அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Tuesday, March 31, 2009
அரசியல் குரங்குகள்...
ஒரு அரசியல்(!!!)/ஜாதி கட்சி - மறுபடியும் ஒரு கூட்டணி மாற்றம் செய்திருக்கின்றது. தேர்தல் காலங்களில் இப்படி பட்ட கேவலமான கூத்துகள் சகஜமாகிவிட்ட நம் தேசத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி தாண்டும் கட்சிகள் மலிந்து விட்டது கண்கூடு. 1988ம் வருட ஆனந்த விகடனின் தலையங்கத்தில் இந்த கூட்டணி மாறுதலை பற்றி ஒரு கண்டனம் இருக்கிறது. இது வருடம் 2009 - இன்னும் நிலை மாறவில்லை - மோசம்தான் ஆகியிருக்கிறது. சமீபத்தில் கூட்டணி மாறிய கட்சி சொல்லியிருக்கும் காரணத்தை படித்து பாருங்கள் - அதில் அவர்களது "கொள்கை" அற்புதமானதாக இருக்கிறது. இங்கு இருக்கும் போது அங்கு உள்ளவர்களை கேவலமாக பேசுவது - அங்கு இருக்கும் போது இங்கு இருப்பவர்களை கேவலப்படுத்துவது - இத்தனை சூடு சொரணை உள்ளவர்கள் "அண்ணனும்" இல்லாமல் "அன்பு தோழியும்" இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கலாமே..!! அட அப்படி எல்லாம் இருந்துவிட்டால் சம்பாரிப்பது எப்படி...!! இந்த குரங்கு கூத்துக்கு ஈழத்தமிழர் நலன் காப்பு என்ற சால்ஜாபு வேறு..!! எல்லாம் நேர கொடுமை.. மூன்றாவது மாற்றாக - ஒரு ஆச்சரியமாகவும்தான் - நடிகர் கட்சி தனியாக நிற்க்கிறது - சின்னம் கூட கொடுத்து விட்டார்கள். நமது அய்யா இந்த நடிகரை கொள்கை இல்லாத கட்சி என்று விமர்ச்சித்து இருந்தால் ஒரு காலத்தில். கொள்கை கொண்ட அய்யாவின் கட்சி ஒவ்வொரு தேர்தலுக்கும் கொள்கை காகிதங்களில் பிரியாணி துடைத்துவிட்டு கூட்டணி மாறி கொண்டுதான் இருக்கிறது. நடிகருக்கு கூட்டணி சேராமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி இருந்து கொண்டிருந்தாலும் - இந்த நிமிடம் அவர்மேல் - (கொஞ்சம் சினிமாதனமாக இருந்தாலும்) - ஒரு மதிப்பு இருப்பது உண்மை...
Monday, March 16, 2009
காசேதான் கடவுளடா...
மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 35 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது போதாது என கிட்டதட்ட எல்லா வேட்பாளர்களும் புகார் செய்துள்ளார்களாம். செலவுகளை கண்காணிக்க தனி பார்வையாளர்களும், வருமான வரித்துறையினரும் நியமிக்கபட உள்ளார்கள். கடந்த 20004 தேர்தலை விட இம்முறை 50% விலைவாசி உயர்ந்துவிட்டதால் இந்த கட்டுபாடு தளர்த்தபட வேண்டும் என பலரும் கேட்டுள்ளனர். போஸ்டர், வாகனம், கொடி, பிளக்ஸ் போர்ட், தேர்தல் அலுவலக செலவு என கைமீறுமாம் செலவு. உண்மையாக மக்களை சந்திக்கவும், அவர்களுடன் மேம்பாடு குறித்து விவாதிக்கவும், தொகுதிக்கு நிஜமாக நல்லது செய்திருப்பினும் - நல்ல கருத்து சார்ந்த ஒற்றுமை உணர்வு மக்களோடு இருப்பினும் - இந்த பணம் ரொம்பவே அதிகம். பெரும்பாலான இந்த செலவுகள் ஆடம்பர விளம்பரங்களே. கொஞ்சம் ஓட்டுக்கு பணமும் லஞ்ச பொருள்களுமாக விளையாடும். இந்த தேர்தலை வைத்து கட்சிகார அடிமைகள் கொஞ்சம் சம்பாதிப்பார்கள். சாராயமும் கைகலப்பும் இருக்கும். எங்கு கேட்டாலும் காசு இல்லை என்றும் - பொருளாதார தேக்கம் என்றும் சொல்லபடும் தேசத்தில் - இத்தனை பணம் எங்கிருந்து அய்யா வருகிறது. இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சியாம். இதற்கு எல்லா அரிதார முதலைகளும் 2010, 2011 என்று குறிவைத்து காய்நகர்த்துகிறார்கள். மொத்தத்தில் உருப்படியாக சம்பாரிப்பவன் ஏமாளி - மற்றவன் எல்லாம் பிழைக்க தெரிந்தவன்...
Monday, April 28, 2008
நாய்களின் அரசியல்
நான் வசிக்கும் தெருவில் 4 நாய்கள் இருக்கின்றன. முதலில் 3தான் இருந்தது - புதியது வந்து 1 மாதம் ஆகிறது. அவற்றுக்குள் பொதுவான அரசியல் என சில உண்டு. ஒரு நாயின் வரம்புக்குள் இன்னொரு நாய் வராது. ஒரு நாள் குரைத்தால் மட்டுமே மற்ற நாய்கள் குரைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் பிச்சைகாரர்களை பார்த்து குரைக்கும் - அல்லது போலீஸ்காரர்களை. இரவில் ஒவ்வொரு நாய்க்கும் ஒரு இடம் உண்டு. வெகு அரிதாக புணர்ச்சியில் இருக்கும் போது மற்ற நாய்கள் விலகி நிற்கும். யாரும் அவைகளுக்கு உணவிடுவதில்லை. கிடைத்தை - குப்பை தொட்டியிலும் அருகில் உள்ள கடைகளின் கழிவுகளில் இருந்து உண்டு வாழ்கின்றன. தெருவில் யாராவது பணக்கார நாய்களை கையில் பிடித்து கொண்டு நடப்பார்கள். அந்த நாய்கள் இவைகளை பார்த்து குரைக்கும். இவை பதிலுக்கு குரைக்காமல் விலகி போய்விடும். ரொம்ப வரம்பு மீறினால் - 2 அல்லது 3 நாய்கள் சேர்ந்து பணக்கார நாயை பார்த்து குரைத்து ஒரு வழி செய்துவிடும் - நாயை கூட்டி கொண்டு செல்பவர் பாடுதான் - சண்டையை தவிர்க்க போராட வேண்டி இருக்கும். அடிப்படையில் அவைகளுக்கு கூட யாரிடம் மோதலாம் - எப்போது மோதலாம் என தெரிகிறது. எல்லை கோடுகள் தெரிகிறது. தேவைபடும்போது தன் எல்லைக்குள் வந்து குரைப்பவர்களை கூட்டு சேர்ந்து மோதி துரத்த தெரிகிறது.
புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்
புகைபிடித்தலை சினிமாவில் கட்டுபடுத்துவதன் மூலம் நாட்டுமக்களை திருத்தலாம் என நினைக்கும் புத்திசாலிதனம் சரி - அப்புறம் எதற்க்கு புகையிலை பொருள்கள் விற்பனை. அரசாங்கம் விற்பனையை நிறுத்தலாமே. அது இன்னும் வேகமாக திருத்துமே...அந்த விவசாயிகளை என்ன பண்ணலாம்...?? புகையிலை பொருட்கள் நிறுத்துவதால் வரும் பொருளாதார தேக்கத்தை என்ன செய்யலாம்... வேறு ஏதாவது சரிசமமான பயிரிடுதலை சொல்லிதரலாம் - யார் வேலை அது..? இன்னும் மலைகாடுகளில் பெரிய தலைகள் கஞ்சா பயிரிடுகிறார்களே அது யார் பார்ப்பது..? மது அருந்துவது தவறு - நல்ல விஷயம்தான். மதுகடைகளை முழுவதுமாக நிறுத்தலாமே. மாத மாதம் இலக்கு வைத்து மதுக்கடை வசூலை அதிகரிப்பது யார்..! அதனை நிறுத்தினால் மதுக்கடைகளில் வேலை செய்பவர்கள் வேலை இழப்பார்களே - அவர்களுக்கு யார் வேலை தருவது...! அந்த 5 வருட கிராம தன்னிறைவு பணியில் ஈடுபடுத்தினால் செய்வார்களா..!! இதில் புள்ளிவிவர விஷயம் வேறு - போன பொங்கலுக்கு 6 கோடி ரூபாய் விற்பனை.. புதுவருட விற்பனையை விட அதிகம்.. அட அட.. என்ன ஒரு சந்தோஷம்...! சினிமாவில் மது அருந்துதலும் புகைபிடித்தலும்தான் மக்களை கெடுக்கிறது என யோசிக்கும் புத்திசாலிகள் - கொஞ்சமாவது தரையில் நின்று யோச்சித்தல் நலம். அரசின் பொருளாதாரத்தில் ஒரு பங்கு மையமாக கொண்ட புகையிலை மற்றும் மதுவை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க முற்படுவது - நல்ல விஷயமானாலும் அதற்கான வழிமுறைகள் கண்துடைப்பாகவே இருக்கின்றன.
5 வருட திட்டம்
5 வருடங்களில் கிட்டதட்ட எல்லா கிராமங்களும் தன்னிறைவு பெற்றுவிடும் என தமிழக உள்துறை சொல்கிறது. இதன் திட்டத்தை பற்றி அடிப்படை அறிவுடன் யோசித்தால் - முதலில் எல்லா கிராமங்களும் அருகில் உள்ள சிறு நகரங்களுடன் பாதைவழி இணைக்கபட வேண்டும். இன்னும் சாலை விஷயமே தெரியாத கிராமங்கள் சில நூறு உண்டு. சாலை போக்குவரத்து வசதிகள் வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் - விளை பொருட்களை விற்க சந்தைகள் அதிகமாக வேண்டும் - மருத்துவ வசதிகள் வேண்டும். ஆரம்ப கல்வி மற்றும் வாழ்க்கை கல்வி கிடைக்க செய்ய வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிகள் வேண்டும். இதற்கெல்லாம் தெளிவான திட்டம் வேண்டும் - செயல்படுத்த ஊழல் இல்லாத அதிகாரிகளும் ஆட்களும் வேண்டும் - ஓவ்வொரு 6 மாதமும் திட்ட மறு-மதிப்பீடு மற்றும் பணிகள் எத்துனை சதவீதம் நிறைவேறி உள்ளது எனவும் பார்க்கவேண்டும். அவற்றை பொது மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் - நாளிதழ்களும் இணையமும் இருக்கிறதே. இயற்கை விவசாயம் மற்றும் வல்லுனர்களின் யோசனைகளை கேட்கலாம். திட்டமிடபட்ட செலவு, ஆன செலவு, மிச்ச தொகை, மனித முயற்சி திட்டம் மற்றும் விவரங்கள் திட்டத்தின் நிலையை பற்றிய தகவல்கள் கொடுக்கும். இன்னும் நிறைய இருக்கிறது - இது ஏதும் செய்யாமல் கலர் டீவி இருக்கும் ஓட்டு வங்கி எல்லாம் தன்னிறைவு பெற்றவை என்ற கருத்தோடு தமிழக உள்துறை இருக்குமாயின் - முன்னேற்றம் என்பது வெறும் கனவுதான்.
ஆணுறையும் ஜெயில் கைதிகளும்
அரசாங்கம் ஜெயில் கைதிகளுக்கு ஆணுறை வழங்க இருப்பதாகவும் அது நிச்சயம் ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக இல்லை எனவும் அது எயிட்ஸ் பாதுகாப்புக்குதான் எனவும் - சுத்தமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஒரு வகையில் இது நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம். உடலுறவு நிச்சயம் இருக்கும் எனவும் - அது ஓரின சேர்க்கையாக தான் இருக்கும் எனவும் (அல்லது இதற்க்காவும் அரசாங்கம் ஏதாவது செய்யுமா..) அரசாங்கம் ஒத்து கொள்கிறது - ஆனாலும் ஆவணமாக இல்லை. சுகாதாரமில்லாத உறவு நோய்பரப்பும் அதனை தடுக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம். மற்றபடி ஆண்கள் சிறை மட்டுமல்லாது பெண்கள் சிறையும் உண்டு. அங்கும் மனிதர்கள் உண்டு. அங்கும் உணர்வுகள் உண்டு - என்ன செய்யலாம் என பேச யாரும் கிடையாது (பெண் ஓரின சேர்க்கைக்கு காப்பு உறை தேவையில்லை என்பது உண்மை எனினும்)- (இன்னும் சில பேரின் கருத்து - சிறையில் கிடைக்காத வசதிகள் கிடையாது - அரசாங்கம் கோழிகறி கூட கொடுகிறது - இருக்கலாம் - தண்டனை என்பது எல்லா மனித உரிமைகளையும் பறிப்பது அல்ல - தனிமைபடுத்தி குற்றத்தை புரிந்து கொண்டு மனதை திருத்துவது). பொதுவாக ஜெயிலில் ஆண் ஓரின சேர்க்கை பற்றி (அரை மனதாக) மனித உரிமை பேசப்படுகிறது - இந்த வகையில் ஓரின சேர்க்கை குற்றம் அல்ல எனவும் - சுகாதாரமாக இருப்பது நல்லது எனவும் அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. எனினும் பெண் ஓரின சேர்க்கை இன்னமும் ஒரு கவர்ச்சி விஷயமாக இருக்கிறது - அதன் உணர்வுகள் அல்லது தேவைகள் புரிய எந்த அமைப்பும் முழுமையாக கிடையாது - எல்லாரும் முனுமுனுக்கிறார்கள் தவிர செயல்பட யாரும் இல்லை - தனிமனிதர்கள் ஏதும் செய்ய முடியாது. சிறை பெண்களுக்கு உணர்வுகளே இருக்காது என நினைக்கிறார்களா, அல்லது சுகாதாரம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா - அல்லது இந்தியாவில் பெண் ஓரின சேர்க்கையே எல்லாம் கிடையாது என்ற கலாச்சார குழப்பமா..!!! பெண்களுக்கான அடிப்படை பாலியல் சுகாதாரம் பற்றி சொல்லிதர யார் உண்டு. யார் கேட்பார்கள்..!!!
Sunday, March 23, 2008
காகித பூக்களின் காலம்...
வசந்த காலத்தை வரவேற்க்கும் வண்ணங்களின் பண்டிகை கொண்டாடபட்டு கொண்டிருக்கிறது. நான் வசிக்கும் பகுதியில் வட இந்திய குடும்பங்கள் உண்டு. 2 நாட்களாக அவர்களின் கொண்டாட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். பொதுவாக வட இந்தியர்கள் இத்தகைய பண்டிகைகளை விமர்ச்சையாக கொண்டாடுகிறார்கள். பிள்ளையார் சதுர்த்தியும் தீபாவளியும் போல. தென் இந்தியாவில் மட்டும்தான் இவை அரசியலாக்க படுகின்றன.
அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.
வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.
அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.
வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.
Wednesday, March 12, 2008
எல்லாரும் மன்னரே..
150 திரைப்படம் நடித்த விஜயகாந்த் முதல்வராக ஆசைப்படுவதால், 1000 திரைப்படம் நடித்த மனோரமாவும் பிரதமர் ஆக ஆசைபடலாமா என கேட்டிருக்கும் அற்புத சிந்தனைசாலியான ராமராஜன் இன்னும் 1000 ஆண்டுகள் வாழ எல்லாரும் கோவில்களில் யாகம் பூஜை எல்லாம் செய்யலாம் - அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமை இதற்க்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். அரசியல் பதவிகள் என்பது ஒரு உழைப்பு என்பதும், பொருளாதார மற்றும் சமூக இடர்பாடுகளை கடக்க வேண்டும் என்பதும், மக்களை சென்றடைய கருத்துகளும் முயற்சியும் தேவை என்பதும் புரியாமல் வெறும் திரைப்பட அனுபவ அடிப்படையிலேயே பதவிகள் அமைவது போல மக்களிடையே பேசும் அதி புத்திசாலிகளை என்ன செய்யலாம்.. எல்லா கட்சியிலும் இப்படி சில சிந்தனாசாலிகள் இருக்கதான் செய்கிறார்கள். நம் மக்களை ஒன்றும் செய்ய முடியாது - இதே ராமராஜன் ஓரிரண்டு போராட்டங்கள் நடத்தி இரண்டு முறை சிறை சென்று விட்டால் (அதற்கெல்லாம் அவருக்கு தைரியம் கிடையாது என்பது வேறு விஷயம்) - மக்கள் அவரையும் போராளி ஆக்கிவிடுவார்கள் - அதுவும் வெறும் போராளி அல்ல.. கழக போராளி.. !
Monday, November 28, 2005
கற்பு...
கற்பு... கடந்த சில வாரங்களாக ஜோதிட சிகாமணி, ஆவிகள் உலகம், சிறுவர் மலர் தவிர ஏறக்குறைய எல்லா நாள் வார மாத பத்திரிக்கைகளும் விவாதித்து வரும் விஷயமாகிவிட்டிருக்கிறது. கொஞ்சம் கவனித்து பார்த்தால் பொதுவில் எல்லோரும் தங்களுடைய கருத்துகளை, தங்களின் சுயம் சார்ந்த கருத்துகளை சொல்வது பிடிபடுகிறது. இதில் பொது கருத்து எதுவும் இல்லை. நான் தான் சமூகம் என்ற உணர்வு அவர்களில் கருத்து வெளிப்படும் பாங்கில் தெரிகிறது. மெல்ல மெல்ல பூனைகள் சாக்கில் இருந்து வெளிவருகின்றன. நிஜமான சமூகத்தில் முகம் முகமூடிகளின் அலங்காரமின்றி மெல்ல தெரிகின்றது. "நாங்கெல்லாம் ஒழுக்கசீலர்கள்..." என்ற அரிதாரபூச்சு மெல்ல கலைகிறது. ஒழுக்கம் என்பதின் தெளிவு பற்றிய அறிவு சமுதாயத்தின் பல்வேறு கலாச்சாரங்களில் இருந்தும் வெளிப்படுகிறது. இதுதான் உண்மை என்பதை மனமார்ந்து ஒத்து கொள்வதில் என்ன தயக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையை பற்றிய ஒரு சர்ச்சையில் எல்லாரும் கொஞ்சம் குளிர்காய்ந்து கொள்கிறார்கள். சல்மா சொல்லியிருந்தது போல " பிரச்சனை கற்பு அல்ல.. சொன்னது யார் என்பது தான்". சர்ச்சைக்குரிய விஷயங்களை சொல்லும் ஆண்கள் போல சர்ச்சைகுரிய விஷயங்களை பேசும் பெண்களை சமூகம் கவனிப்பதில்லை. நிறம் என்றும் வேறுபட்டே இருக்கிறது. கருத்துக்களை விட சொன்னது யார் எந்த சாதி, எந்த மதம் ஆணா பெண்ணா என்ற கவனிப்பில் கருத்தின் உணர்வு மட்டுபடுகிறது. திரைப்படம், மருத்துவம், சட்டம், மற்றும் பெண் இயக்கங்கள் மெல்ல மெல்ல சுயம் பற்றிய புரிதலை, வெளிபடையாக சொல்கின்றன. ஞானி, பாரதிராஜா, டாக்டர் ஷாலினி மற்றும் பலர் பாராட்டுக்கு உரியவர்கள். இவர்களின் கருத்துகளை விட கருத்து சொல்லபட்ட விதமும், என் கருத்து என்ற கர்வமும், தைரியமும் பாராட்டுக்கு உரியவை. சானியா மிர்சாவின் பின்வாங்கலில் மதம் சார்ந்த பயம் தெரிகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பாலுறவு தெளிவு போன்றவை சமுதாயம் வளர வளர சொல்லி கொடுக்கபட வேண்டியவை என்பதில் ஒரு பொதுவான கருத்து இருப்பது நல்லது.
Subscribe to:
Posts (Atom)