சென்னையில் ஆங்காங்கே திடீர் போஸ்டர்கள் முளைக்கும். "ஈழத்தமிழர்" நல்வாழ்வை முன்னிட்டு உண்ணாவிரதம்.. பொதுக்கூட்டம்.. கண்டனம்.., "இஸ்ரேல்" அராஜத்தை கண்டித்து கண்டனம்..பொதுக்கூட்டம்.. உண்ணாவிரதம்.., .. இன்னும் எங்கேல்லாம் ஏதாவது நடக்கிறதோ அதனை கண்டித்து ஆர்பாட்டங்களுக்கு அழைப்புகள்.. எல்லாம்.. எனக்கு ஒரு கேள்வி ரொம்ப நாளாக - (படித்து முடித்தவுடன் நான் எல்லா அரசியல் படுகொலையாளிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகம் எழுந்தால் - மறுபடி ஒருமுறை நிதானமாக படித்து உண்மை அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்).
நம் அரசியலமைப்புக்கு கட்டுபடாத அடுத்த நிலப்பரப்பில் நடக்கும் எந்த படுகொலைகளும், அராஜங்களும், அரசியல் புரட்சிகளும், இன அழிப்பு நடவடிக்கைகளும் இங்கே நடக்கும் எந்த கண்டன பொது கூட்டத்தாலும், உண்ணாவிரதத்தாலும், ஆர்பாட்டங்களாலும் - தற்கொலைகளாலும் - தடுத்து நிறுத்தபட போவதில்லை என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் புரியும் உண்மை. அப்புறம் எதற்கு இந்த குழப்பமான போராட்டங்கள்...!!! போராட்டம் நடத்தும் எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்...!! போராட்டங்கள் தாண்டி - மருத்துவ உதவி, உணவு பிரச்சனைகள், அகதிகள் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் கட்சி, கூட்டணி, பதவி என கவனம் செலுத்துவது ஏன்...!! பொருளாதார அளவிலும், ராணுவ அளவிலும் பெரிய உலக நாடுகள் விடுக்கும் எந்தவொரு வேண்டுகோளையும் எச்சரிக்கைகளையும் கண்டு கொள்ளாத அரசியல் படுகொலையாளிகள் - இங்கே நடக்கும் போராட்டங்களுக்கும், வாய் சவடால்களுக்கும் பயந்து (!!!) திருந்தி விடுவார்கள் என நம்புவது ஏன்..!! ஆயுத வியாபாரம் நடத்தும் யுத்தங்கள் நம்மை சுற்றி என்றும் காத்திருக்கின்றன என்ற உண்மை புரியாதது போல நடிப்பது ஏன்..!!! அறிவு ஜீவிகள் என்று சொல்லி கொள்பவர்கள் கூட இந்த குழப்பங்களை ஆதரித்து அறிக்கை (ஒரு பிரயோஜனமும் இல்லாதது..!!) விடுவது ஏன்..!! தங்கள் அடிப்படை கொள்கைகளின் (அப்படி ஒன்று இருந்தால்) வழியில் நடப்பதை கூட சரியாக செய்யாத கட்சிகளையும் (ஆளும்கட்சி, எதிர்கட்சி மற்றும் எல்லாம் கொத்து புரோட்டா கட்சிகளையும்) தலைவர்களையும் நம்பி - இவர்கள் அரசியல் சமூக அளவில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என நம்பி - புரட்சிகரமான (!!!) முடிவுகளை சிலர் எடுக்க காரணம் என்ன..!! ஈழத்து பிரச்சனையை பொருத்தவரை - இந்தியா உட்பட எல்லா நாடுகளும் + போராட்டம் நடத்துபவர்களும் இதனை ஒரு சக மனித பிரச்சனையாக பாராமல் "தமிழர்" பிரச்சனையாகவே கொள்வது ஏன்..!! பாகிஸ்தானிலும், இலங்கையிலும் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்களை / இந்திய கைதிகளை மீட்பது குறித்து அவ்வப்போது வெத்து போராட்டங்கள் மட்டுமே நடத்தும் அரசியல்வாதிகள் - நம் தேசத்தை சேர்ந்த அவர்களை கூட காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகள் - தேனும் பாலும் ஓட வைப்பார்கள் என்ற நம்பிக்கையை இன்னும் மக்கள் கொண்டிருப்பது ஏன்..!! சினிமா நடிகர்களையும், நடிகைகளையும் வைத்து கொள்கை நம்பிக்கை இல்லாமல் கவர்ச்சி பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள்... "கையை வெட்டுவேன்" என்று பேசும், ஒரு மாநிலமே பற்றி எரிந்தது எனும் போதிலும் - நல்ல அரசியல்வாதி என சான்றிதழ் வாங்கிய அரசியல்வாதிகளும், சுய ஆதாயங்களை மட்டுமே குறியாக மாநில அரசியல் கட்சிகள்.. இவர்களை இன்னும் மக்கள் நம்புவது ஏன்..!!
பதில் தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.. விவாதிப்போம்..
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts
Tuesday, March 31, 2009
Subscribe to:
Posts (Atom)