அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts
Wednesday, March 25, 2009
பகடியும் பாலியலும்...
பகடி கவிதைகள்/பாடல்கள் பற்றி ஜெயமோகன் சென்ற வாரம் எழுதியிருந்தார். படிக்கும் போது இத்தகைய பகடி பாடல்கள், கவிதைகள் மற்றும் கதைகளை எங்கள் ஊரிலும், சில பள்ளிகாலங்களிலும் கடந்து வந்தது நினைவு வந்தது. பொதுவாக இவற்றை கெட்ட வார்த்தை விஷயம் என்று வகைப்படுத்திவிடும் அளவுக்கு அதில் பாலியல் கலந்திருக்கும். மற்றபடி வார்த்தைகளை மாற்றி போட்டு ஒருவரை ஏற்றிவிட்டும் பாடுவார்கள் அல்லது கேவலமாக இறக்கி விட்டும் பாடுவார்கள். சில தெரிந்த கதைகளை எடுத்து அதில் கலாட்டா செய்யபடுபவரின் கதாபாத்திரத்தை சேர்த்து சிரிக்க சிரிக்க கதை சொல்வார்கள். உதா: அர்ஜீனன் காதல் கதையில் ஒரு சலவை தொழிலாளி. பாலியல் இல்லாத கதை பாடல்களும் உண்டு என்றாலும் பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிக எதிர்பார்ப்பும் ஆரவாரமும் இருக்கும். இது கரகாட்டம் ஆடும் கூத்து முதல், ஞாயிற்று கிழமை மதிய வேப்ப மரத்தடி ஜமா வரை ஒன்றுதான். பிரபல பாடல்களில் ஆபாச பகடிகள்தான் எல்லாரையும் கவரும் விஷயம்...இது இப்போதெல்லாம் சில இணையவழி காம தளங்களில் சல்லீசாக கிடைக்கிறது...நமுட்டு சிரிப்புடன் ரசித்து கொள்ளலாம்.. ஆபாச பகடி பாடல்கள் புனைவதையும், புனைந்த பிரபலங்கள் பற்றியும் ஜெயமோகன் எழுதியுள்ளதை படிக்கும்போது கொஞ்சம் அந்த விஷயங்களை தேடி பிடிக்க வேண்டும் போல இருக்கிறது - பார்க்கலாம் யாராவது வைத்திருப்பார்கள். ஜெயமோகன் சொல்வதை போல பகடி - கருத்தியல் அதிகாரத்துக்கு எதிரான ஒரு சமூகத்தின் எதிர்வினை என கொள்ளலாம். புனிதம், உன்னதம் எனப்படும் விஷயங்கள் கேலிக்குறியதாகி ஒருவகையான பகுத்தறிவு சிந்தனை வலுபெற்று - அதன் வழியே பகடி வலிமையாகிறது. பள்ளி கூட காலத்தில் ராமாயண - மகாபாரத கதைகளையும், கதை மாந்தர்களையும் ஆபாச பகடி பாடல்களில் கேட்டு அதிர்ச்சியாகியிருந்தாலும் - பின்னர், அந்த பாடல்களில் சாத்தியங்களை யோசிக்கவும் வைத்திருக்கிறது. எல்லா கொள்கைகளையும், அடிப்படை மத சமூக நம்பிக்கைகளையும் அதிகாரங்களையும் பகடி கவிழ்த்து விடுகிறது. சில வெகுஜன மற்றும் பல சிறுபத்திரிக்கைகள் அரசியல் சமூக நிஜங்களை பகடியாக்குவது ஒரு நல்ல விமர்ச்சன ரீதியான முன்னேற்றம். வலிமையான எதிர்வினை, தலித் வாழ்க்கை மற்றும் மாற்று சிந்தனை போல, பகடி வழி பாலியலும் இருந்தாலும் - பாலியல் விஷயங்கள் மட்டுமே பகடி என்பது போல தோற்றம் பெற்று விட்டதை மாற்ற முயற்சிக்கலாம்.இதனை பற்றி தெளிவான விஷயங்களும், மேலும் படைப்புகளும் வந்தால் மட்டும் அது சாத்தியம்..
Monday, April 28, 2008
பாலியல் மாநாடு
சென்னையில் நடந்த பாலியல் மாநாடு ஒரு நல்ல ஆரம்பம் - டிவியில் சொல்லபடும் குழப்பமான பாலியல் மருத்துவ விஷயங்களைவிட - ஒரு தைரியமான (அதுவும் ஒரு மருத்துவம் தானே.. ) மாநாடு நடத்தி - சமுதாயத்தின் நிறைய குழப்பங்களை தெளிவாக விளக்கிய கருத்து அரங்கங்கள் மற்றும் உரையாடல்கள் நன்றாக இருந்தன. லேகியம் விற்பவர்கள் இதனை எதிர்த்து கொண்டுதான் இருப்பார்கள். இன்றைய சூழலின் மிக முக்கியமான மருத்துவபகுதியாக பாலியல் இருக்கிறது. சரியான கருத்தறிவும் இன்றைய ஊடகங்களும் இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். மக்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என நிறவாரியாகவே பாலியலை அறிந்து கொள்ளும் காலம் மாறி - சரியான முறையில் ஒரு கல்வி அமைய - அதன் காரணமான குற்றங்கள் குறைய - பாலியல் மாநாடு வரும்காலத்தில் ஒரு கருத்துள்ள ஆரம்பமாக இருக்ககூடும்...
ஆணுறையும் ஜெயில் கைதிகளும்
அரசாங்கம் ஜெயில் கைதிகளுக்கு ஆணுறை வழங்க இருப்பதாகவும் அது நிச்சயம் ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக இல்லை எனவும் அது எயிட்ஸ் பாதுகாப்புக்குதான் எனவும் - சுத்தமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஒரு வகையில் இது நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம். உடலுறவு நிச்சயம் இருக்கும் எனவும் - அது ஓரின சேர்க்கையாக தான் இருக்கும் எனவும் (அல்லது இதற்க்காவும் அரசாங்கம் ஏதாவது செய்யுமா..) அரசாங்கம் ஒத்து கொள்கிறது - ஆனாலும் ஆவணமாக இல்லை. சுகாதாரமில்லாத உறவு நோய்பரப்பும் அதனை தடுக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம். மற்றபடி ஆண்கள் சிறை மட்டுமல்லாது பெண்கள் சிறையும் உண்டு. அங்கும் மனிதர்கள் உண்டு. அங்கும் உணர்வுகள் உண்டு - என்ன செய்யலாம் என பேச யாரும் கிடையாது (பெண் ஓரின சேர்க்கைக்கு காப்பு உறை தேவையில்லை என்பது உண்மை எனினும்)- (இன்னும் சில பேரின் கருத்து - சிறையில் கிடைக்காத வசதிகள் கிடையாது - அரசாங்கம் கோழிகறி கூட கொடுகிறது - இருக்கலாம் - தண்டனை என்பது எல்லா மனித உரிமைகளையும் பறிப்பது அல்ல - தனிமைபடுத்தி குற்றத்தை புரிந்து கொண்டு மனதை திருத்துவது). பொதுவாக ஜெயிலில் ஆண் ஓரின சேர்க்கை பற்றி (அரை மனதாக) மனித உரிமை பேசப்படுகிறது - இந்த வகையில் ஓரின சேர்க்கை குற்றம் அல்ல எனவும் - சுகாதாரமாக இருப்பது நல்லது எனவும் அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. எனினும் பெண் ஓரின சேர்க்கை இன்னமும் ஒரு கவர்ச்சி விஷயமாக இருக்கிறது - அதன் உணர்வுகள் அல்லது தேவைகள் புரிய எந்த அமைப்பும் முழுமையாக கிடையாது - எல்லாரும் முனுமுனுக்கிறார்கள் தவிர செயல்பட யாரும் இல்லை - தனிமனிதர்கள் ஏதும் செய்ய முடியாது. சிறை பெண்களுக்கு உணர்வுகளே இருக்காது என நினைக்கிறார்களா, அல்லது சுகாதாரம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா - அல்லது இந்தியாவில் பெண் ஓரின சேர்க்கையே எல்லாம் கிடையாது என்ற கலாச்சார குழப்பமா..!!! பெண்களுக்கான அடிப்படை பாலியல் சுகாதாரம் பற்றி சொல்லிதர யார் உண்டு. யார் கேட்பார்கள்..!!!
Sunday, March 23, 2008
ஆட்டமும் பின்புலமும்..
சாருவின் ஒரு சமீபத்திய உரையாடலில் - தற்போதைய டெலிவிஷன் நடன நிகழ்ச்சிகளை பற்றி - ஒரு சமுதாய மட்டதுக்கான செக்ஸுவல் பேண்டஸி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பற்றி கொஞ்சம் இணையத்திலும் ஆராய்ந்தபோது ஒரு சுவரஸ்யமான மனோதத்துவ விஷயம் கிடைத்தது. பொதுவில் விசுவல் மீடியா என சொல்லபடும் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வகை பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் போய் சேருகிறது - அதிலும் பெரும்பாலும் ஆண்கள் - அதன் சதவீதத்தில் 60% பெண்கள். சாதாரணமாக நாம் பார்க்கும் பெண்கள் அல்லது கதாபாத்திரங்களை - கொஞ்சம் உடல் ரீதியாக கற்பனை செய்து - அதன் மூலம் ஒரு விதமான சுகம் அடைதல் ஒரு மனோவியாதி - ஆனால் கொஞ்சம் சாத்வீகமாக மனோவியாதி. இது நிறைய பேருக்கு இருந்தாலும் சமுதாய கட்டுபாடுகள் அவற்றை கொஞ்சம் மட்டுபடுத்துகிறது. கவனித்துபார்த்தால் இந்த நடன நிகழ்ச்சிகளில் வருபவர்கள் எல்லாம் - சின்னதிரை நாடக அல்லது சிறு நடிகர்கள். சினிமா நடிகர்கள் அல்லது நடிகைகள் - சினிமாவின் நடனங்கள் பாடல்கள் மூலம் சாதாரண ரசிகனின் உள் எண்ணங்களை தூண்டுகிறார்கள். அவர்களின் மேல் வருவதை விட இழுத்து போர்த்தி நடிக்கும் சிறு நடிகர் நடிகைகள் மற்றும் சின்னதிரை நடிகைகள் மேல் சாதாரண ரசிகனுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அந்த உடல் ரீதியான ஈர்ப்பை இத்தகைய நடன நிகழ்ச்சிகள் தீர்த்து வைக்கின்றன. உடைகள், மேடை அமைப்பு, பாடல் விதம், ஆடும் விதம், இசை அதிர்வுகள் ஆகியவை ஒரு வகையான ரெக்கார்டு டான்ஸ் அனுபவத்தை சாதாரண ரசிகனுக்கு கொடுக்கின்றன. ஒருவித ரகசிய கவனிப்பு நிகழ்கிறது என தெரிந்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பெண்ணுடை அணியும் ஆண்கள் ஒரு விதமான கவர்ச்சி பார்வையுடன் கவனிக்கபடுகிறார்கள் (உதா: சில உடனடி மேடை சிரிப்பு நிகழ்ச்சிகள்) - அவர்களை கமெண்ட் செய்வது நடுவராக உட்கார்ந்திருப்பவர்களே.. ஒருவகையான கிராஸ் டிரெஸிங் கவர்ச்சி என இதனை கொள்ளலாம் (இதிலும் பெண் மட்டம்தட்டபடுவதுதான் பின்புலத்தில் இருக்கிறது).. அட சிரிப்பு நிகழ்ச்சிதானே - விட்டுவிடலாம் என சிலர் சொல்கிறார்கள். நடன நிகழ்ச்சிகள் சினிமா பாடல்களை முன்னிலையாக கொள்வதில் - உண்மை சினிமா காட்சியில் உள்ள காமிரா, ஒளி மற்றும் இதர விஷயங்களை ஈடு செய்ய மேலும் உடல்ரீதீயான அசைவுகள் புகுத்தபடுகின்றன. எல்லா இந்திய சினிமா பாடல் காட்சியின் அசைவுகளும் காமத்தை அடிப்படையாக கொண்டவை - அதிலும் இந்த புகுத்தபட்ட அசைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது உண்மை. எதுவும் தவறில்லை. ஆனால் புரிந்து கொள்ளுங்கள் - இது ஒருவகையான செக்ஸுவல் பேண்டஸி என்பதை.
Friday, March 21, 2008
குறியின் அளவு
எங்கள் அலுவத்தின் ஒரு பிரிவு (துரதஷ்டவசமாக நான் இருக்கும் பிரிவு) சென்னைக்கு அப்பால் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமத்துக்கு குடி மாற்றபட்டு உள்ளது. தனியாருக்கு சொந்தமானதால் அருகில் எந்த சாப்பாடு கடைகளும் கூட கிடையாது. டீ குடிக்க கூட 15 நிமிடம் நடக்க வேண்டும். சென்ற வாரத்தில் ஒரு நாள் சூடு தாங்காமல் இளநீர் குடிக்க ரோட்டு பக்கம் வந்து நின்று கொண்டிருந்தபோது இளநீர் கடை பையனுக்கும் ஒரு (படித்தவர் போல தோன்றிய) வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது. இளநீர் விலை பற்றிய விவாதமாக தொடங்கியது - ஒரு கட்டத்தில் அவர் - 'இப்படி அதிக விலை சொன்னால் கல்யாணத்துக்கு பிறகு உன் குறி சிறுத்து விடும்' என சொல்ல - பின் என்ன நினைத்தானோ அந்த பையன் அவர் கேட்ட விலைகே கொடுத்துவிட்டான். சில நாட்களுக்கு முன்பு நான் படித்த நளினி ஜமீலாவின் மற்றும் சாருவின் உரையாடல் தொகுப்பான பாலியல் என்ற நூலின் சில பாகங்களை நான் நினைவு கூர்ந்தேன். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு பற்றிய குழப்பங்களை கொண்டிருக்கிறார்கள் - மருத்துவ ரீதியான சில மனோதத்துவ ஆய்வுகளும் அதனை உறுதி செய்கின்றன. போதாகுறைக்கு டிவி டாக்டர்கள். நல்ல செக்ஸ் என்பது உடல் உறுப்புகளின் அளவுகளை அடிப்படையாக கொண்டது என்பது ஒரு மூட நம்பிக்கை. படித்தவர் படிக்காதவர் என எல்லாரிடமும் இந்த குழப்பம் இருக்கிறது. செக்ஸ் என்பது வெறும் உடல் உறவு கிடையாது என்கிறார் ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளி என்ற நினைப்பில் இருந்து விலகி, செக்ஸ் என்பதை தொழில் முறை அனுபவமாக உணர்ந்தவர் என்ற நிலையில் அவர் கருத்து மிகவும் ஏற்று கொள்ளதக்க ஒன்று. உள்ளம் பகிர்தலின் அடுத்தநிலை உடல் பகிர்வு. உள்ளம் பகிர்தலே முழுமையாக இல்லாத சமுதாய அமைப்பில் - திரும்பிய இடம் எல்லாம் அவசர கோல கல்யாணங்களும் மாதா மாதம் நீளும் விவாகரத்து விவகாரங்களும். இந்த லட்சணத்தில் செக்ஸ் கல்வி வேண்டாம் என்ற கோஷம் வேறு. இதற்கு பதில் எல்லாரும் காட்டு மிராண்டிகளாகவே இருந்திருக்கலாம்.
Monday, November 05, 2007
செக்ஸ் கல்வி
பெரும்பாலருக்கு செக்ஸ் கல்வி பற்றிய அறிவு என்பது புஜியம் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பேசும் பெற்றோரை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. செக்ஸ் கல்வி என்பது எப்படி செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல - அதல்லாம் சொல்லி கொடுத்து வருவது இல்லை. முறையான செக்ஸ் என்ன, பாதுகாப்பு என்ன, சுயம் அறிதல் என்ன, சுகாதாரம் என்ன, உடல் உறுப்புகள் என்ன என்பதனையும் ஆணுக்கு பெண் பற்றியும், பெண் ஆண் பற்றியும் ஒரு அறிவும் கொடுப்பதுதான் செக்ஸ் கல்வி. கேட்டால் அதுதான் டிவியும் சினிமாவும் சொல்லி கொடுக்கிறதே என்கிறார்கள் - மார்பும் இடுப்பும் குலுக்கி ஆடும் ஆட்டமும், கட்டி பிடித்து உரசி கொள்வதும்தான் செக்ஸ் என்றால் - குழந்தை பிறப்பு என்பது கொக்கு கொண்டு வந்து போடும் விஷயம் என்ற அளவில்தான் செக்ஸ் அறிவு மக்களுக்கு இருக்கிறது என்று பொருள். 8ஆம் வகுப்பில் உடல்கூறு கல்வி என்று ஒரு விஷயம் அறிவியலில் இருக்கிறது - பல வாத்தியார்கள் அதனை கற்பிப்பதில்லை. செக்ஸ் பெரும்பாலருக்கு முறையற்ற வழியில்தான் அறிமுகம் ஆகிறது - தெளிவனா அறிவு இல்லாமலேயே , பல பெண்கள் ஆர்கஸம் என்றால் என்ன என்று தெரியாமலேயே, பெறும் பாலான ஆண்கள் தங்கள் திருப்தி அடைந்தவுடனே தூங்கி... குழந்தை பெற்றும் கொள்கிறார்கள் - அட ஏதாவது படித்தால்தானா ஏதாவது முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் - காம சூத்திரா புத்தகம் வாங்க வெட்கபடுகிறவர்கள், முக்குகடையில் சிவப்பு நாடாவும் மஞ்சள் நிலவும் வாங்குகிறார்கள். எது செக்ஸ் என்பதிலேயே குழப்பம் இருப்பதாக படுகிறது எனக்கு. செக்ஸ் உடம்பு கிடையாது - ஆரோக்கியமான மனதுதான் என்றால் யாருக்கும் புரிவதில்லை. உடல் உறுப்புகள் வெறும் எலும்பும் சதையும்தான் - மனசு ஆரோக்கியமான செக்ஸால் சூழப்படும்போதுதான் அது முழுமையான செக்ஸை கொண்டுவருகிறது. மனசு இல்லாத வெறும் கிளர்ச்சி என்பது ஒரு வகை வன்முறை. இந்த லட்சணத்தில் முறையான ஒரு அறிவு கொடுக்க தடை விதித்து சங்கம் வைக்கிறார்கள் - எதை அல்லது யாரை பாதுக்காகிறார்கள் என்றே தெரியவில்லை. கலாச்சார பாதுகாப்பு கடை விரித்து தெருவில் போகும் பெண் புடவை விலகினால் கூட வெறித்து பார்க்கும் அறிவு இல்லாத எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள். பெண்ணின் மாத பிரச்சனையை கூட செக்ஸாக கருதும் அளவுக்கு - ஒரு நாப்கின் வாங்க கூட ஆண்கள் அதிகம் இல்லாத மருந்து கடையை நாடும் அளவுக்கு குழப்பம் இருக்கிறது. வாய் கிழிய பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை - முதலில் செக்ஸ் கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் அதை பற்றிய கருத்துகள் வரட்டும். ஆரோக்கியமான உடல் நலமும் மன நலமும் வேண்டும் என்றால் எதுவும் முறையாக தெரிந்து கொள்ளட்டும். பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் - வெறும் வியாபாரத்துக்காக மோதவிடுதலில் யாருக்கும் நல்லது இல்லை.
Sunday, June 18, 2006
சில புத்தகங்களும் சில கருத்துகளும்...
சமீபத்தில் ஒரு வார இதழில் எழுத்தாளர் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் படித்த சமீபகால புத்தகங்களில் அயல் நாட்டு கவிஞர்கள் எழுதிய காமம் சார்ந்த கவிதைகள் பற்றி சொல்லியிருந்தார். நானும் சில கவிதைகளை இணையத்தில் படித்து இருக்கிறேன்.. கவிதை நயமும், மென்மையான காமமும் சொல்லும் அற்புதமான கவிதைகள்.. சிலவற்றை மொழிபெயர்க்கவும் முயற்சித்து கொண்டு இருக்கிறேன்.. இன்றைக்கு நம் சினிமா பாடல்களில் காமம் வெளிப்படையாக தெரிவது போல இருக்காது அந்த கவிதைகள்.. மென்மையானவை.. உணர்வுகளை பேசுபவை.. உணர்ச்சிகளை அல்ல. இங்கே எரொடிக் (Erotic) என்று சொல்லபடும் கருத்துகளை கொண்ட புத்தகங்கள் ரொம்ப கம்மி. எல்லாருக்கும் அந்த புத்தகங்களை ரெண்டு பக்கமும் 'பின்' அடித்த மை குடிக்கும் பக்கங்களை கொண்ட, எழுத்து பிழை உள்ள புத்தகங்கங்களின் முறையில் தான் தெரியும். சிறுகதை இலக்கியத்திலும்.. கட்டுரை இலக்கியத்திலும்..கவிதை இலக்கியத்திலும் இவை குவிந்து உள்ளது.. ஒரு காலத்தில் நான் தேடி தேடி படித்ததுண்டு.. இன்னும் படிப்பதும் உண்டு. ஒரு நல்ல வரிசை தயார் செய்து விட்டு இங்கே பதிப்பிக்கிறேன். கி.ராஜநாராயணன், புதுமைபித்தன், பாரதியார், ல.சா.ரா., கு.பா.ரா, தி.ஜானகிராமன், ரமேஷ்-பிரேம், சாருநிவேதா,சுகிர்தராணி இவர்கள் கொஞ்சமே .. இன்னும் லட்சம் பேர் உண்டு... நான் படித்தவர்களில் நன்கு நினைவு உள்ளவர்கள் இவர்கள்.. சொல்லாமல் விட்டவர்கள் இருந்தால் மன்னிகவும்... போன் செய்து திட்ட வேண்டாம்..
ஒரு முறை ஒரு நண்பனின் திருமணத்துக்காக புத்தகம் பரிசாக கொடுக்கலாம் என தீர்மானித்தோம். சென்னையின் மிக பிரபலமான புத்தக கடை அது.. தமிழுக்கான புத்தகங்கள் ரொம்ப கம்மி. தமிழ் புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது எரொடிக் புத்தங்கள் உள்ள பகுதி. ஆங்கிலத்தில் காமசூத்திரம் வாங்கினோம். அங்கே நின்றாலே பார்ப்பவர்கள் பார்வையில் ஒரு கிண்டல் தென்பட்டது. பில் போடும் இடத்தில் பெண் நமுட்டாய் சிரிக்கிறாள். பக்கத்தில் இருப்பவர் ஏதோ பாவ காரியம் பார்பவர்போல முகம் சுளிக்கிறார்.. ஆனால் எல்லாருக்கும் அங்கே உள்ள புத்தகங்களை பார்க்கம் புரட்டி படிக்க உள்ளே ஆர்வம் இருக்கிறது. .. தைரியம் இல்லை.. இவர்களால்தான் காமம் சரியான் முறையில் உணரபடவில்லை.. தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை. உபயோகபடுத்தி பார்பதில் தெளிவும், கொஞ்சம் கட்டுபாடும் போதும்..
கிடக்கிறார்கள்... அப்புறம் நான் 6 புத்தகங்கள் வாங்கினேன்.. 3 கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும்.. ஒரு சிறுகதைகளும் கொண்டவை. காமம் அடிப்படை உணர்வாக இருக்கிறது. காதலைவிட..காமமே உறவுகளில் மேலோங்கி இருக்கிறது.. ஒத்து கொள்வதில் மாறுபாடுகள் இருக்கலாம்.. சமூக சூழல், வளர்ப்புமுறை, சொல்லி கொடுக்கபட்டவை, மதம், வயது, வாழ்க்கை முறை, விருப்பு வெறுப்புகள்.. காரணங்கள் பலவாறு உண்டு....இயக்கத்தின் காலம் தொட்டு, மனித இனம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இதில் ஒன்றில்தான் என்பது என் கருத்து. தெளிவான காமம்.. தியானம் போன்றது.. ஒரு வகையில் ஆன்மூகம்.. நான் மட்டும் சொல்லவில்லை.. ஓஷோவும் சொல்கிறார்.. வாழ்கை பற்றி வாஸ்தியானர் சொன்னதை மெல்ல மெல்ல கதைகளில் ஒரு நீரோடை போல பாலகுமாரனும் சொல்கிறார்.. திரிகூட ராசப்பகவிராயர் சொன்னதை.. குறத்தி கவிதைகளில் உள்ளதை வைரமுத்துவும் வாலியும் சொல்கிறார்கள்.. எல்லாம் சொல்லி என்ன..? இங்கே எல்லா பூனைகளும் சைவ வேடம் தான்.
ஒரு முறை ஒரு நண்பனின் திருமணத்துக்காக புத்தகம் பரிசாக கொடுக்கலாம் என தீர்மானித்தோம். சென்னையின் மிக பிரபலமான புத்தக கடை அது.. தமிழுக்கான புத்தகங்கள் ரொம்ப கம்மி. தமிழ் புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது எரொடிக் புத்தங்கள் உள்ள பகுதி. ஆங்கிலத்தில் காமசூத்திரம் வாங்கினோம். அங்கே நின்றாலே பார்ப்பவர்கள் பார்வையில் ஒரு கிண்டல் தென்பட்டது. பில் போடும் இடத்தில் பெண் நமுட்டாய் சிரிக்கிறாள். பக்கத்தில் இருப்பவர் ஏதோ பாவ காரியம் பார்பவர்போல முகம் சுளிக்கிறார்.. ஆனால் எல்லாருக்கும் அங்கே உள்ள புத்தகங்களை பார்க்கம் புரட்டி படிக்க உள்ளே ஆர்வம் இருக்கிறது. .. தைரியம் இல்லை.. இவர்களால்தான் காமம் சரியான் முறையில் உணரபடவில்லை.. தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை. உபயோகபடுத்தி பார்பதில் தெளிவும், கொஞ்சம் கட்டுபாடும் போதும்..
கிடக்கிறார்கள்... அப்புறம் நான் 6 புத்தகங்கள் வாங்கினேன்.. 3 கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும்.. ஒரு சிறுகதைகளும் கொண்டவை. காமம் அடிப்படை உணர்வாக இருக்கிறது. காதலைவிட..காமமே உறவுகளில் மேலோங்கி இருக்கிறது.. ஒத்து கொள்வதில் மாறுபாடுகள் இருக்கலாம்.. சமூக சூழல், வளர்ப்புமுறை, சொல்லி கொடுக்கபட்டவை, மதம், வயது, வாழ்க்கை முறை, விருப்பு வெறுப்புகள்.. காரணங்கள் பலவாறு உண்டு....இயக்கத்தின் காலம் தொட்டு, மனித இனம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இதில் ஒன்றில்தான் என்பது என் கருத்து. தெளிவான காமம்.. தியானம் போன்றது.. ஒரு வகையில் ஆன்மூகம்.. நான் மட்டும் சொல்லவில்லை.. ஓஷோவும் சொல்கிறார்.. வாழ்கை பற்றி வாஸ்தியானர் சொன்னதை மெல்ல மெல்ல கதைகளில் ஒரு நீரோடை போல பாலகுமாரனும் சொல்கிறார்.. திரிகூட ராசப்பகவிராயர் சொன்னதை.. குறத்தி கவிதைகளில் உள்ளதை வைரமுத்துவும் வாலியும் சொல்கிறார்கள்.. எல்லாம் சொல்லி என்ன..? இங்கே எல்லா பூனைகளும் சைவ வேடம் தான்.
Saturday, January 21, 2006
மாறுபடும் பாலுணர்வில்...
சமீபகால சில குறிப்பிட்ட பாலுணர்வு கருத்துகணிப்புகளில், ஆர்வங்கள் பற்றிய பகுயில் ஒரு வேறுபாட்டை கவனிக்கின்றேன். முன்றைய கால ஆண்கள், கட்டுமஸ்தானமாக மீசையும் உடல் ரோமமுமாக இருந்ததை படித்திருக்கிறேன். பெண்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. தஞ்சையிலும், கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும், மேலும்பல கோவில் சிற்பங்களிலும் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என கண்டதுண்டு. இன்று கொஞ்சம் நிலவரம் மாறி வருகிறது. சமுதாய வாழ்க்கைமுறை இந்த மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. என் கருத்து தவறில்லை என்றால் கொஞ்சம் பெண் தன்மையுள்ள ஆண்களும், ஆண்தன்மையுள்ள பெண்களும் எதிர்பாலினரால் ஈர்க்கபடுவதாக கருத்துகளில் அறிகிறேன். மீசை இல்லாத, உடல் ரோமம் முற்றிலும் மழிக்கபட்ட, கொஞ்சமும் தலைசீவாத பெண்கள் போல அலையாயும் தலைமுடியும் கொண்ட ஆண்களை பெருநகரங்களில் காண்கிறேன். நளினமில்லாத, ஆண்பிள்ளைகளின் தன்மையான உடையலங்காரமும், ஆண்போல பேச்சும் ஒரு தலையான கருத்தும் கொண்ட பெண்களையும் காண்கிறேன். இதற்கு காரணங்கள் பல உண்டு எனினும் இவர்களில் பெண்களின் ஈர்ப்புகள் குறைந்த ஆதிக்கமனப்பான்மை உடைய எதிர்பாலினர்மேலும், ஆண்களின் ஈர்ப்புகள் அதிக ஆதிக்கமனப்பான்மை உடைய எதிர்பாலினர்மேலும் கொள்வதாக கருத்துகள் சொல்கின்றன. மருத்துவ ரீதியாகவும் இன்றைய தலைமுறையின் உடலமைப்பு உடல் அங்கங்களை கொண்டு கொஞ்சம் மாறுபட்டு வருவதாகவும் சில மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்காலத்தில் ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்பு அவன் வாகனத்திலும் பண வசதியிலும் சொல்லப்பட்டு, பெண் பற்றிய கணிப்பு உடல் அங்கங்களின் வனப்பிலுமே சொல்லபட்டு இருப்பதாக ஒரு மனோதத்துவ மருத்துவர் அஜ்தக் தொலைகாட்சி பேட்டியில் சொல்லிகொண்டிருந்தார். ஆண் போல பெண்ணும், பெண்போல ஆணும் கருதி கொள்ளும் வேறு ஒரு உலகத்துக்குள் இது மெல்ல மெல்ல நாசுக்கான நாகரீகமாக கருதபட்டு சமுதாய வட்டதுக்குள் உள்ளீடு செய்யபட்டு வருகிறது. மேலும் விவாதங்கள் வரவேற்க்கபடுகின்றன.
Subscribe to:
Posts (Atom)