முன்னிலைபடுத்துகிறது. தங்கள் நிஜவாழ்வில்
பார்க்கும் கொடுமையான முட்டாள் மனிதர்களை விட...முட்டாள்தனமான விஷயங்களை விவாதிக்கும் (அழகான) தொகுப்பாளினிகள் பேர் பெருகிறார்கள். இது ஒரு போதையாகி கொண்டு வருகிறது. எல்லா இந்திய சேனல்களும் இதில் இறங்கியுள்ளன - பாடல்கள், கேள்வி பதில், வேடிக்கை விளையாட்டுகள் என முகங்கள் மாறினாலும் - இந்த போதையான முட்டாள் உலகத்துள் ஆழ்ந்து போகும் சில நிமிட ஓய்வு எல்லாருக்கும் தேவைபடுகிறது... பேனா நட்பு போல இது தொடரும் நட்பு இல்லை. வானொலி போல ஒரு முகமறியா பந்தம் இல்லை. தொலைகாட்சி தன் மாய கரங்களில் மக்களை மெல்ல கட்டிபோட்டு உள்ளது. முட்டாள்களின் பெட்டி இன்று தேடிவாங்கும் பொருளாக மாறிவிட்டது. இணையமும் இந்த வரிசையில் இணையும் காலம் இருக்கிறது. இணையம் மெல்ல மெல்ல தன் புத்திசாலி முகமூடிகளை விட்டு சாதாரண மனிதர்களின் பொழுதுபோக்கு சாதனமாக மாறிவருகிறது. கணிப்பொறி நிறைய வீடுகளில் மின்னஞ்சல் தவிர பாடல் கேட்கவும் படம் பார்கவுமே பயன்படுத்தபடுகிறது. அறிவு சார்ந்த பொழுது போக்கு மெல்ல மெல்ல விலகி கவர்ச்சியும் வேடிக்கையும் அர்த்தமில்லாத பரபரப்பு செய்திகளும் நிறைந்த பொழுதுபோக்கு மக்களிடையே முன்னிலை படுத்தபடுகிறது... எனக்கு சுஜாதாவின் என் இனிய இயந்திரா நினைவு வருகிறது... என் காலம் வரை வேடிக்கை பார்க்கலாம்...மனிதர்களையும் அவர்களது மாறிவரும் முட்டாள் உலகங்களையும்...

அம்மாவின் கடிதம்...

ஆனந்தவிகடனின் 81 ஆவது மெகா சிறப்பிதழில் தமயந்தியின் வாக்குமூலம் என்ற சிறுகதையை வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள். ஒரு தாயின் மனதில் இருந்து எழுதபடும் கடிதத்தின் மொழியில் கதை அமைந்துள்ளது. தாய் தனது மகனிடம் அவளது அன்பையும் அவனுடனான தன் பிணைப்பையும் சொல்கிறாள். சில வாக்கியங்கள் நம் மனதின் ஆழம் தொடுகின்றன.. தன்னை பாராட்டும் முதல் ஆண்மகனாக தன் மகனை அவள் குறிக்கிறாள். பிரிந்த உறவின் சாயல்களை பார்க்கும் முகங்களில் எல்லாம் தேடும் பரிதவிப்பு கதையில் இழையோடுகிறது. குழந்தையுடனான வாழ்வின் சில சந்தோஷ தருணங்களை அவள் தனிமையில் நினைக்கிறாள். அவனுக்கு தெரியுமோ தெரியாதோ அவனுக்கு மறுபடியும் அந்த சம்பவங்களை நினைவுறுத்துகிறாள். இந்த கதை படிக்கும்போது எனக்கு என்
அம்மாவின் நினைவு வருகிறது. தன் நட்பு, ஆசைகள், திறமைகள், முதன்மைகள் எல்லாம் இழந்து அப்பாவுக்காகவும் கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழும் போன தலைமுறை பெண்களின் ஒரு அடையாளம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும், தினம் தொலைபேசியில் பேசும்போதும் எங்களை பற்றியே கவலைப்படும் ஒரு ஜீவன்...சில நிமிடங்கள் ஒதுக்கி அவர்கள் சொல்லும் விஷயங்களை கேட்டாலே ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியை என்னால் கவனிக்க முடிகிறது. தாய்க்கும் மகள்/மகனுக்கும் உள்ள பிணைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அது போலவே தந்தைக்கும் மகள்/மகனுக்கும் உள்ள பிணைப்பு. மனித உறவுகளின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கேள்வி குறியாகும் நம் வாழ்க்கை முறையில் இந்த கதை மனதின் ஈரம் கசிய வைக்கிறது.

நினைவுகளின் கல்லறைகள்.

கிராமத்துக்கு திரும்பி வந்த
கிழவன், ஓடைக்கரை வழியே
தன் பழைய காதலியின் புதை
குழியைத் தேடிப் போகிறான்.
ஒற்றையடிப் பாதையில் ஓர்
ஒரு மனித ஊர்வலம்.

பெரும்பாலான பயணங்களில் நான் தாண்டி போகும் இடுகாடுகளில் இந்த கவிதை பொருந்தி போகிறது. நகரவாழ்வின் சமூகத்துக்கு உட்படாத கிராம மனிதர்களின் மனம் கொள்ளும் வாழ்க்கையை இந்த கவிதை சொல்வதாக உணர்கிறேன். உடலுக்கு ஒவ்வாமல் மனதையும், மனதுக்கு ஒவ்வாமல் உடலையும் செலுத்தி கொண்டு நாம் இருப்பதாக வைரமுத்து சொல்லியிருப்பது நிஜம். இந்த கவிதை மனதை மனதோடு செலுத்திய ஒரு ஆன்மாவின் பயணம்.

" ஜன ஆரண்ய " 1977 - 2006

சத்தியஜித் ராயின் "ஜன ஆரண்ய" திரைப்படம் பற்றி சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களில் படித்து இருக்கிறேன். 1977ல் அவர் இந்த திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறார். வசனங்களை சத்தியஜித் ராயே எழுதியியிருக்கும் இந்த திரைப்படம் ஒரு தூய்மையான இளைஞனை மெல்ல மெல்ல மாசுபடுத்தி அவனிடம் கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் பிரக்ஜையை எல்லாம் கழற்றிவிடும் நகரத்தின் அசுர குணங்களை சொல்கிறது. 1977ல் இருந்து இன்று 2006 வரை நகரம் தன் முகத்தை மாற்றி கொள்ளவே இல்லை...அது இன்னும் நகரம் தேடிவரும் அப்பாவி தூய்மையான இளைஞர்களை குறிவைத்து காத்துகொண்டு இருக்கிறது. DVDல் இந்த திரைப்படம் கிடைத்துள்ளது. அடுத்த வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். அப்புறம் நாம் விவாதிப்போம்.