நேற்று வந்த ஒரு குறும்செய்தி - "இனிய புது நிதியாண்டு வாழ்த்துகள்" என்றது. அட இதுக்கும் கூட குறும்செய்தியா என்று முதலில் எண்ணினாலும், பின்னர் அதன் முக்கியதுவத்தை அனுப்பியவர் விவரித்தார். (அவர் ஒரு நிதி அமைப்பு சார்ந்த உறுப்பினர் என்பது கொசுறு செய்தி)... எந்த முறையும் இல்லாதது போல இந்த முறை கடுமையான பொருளாதார குழப்பத்தில் நிதியாண்டு பிறந்துள்ளது. கணிப்பொறி சார்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், கணிப்பொறி துறையை உபயோகபடுத்தி கொள்ளும் துறைகளும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. வீட்டு கடன் முதல்கொண்டு எல்லா வகையிலும் கடன் சுமை ஏறியுள்ளது... சென்செக்ஸ் ஏறியுள்ளது என்றாலும் - நெருக்கடி நிலையை பார்த்து பார்த்து - எப்போது பிரச்சனை வரும் என்ற பயமும் உள்ளது. சத்யம் நிறுவன நெருக்கடிக்கு பிறகு எந்த நிறுவனம் எப்போது விற்க்கபடுமோ, யாரால் வாங்கப்படுமோ என்ற பயமும் இருக்கிறது. புதிய நிறுவனம் வாங்கியபிறகு - அதன் சட்டதிட்டங்கள் எப்படி இருக்குமோ என்ற பயமும் கூட. அடுத்த மாதம் சம்பளம் வருமா..!! இந்த மாதமே ஆள்குறைப்பு தீவிரப்படுமா.. என்ற பயங்கள் வேறு.. நிம்மதியாக சினிமா, உணவு விடுதி போகவும் விடாமல் - கையில் இருக்கும் காசை பத்திரப்படுத்த பிரயாசைகள்..!! போன மாதம்தான் - வரி என்ற பெயரில் சம்பளமே 4 இலக்கத்தில் வந்திருக்க, கோடை தொடங்கும் காலம் - எல்லா வகையிலும் செலவு வைக்குமே..!! இப்படி பல கவலைகள் நிதி சார்ந்து இருப்பதால் - வாழ்த்துகள் + பிராத்தனைகள் மிகவும் அவசியமாக இருக்கிறது என்கிறார் அவர். அதுவும் சரிதான்...!!
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Thursday, April 02, 2009
Tuesday, March 31, 2009
உண்மை விளம்பி...
இணைய முகவரி: http://www.snopes.com/
Monday, March 16, 2009
காசேதான் கடவுளடா...
மனசு...
சென்னை சங்கமம் 2009
தெய்வத்தால் ஆகாதெனினும்...
Monday, April 28, 2008
இன்னும் உண்டு வேலைகள்
பாலியல் மாநாடு
நாய்களின் அரசியல்
புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்
நினைவு மறந்த மனிதர்கள்
இயற்கை விவசாயம்
5 வருட திட்டம்
ஆணுறையும் ஜெயில் கைதிகளும்
Tuesday, April 01, 2008
நம்மை சுற்றிய உலகம்...
சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை.
செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு சென்று போலீஸ் மற்றும் தூதரக உதவியுடன் தன் மனைவியை மீட்டிருக்கிறார்.
செய்தி 2 - திருமணம் நிச்சயமான பிறகு கை தொலைபேசியில் காதல் உரையாடும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் இளமைக்கால - பள்ளி அல்லது கல்லூரி காலங்களின் நட்புகள் மற்றும் உறவுகள் பற்றிய - அந்தரங்க செய்திகள் பின்னாளின் திருமண முறிவுக்கு காரணமாகிறது என்கிறது சமீபத்திய கோர்ட் ஆதாரம் ஒன்று.
செய்தி 3: 2004 ஆம் வருடம் முதல் வகுப்பில் தேறிய - இன்னும் வேலை கிடைக்காத ஒரு இளைஞர் தன்னையும் விட சுமாராக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து இருப்பதை கண்ட விரக்தியில் குடித்துவிட்டு போதையில் ஒரு கடற்கரையோட கல்லூரியின் ஆய்வு கூடத்தை வெடிகுண்டு தயாரிக்க முற்றுகையிட அவரை போலீஸ் கைது செய்தது
செய்தி4: சென்னையில் "சேர்ந்து வாழ்தல்" கலாச்சாரம் அதிகமாகிறது - பெறும்பாலும் இளம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான தொலைபேசி உதவி நிறுவன ஊழியர்களே என்கிறது ஆய்வு. திருமணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை என்பதால் ஜோடி போல காண்பித்து கொள்ளுதல், உயர்ந்து வரும் தனி மனிதர் வீட்டு வாடகை, குடும்ப உறவுகளிடம் இருந்து தனிமை, பொருளாதார சுதந்திரம், காலதாமதமாகும் திருமணம், நெடு நேர அலுவலக வாழ்க்கை, விளையாட்டான காமம் அறியும் போக்கு, நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, உலகமயமாக்கலின் விளைவு, கார்பரேட் உலகின் உளவியல் வன்முறைக்கான வடிகால் என காரணங்கள் அடுக்கபடுகின்றன.
Sunday, March 23, 2008
திருநங்கை கல்வியாண்டு
ஆட்டமும் பின்புலமும்..
உடை மட்டுமா கலாச்சாரம்..
காகித பூக்களின் காலம்...
அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.
வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.