அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, April 30, 2008

வேறு ஒருவரின் கவிதை...


சமீபத்தில் வேறு ஒரு பதிவில் படித்தது. ஏனோ பதிக்க வேண்டும் என தோன்றியதால் இங்கு பதிக்கிறேன்.. இதனை எழுதிய நண்பருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டினால் - இங்கு [http://kundavai.wordpress.com/] பயணம் செய்யவும்.

அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்
மிதந்தபடி சொல்லிச் செல்கிறது
முன்னம் சாத்தப்பட்ட தருணங்களை
வார்த்தைகளின் தேவையில்லை உனக்கு
எனக்கும் கூடத்தான்
உன் நிராகரிப்பின் என் வெறுமை
வார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லை


காலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்து
வரைந்து செல்லும் ஓவியத்தினுள்
தூக்கத்தை தொலைத்தபடிநம் பிம்பங்களுக்குள்
கரைந்து போகிறேன்
உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்
மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும் ஒன்றாய்ப் புறக்கணித்தபடி

இன்னொரு நாளுக்கான தேவையில்லை
உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை
உன்னிடம் கொட்டிக் கவிழ்க்கப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்
ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்
உன் பிரிவின் சோகம் வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டி


புனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்
விளிம்பளவு ஏறியபின்னும்
தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்
நாம் பிரியும் சாத்தியக்கூறுகளை முன்பொருமுறை
மறுத்தளித்ததைப் போல்
உபயோகமில்லாத உன் முகவரியைப் போல...

Sunday, July 30, 2006

சுகிர்தராணியின் சில கவிதைகள்

மனதை தொட்ட சில கவிதைகள்.. இரவு மிருகம் என்ற தொகுப்பில் இருந்து…

எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
யாரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்து கொண்டிருக்கிறோம்

உலகத்து மொழிகளின்
அத்தனை அகராதிகளிலும்
தேடித்தேடி
கடைசியில்
தெரிந்து கொண்டேன்
உன் பெயரில்
காதலுக்கு நிகரான
இன்னொரு சொல்லை.

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கை நழுவி போகின்றன.

Sunday, March 26, 2006

பாரதி..ஒரு மனிதனாக...

பரபரப்பான சமூக வாழ்க்கை...சக மனிதர்கள்.. அவர்களின் உறவுகளின் மதிப்பு அறியாத வேகமான வாழ்க்கை... எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கு கூட சொல்லி தரும் நிறுவனங்கள்... பாரதியின் இந்த கவிதை பகுதி கொஞ்சம் நம்மை நிறுத்தி யோசிக்க வைக்கிறது

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போல - நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?

நின்னை சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே யின்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினை பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய வுயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை மிகத்
தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

தான் எப்படி இருக்கவேண்டும் என நினைத்திருந்த மனிதன்... ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் வாழவேண்டிய கவிதைகளை தந்த கவிஞன்... பாரதியின் கவிதைகள் பற்றிய ஆய்வு புத்தகம் ஒன்று கிடைத்திருக்கிறது... இன்னும் எழத நிறைய இருக்கிறது.. நாம் பகிர்ந்து கொள்வோம்...