அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Tuesday, March 17, 2009

கபி கபி...

என் மொபைல் போனின் காலர் டியூன் ("கைபேசியின் அழைப்பாளர் கேட்கும் இசை") 1976ல் வந்த ஒரு இந்தி திரைப்பட பாடல். "ஏன் இந்தி" என தார் டின் கையில் எடுப்பார் எவரும் இருக்கமாட்டார்கள் என நம்புகிறேன். அந்த பாடல் முகேஷ் சந் மாத்தூர் என்ற அற்புதமான பாடகரின் பாடல் - "கபி கபி" திரைப்படத்தில் இருந்து. இன்றைய இந்தி பாடல்கள் போல அதிரடி இசை இல்லாத காலம் அது. முகேஷ், முகமது ரபி, கிஷோர்குமார் என அருமையான பாடகர்கள் இருந்த காலம் அது. இன்றும் அந்த பாடல்கள் முன்னிரவு நேர அமைதியில் கேட்க சுகமானவை. சோகமானாலும், சந்தோஷமானாலும் - இந்தியும் உருதும் கலந்த அந்த பாடல்கள் அர்த்தம் கொண்டவையாக இருந்தன. அதே நேரத்தில் தமிழிலும் அதே வகையான பாடல்கள் இருந்ததை ரேவதியின் அப்பா சொல்லி கொண்டிருந்தார். அனுவும் நானும் விடிய விடிய பேசி கொண்டிருந்த சென்ற வருட கோடையில் எல்லாம் இந்த பாடல்கள்தான் என்னுடன் விழித்திருக்கும். ஒளி தகடுகள் கிடைக்கிறது இன்றும் எனினும் பெரும்பாலான பாடல்கள் பல்வேறு தகடுகள் சிதறி இருப்பதால் இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்வதே இலகுவாக இருக்கிறது. நல்ல இசை ரசிக்க மொழி அவசியம் இல்லை என்பது என் கருத்து. லாலாவிலோ, அல்லது தன்னன்னன்னாவிலோ எந்த பாடலையும் அதன் ரிதத்தையும் அனுபவித்து ரசிக்க முடியும். வாத்தியங்களை பற்றி கொஞ்சம் அறிந்திருந்தால் இசை ரசித்தல் கூடுதல் இனிமை. மொழி புரிந்து ரசித்தால் - ஆகா தேவ சுகம். என் பள்ளி நாட்களில் அப்பாவும் நானும் விவிதபாரதியில் கேட்டு கொண்டிருப்போம். டிவி கிடையாது. ரேடியோதான் உலகம். மறக்க முடியாத காலம் அது. வாய்ப்பும் விருப்பமும் இருந்தால் தமிழ் பாடல்கள் ரசிப்பது போலவே பழைய இந்தி பாடல்களையும் கேட்டு பாருங்கள். சமீபத்திய சந்தோஷம். என் அலுவலக நண்பர் ஒருவரும் அவருடைய மொபைல் போனின் காலர் டியூனாக பழைய முகேஷ் இந்தி பாடலை வைத்திருக்கிறார் - இது என் மொலைப்போன் காலர் டியூனால் வந்த மாற்றம். :-)