அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

Wednesday, March 05, 2008

அழகும் அறிவும்

குமுதம் பத்திரிக்கையின் ஒரு செய்தி தலைப்பு இந்த பதிவுக்கு ஒரு முக்கிய காரணம் - அழகான மனைவி இருக்கும் கணவர்கள் ஏன் அடுத்த பெண்களை தேடுகிறார்கள் என்றது பத்திரிக்கை செய்தி தலைப்பு. பொதுவில் அழகு என்பதனை வெறும் உடல் ரீதியான விஷயமாகவே சமுதாயம் கருதுகிறது - பத்திரிக்கைகள் சமுதாய கருத்துகளை பிரதிபலிக்கின்றன. அழகான (உடல் ரீதியாக) பெண்கள் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என கருதமுடியாது - என் பழைய கம்பெனி சி.இ.ஒ சொல்வார் - பார்க்க ஐஸ்வரியா ராய் போலவும் புத்திசாலிதனத்தில் இந்திரா காந்தியும் கிடைக்கமாட்டார்கள் என்று. அது சில நேரங்களில் உண்மைதான். பெரும்பாலான இன்றைய ஆண்களுக்கு நிறைய அலுவக சமுதாய பிரச்சனைகள் இருக்கின்றன - அவை பெரும்பாலும் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் கருத்தாக கொண்டவை. சிலருக்கு அது தொழில்முறை இல்லாத - கலை, இலக்கியம், ஓவியம், இசை, சினிமா, புத்தகங்கள் எனவும் இருக்கலாம் - இந்த கருத்துகளை பேசும் பெண்கள் மேல் பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு ஆளுமை ரீதியாக ஈர்ப்பு உண்டு. இன்றைய பெரும்பாலான பெண்கள் இன்னும் அந்த அளவு வளரவில்லை எனலாம் - அவர்கள் சம்பாதிக்கிறார்கள், செலவும் சேமிப்பும் செய்கிறார்கள் - ஓரளவு எல்லா உலகவிஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள் - ஆனால் பேச விரும்புவதில்லை. அவர்களின் உலகம் வேறாக இருக்கிறது - அது அவர்களின் தவறும் இல்லை, மிகவும் இயல்பான விஷயம் அது. எனவேதான் ஆளுமை ரீதியாகவோ நட்பு ரீதியாகவோ மற்றும் ஆறுதல் அல்லது யோசனைகளை கொடுக்கும் பெண்கள் ஆண்களை மிகவும் ஈர்க்கிறார்கள். அந்த பத்திரிக்கை செய்தி நடிகை ஷோபனா சம்பந்தபட்டது - அவரின் வயது, அனுபவம், பழகும் விதம் மற்றும் சமுதாய பொருதார சிந்தனைகள் (அவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நாட்டிய நாடகத்திலும் சினிமாவிலும் அனுபவம் கொண்டவர்) ஆகியவை ஒரு குறிபிட்ட ஆணை ஈர்த்து இருக்கலாம் - இந்த குணாதிசியங்கள் அவருடைய மனைவிடம் இல்லாமல் இருந்திருக்கலாம் - அது ஒரு நட்பு அல்லது உறவுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம். ஆனால் பத்திரிக்கை செய்தி "செக்ஸ்" என்ற ஒரு கோணத்திலேயே அமைந்து இருக்கிறது. என் தோழன் ஒருவன் உண்டு - அவனுக்கு ஒரு இளவயது காதலியும் உண்டு. எப்போதெல்லாம் அவன் தன் அலுவக மற்றும் வாழ்க்கை பற்றிய விஷயங்களை பற்றி பேசுகிறானோ அப்போதெல்லாம் அந்த பெண் அவன் ரொம்பவும் போர் அடிப்பதாக கோபித்து கொள்வதுண்டு - ஒரு ஆண் எல்லா நேரங்களிலும் பெண்ணுக்கு விருப்பமான விஷயங்களையே பேச முடியாது - அந்த பெண்ணை அடிப்படையாக கொண்டே அவன் உலகத்தை இயக்கி கொள்ள முடியாது - அவளுக்கு வேண்டும் போதெல்லாம் அருகில் நிற்க முடியாது - அவனுக்கும் வாழ்க்கை உண்டு - அவனுக்கும் அதே தேவைகள் உண்டு - பெண்களை போலவே ஆண்களுக்கும் அந்தரங்கக தனிமை தேவைபடுகிறது அல்லது அந்தரங்க விருப்பு வெறுப்புகள் உண்டு. இதனை பெரும்பாலான பெண்கள் புரிந்து கொள்வதில்லை - புரிந்து கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு பிடித்து போகிறது - அவன் இயல்பாக அப்படிபட்ட பெண்கள் மேல் ஈர்ப்பு கொள்கிறான் - இந்த விதி பெண்களுக்கும் பொருத்தமானது - இது திருமணம் அல்லது விதிக்கபட்ட காதலுக்கு பின் ஏற்படுமாயின் அதன் காரண வேரை முழுமையாக அறியாமல் வெறும் உடல் ஈர்ப்பென பார்ப்பது அநாகரீகம்.

Monday, September 05, 2005

வாழ்வின் பெண்கள்

கமல் தன் வாழ்வின் பெண்கள் பற்றி பேசியிருந்தார்.பெண்கள் இல்லாத உலகம் கற்பனை செய்ய முடியாத ஒன்று என்றார். இதுவரைக்கும் நான் கடந்து வந்த பாதையில் திரும்பி பார்க்கும் போது அவருடைய கருத்து ஒத்து கொள்ளதக்கது. 1ஆம் வகுப்பில் அரைகுறை நினைவுகளுடன் படித்த தனலட்சுமியிலிருந்து, கல்லூரியில் கூட படித்த நாகரத்தினம்...அப்புறம் (தற்போது சண்டிகரில்) வேலை பார்க்கும் சிந்துஜா, சில நாட்களே உடன் பணிபுரிந்த அபிராமி வரை, புதியதாக சேர்ந்து என்னுடன் வேலை பார்த்து கொண்டிருக்கும் ஒரு மதுரைக்கார பெண் லில்லி தெரஸா வரை.. நல்ல நட்பான பெண்கள் நிறைய உண்டு.

அப்புறம், பள்ளி இறுதி கால நாட்களில் நெருக்கம் கொண்ட சில (Special) தோழிகளும் உண்டு. கல்லூரியிலும் உண்டு. வேலை செய்யும் காலங்களிலும் உண்டு. மனசு எல்லாரையும் ஒரே தட்டில் வைப்பதில்லை. இனம் புரியாமல் அது சலனப்படுபோது, ஒவ்வொருவருக்கும் அதுவே
தனித்தனியான தட்டில் அமைக்கிறது. மனசு ஊஞ்சல் என்றார் சுகி.சிவம். ஒரு நிலைப்பாட்டுக்கு வரும் வரை ஆட்டம் கொண்டுதான் இருக்கும்.அதன் போக்கில் விட்டு கட்டுபாடு அடையும் போது நிறைவான கட்டுபாடு சாத்தியமாகிறது. இது இருபாலருக்கும் பொது என்கிறார் சத்குரு
ஜக்கி வாசுதேவ்.ஆதலனினால் நண்பர்களே..சஞ்சலத்தை சஞ்சலத்தோடு அணுகாதீர் !!!!

மஞ்சள் நிறத்தில் ஒரு கோடு...

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறோம்... என்ன செய்வது... முதல் காரணம் இந்திராகாந்தி பல்கலைகழகத்துக்கும் எனக்கும் உள்ள அசைக்க முடியாத பந்தம்... அப்புறம் அலுவக காரணங்கள்... இனிமேல் தொடர்ச்சியாக எழுத முடிவெடுத்துள்ளேன்.. இது ஒரு வகையில் மனதை திருப்திபடுத்துவதான உணர்வுதான் அதற்க்கான காரணம்... கொண்ட வேலைகளுக்கு மத்தியில் ஒரு பொழுதுபோக்கு, யாரையும் தொந்தரவு
செய்யாமல்.


சமீபத்தில் நண்பர்களுடனான ஒரு விவாதத்தில் "Yellow Line Friendship" எனப்படும் ஆண்/பெண் நண்பர்களுடனான நட்பு பற்றி பேசினோம். இது இப்போது உள்ள சமூகத்தில் பரவலாகி உள்ளது. தோழமை தாண்டிய நெருங்கிய உறவுமுறை... ஆனால் எல்லைகள் கொண்ட
நட்பு... என் பெண் நண்பர்கள் சிலர் "Yellow Line" அமைப்பில் உள்ளனர்... எங்களுக்குள் நெருக்கம் உண்டு... எல்லைகளும் உண்டு... ஒரு நண்பர் கேட்டார்... என் பெண் நண்பர்களுடனான உறவு.. " உடல் சார்ந்த ஈர்ப்பா.." .... நான் சொன்னேன்.. "மனம் சார்ந்த ஈர்ப்பு... " .. "இதில் உடல் பங்கேற்பதில்லையா.. "... " மனதை விட குறைவான பங்குதான்.. " ... " அப்போ.. இது காமமா..
காதலா.. "... " நட்பை விட உயர்ந்த.. காதலை விட உயர்ந்த... காமத்தை விட உயிர்ப்பான.. உணர்வு... " "தோளில் சாய்ந்து கொள்வதையும்... கைகளை கோர்த்து கொள்வதையும்... இடுப்பை அணைத்து நடப்பதும்... உம் கண்களுக்கு காமமேயெனில்... விளக்கம்
ஒன்றுமில்லை.... என் பார்வைக்கு... இது நட்பு சார்ந்த ஆளுமை... யாரும் யாரையும் கட்டாயபடுத்துவதில்லை... விருப்பம் கொண்டவர்களிடம் மட்டுமே உள்ள உறவு இது... " அப்புறம் இது பற்றி பேச பெரிய ஆர்வம் யாரும் காட்டவில்லை...பின்னர் ஒரு முறை
கேள்வி கேட்ட நண்பரை ஒரு Java Green Cafeல் அவருடைய தோழியுடன் பார்த்தபோது அவர் புரிந்து கொண்டிருந்தது புரிந்தது. எனினும் யாரும் சுலபத்தில் ஒத்து கொள்வதில்லை. அப்படி இருப்பவர்களையும் சமூகம் கவனிக்கும் தொனி ஒரு காரணம் என்பது என் கருத்து.