அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Wednesday, March 18, 2009
100வது நாள்..!!!
Tuesday, March 17, 2009
ஆரோக்கியமான நகைச்சுவை.
நம்மவர் மிக அருமையான ஒரு குணசித்திர வேடத்தை தந்தது. மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரு பிணம் - ஆனால் மிகவும் சிரிக்க வைத்த ஒரு பிணம். ஒரு காலத்தில் திலக நடிகர்கள் கூட தங்கள் படங்களுக்கு நாகேஷின் தேவை மிக அதிகம் என உணர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் கமல் மட்டுமே நாகோஷை சரியான முறையில் உபயோகபடுத்தி கொண்டார். சில ரஜினி படங்களும் உண்டு. சில திரைப்படங்களில் கொடூரமான ஆனால் கொஞ்சம் சிரிக்க வைக்கும் வில்லன் வேடங்களும் உண்டு. வேகமான - மற்றும் எதிர்வினை சார்ந்த நடிப்பும் வசன துள்ளலும் அவர் அடையாளங்கள். அது சார்லி சாப்ளின் மற்றும் ஜெர்ரி லூயிஸின் நடிப்பினை ஆழ்ந்து வாங்கி கொண்ட கவனங்கள். அன்பே வா, பாமா விஜயம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என வித்தியாசங்களை காண்பித்து இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி தாண்டி ஒரு இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்தவர் நாகேஷ். அது அவருக்கும் கே.பாலச்சந்தருக்கும் உள்ள இணக்கம். நடிகர்கள் ஜெமினிக்கும் தங்கவேலுவுக்கு ஒரு புரிதல் சார்ந்த நட்பு இருக்கும் - உதாரணம்: கல்யாண பரிசு. அத்தகைய புரிதல் எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் நாகேஷுக்கு இருந்தது. பல படங்கள் உதாரணமாக சொல்லலாம். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வைரமுத்து - தமிழகத்தின் சிரிப்பு இறந்து விட்டது என சொன்னார். மிகையாகாது. நல்ல நகைச்சுவை, வேகமான எதிர்வினை கொண்ட உடல் அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தேர்ந்த குரல் வளம் கொண்ட வசன உச்சரிப்பு, மேலை நாட்டு நாட்டிய வகை (சந்திரபாபு இதனை அற்புதமாக செய்வார்), அருமையான குணசித்திர நடிப்பு என பல்வகை அதிசயங்களை காட்டியவர் நாகேஷ். நிறைய பேசி கொண்டிருந்தோம். கொஞ்சம் படங்கள் வாங்கினோம். இன்னும் என்ன என்ன படங்கள் வாங்க வேண்டும் என பட்டியல் இட்டு கொண்டிருக்கிறோம். பார்க்க வேண்டும். தமிழில் நல்ல நகைச்சுவை இப்போதெல்லாம் காண கிடைக்காததாகி விட்டிடுக்கிறது.
Monday, March 16, 2009
தெய்வத்தால் ஆகாதெனினும்...
எம்.என். நம்பியார்
Monday, April 28, 2008
இன்னும் உண்டு வேலைகள்
நாய்களின் அரசியல்
நினைவு மறந்த மனிதர்கள்
இயற்கை விவசாயம்
கலர் பனியன் நினைவுகள்
கூட வரும் தோழர்கள்
Tuesday, April 01, 2008
நம்மை சுற்றிய உலகம்...
சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை.
செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு சென்று போலீஸ் மற்றும் தூதரக உதவியுடன் தன் மனைவியை மீட்டிருக்கிறார்.
செய்தி 2 - திருமணம் நிச்சயமான பிறகு கை தொலைபேசியில் காதல் உரையாடும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் இளமைக்கால - பள்ளி அல்லது கல்லூரி காலங்களின் நட்புகள் மற்றும் உறவுகள் பற்றிய - அந்தரங்க செய்திகள் பின்னாளின் திருமண முறிவுக்கு காரணமாகிறது என்கிறது சமீபத்திய கோர்ட் ஆதாரம் ஒன்று.
செய்தி 3: 2004 ஆம் வருடம் முதல் வகுப்பில் தேறிய - இன்னும் வேலை கிடைக்காத ஒரு இளைஞர் தன்னையும் விட சுமாராக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து இருப்பதை கண்ட விரக்தியில் குடித்துவிட்டு போதையில் ஒரு கடற்கரையோட கல்லூரியின் ஆய்வு கூடத்தை வெடிகுண்டு தயாரிக்க முற்றுகையிட அவரை போலீஸ் கைது செய்தது
செய்தி4: சென்னையில் "சேர்ந்து வாழ்தல்" கலாச்சாரம் அதிகமாகிறது - பெறும்பாலும் இளம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான தொலைபேசி உதவி நிறுவன ஊழியர்களே என்கிறது ஆய்வு. திருமணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை என்பதால் ஜோடி போல காண்பித்து கொள்ளுதல், உயர்ந்து வரும் தனி மனிதர் வீட்டு வாடகை, குடும்ப உறவுகளிடம் இருந்து தனிமை, பொருளாதார சுதந்திரம், காலதாமதமாகும் திருமணம், நெடு நேர அலுவலக வாழ்க்கை, விளையாட்டான காமம் அறியும் போக்கு, நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, உலகமயமாக்கலின் விளைவு, கார்பரேட் உலகின் உளவியல் வன்முறைக்கான வடிகால் என காரணங்கள் அடுக்கபடுகின்றன.
Sunday, March 23, 2008
ஆட்டமும் பின்புலமும்..
காகித பூக்களின் காலம்...
அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.
வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.
யாவரும் கேளிர்...
வார்த்தைகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகள் எண்ணங்களை தாண்டி வெறும் ஒற்றை அகராதி அர்த்தத்தை மட்டுமே தொனிக்கின்றன. அது பேசுபவர் அல்லது கேட்பவரின் மனோநிலையும் சூழ்நிலையும் பொருத்து மாறுபடலாம். எனினும் பெரும் சந்தோஷத்தை போலவே மிக துல்லியமான வலியையும் அது உருவாக்கிவிடுகிறது. மனோரீதியாக உணர்வுகளால் கட்டபட்ட உறவுகளின் மத்தியில் இப்படி வலி உண்டாகும் தருணங்கள் மரணத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. ஒரு கடினமான இருட்டின் வெளியில் இருப்பதை போல.
ஒரு நிமிடத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. சில நேரங்களில் பார்க்கும் சாலையோர விபத்து மரணங்களை போல. நெருக்கமான மரணத்துக்கு பிறகு ஒரு வினாடியில் காதலும் உணர்வுகளும் கோபமும் மனவருத்தமும் கருத்து வேறுபாடுகளும் கொண்ட மனம் மன்னித்து இருக்கலாமோ என்ற உணர்வுடன் அழுகிறது.
சிலரை நாம் காரணமில்லாமல் விலக்குகிறோம். விலகி இருக்கவும் விரும்புகிறோம். அவர்களோ நெருங்கிவருகிறார்கள். அன்புடன் பேச விழைகிறார்கள். நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் - சிலர் மன்னிக்கபடவும் கூட. அவர்கள் பிறந்த நாட்களில் ஆச்சரியமாக அழைப்பதுண்டு. வாழ்த்துகள் தவிர வேறு என்ன பேசுவது என்ற நீண்ட மவுனத்தில் சிலரின் மனம் புரிந்து கொள்ளபடுவதுண்டு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம்முடன் பிணக்கு கொண்டவர்களில் சிலரையாவது மன்னிக்கலாம். மனமிருந்தால் எல்லாரையும் கூட. சிறிய வாழ்க்கை. மிக சிறிய வட்டங்கள்... காண்பதும் அறிவதும் மிக குறைவு - இதிலும் கதவுகளை மூடிய வாழ்க்கை யாருக்காக..
நிஜமும் நிழலும்..
Friday, March 21, 2008
காலம் கொள்ளும் வாழ்க்கை
குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்
Wednesday, March 19, 2008
நடிகனின் மரணம்.
இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர் வழங்கியது உண்மை. யாருடனும் ஒப்பிட முடியாத அற்புத கலைஉலக பங்கீடு கொண்டவர். பலருக்கும் நல்ல நண்பர். தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மொழி வேறுபாடு இன்றி பாராட்டபட்டு இருக்கிறார்.
காதல், மனைவி, குழந்தை, ஆன்மீகம், புத்தகங்கள் என வாழ்க்கை சுகமானதாக இருந்திருக்கலாம். குடிப்பழக்கம் உடல்நிலையை கெடுக்க, மணவாழ்க்கையின் கசப்பு மனநிலையை கெடுக்க.. ஒரு நல்ல கலைஞன் ..இன்று மரணமடைந்து விட்டான்.
அவர் நடித்த திரைப்பட வரிசை மற்றும் சிறு தகவல்கள் இங்கே: http://en.wikipedia.org/wiki/Raghuvaran
Monday, March 17, 2008
வீடுகளும் நினைவுகளும்..
சமீப காலங்களில் அலுவகம் செல்வதே ஒரு பயணம் போலதான் இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூட அரைமணியும் ஆகும் - அது போக்குவரத்து நிலவரம் பொருத்து. இந்த பயணம் நிறைய படிக்கவும் பார்க்கவும் நேரம் கொடுக்கிறது. அப்படி ஒரு விஷயம்தான் இன்று பகிர்ந்து கொள்ள தோன்றியது.
நாம் வாழ்ந்த வீடுகளை பற்றிய நினைவுகள் ஏறத்தாழ எல்லாருக்கும் இருக்கும். அந்த வீடு தந்த பாதுகாப்புணர்வும், பால்ய சந்தோஷங்களும் இன்னும் பல ரகசியங்களும்.. மேலும் கொஞ்சம் வலிகளும்.. அப்படிதான் எல்லாருக்கும் வீடுகள் இருக்கின்றன.
திரிசூலம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பழைய வீடு இருக்கிறது. அந்த இடத்தை தாண்டும் போதெல்லாம் மனசு வலிக்கும். பிரமாண்டமான வீடு. யாரோ ஒரு குடும்பம் அங்கு வாழ்ந்திருக்கலாம். இன்று மிகவும் பாழடைந்து இருக்கிறது. இது போல நிறைய வீடுகளை பார்த்திருப்போம். அங்கு வாழ்ந்த குடும்பங்களை பற்றி எவ்வளவு யோசித்திருப்போம் என தெரியவில்லை. அங்கு வாழ்ந்த சிலர் இன்னும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இந்த வீட்டை பற்றிய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த வீடு எத்தனையோ பிறப்புகளையும் இறப்புகளையும் நினைவுகளாக கொண்டிருக்கலாம். கிராமங்களில் சில பழைய வீடுகள் உண்டு, தாழ்வாரமும் தோட்டத்து துளசி செடியுமாய்.. ஆனால் யாராலும் கவனிக்கபடாமல். திருமணங்களும், காதலும் ஏன் மரணமும் கூட அந்த வீடு சுவர்கள் கண்டிருக்கும். பழைய வீடுகள் ஒரு வகையில் வயசாளி உறவினர்களை போல - அவர்களை பார்க்கும் போதெல்லாம் நிறைய நினைவுகள் வரும்.. சில சந்தோஷமானவை - சில துக்கமானவை. எனினும் அவர்களின் நிலைக்கும் இன்றைய நிமிடத்தில் ஏதும் செய்ய முடியாது.. பழைய வீடுகளும் அது போலவே. சில வீடுகளை நான் உள் சென்றும் பார்த்திருக்கிறேன். இருண்ட கரி பிடித்த சமையல் அறைகள், நீளமான தாழ்வாரங்கள், சுவர்களில் கிறுக்கல்கள் கொண்ட படுக்கை அறைகள்.. பழைய காலண்டர்கள் இருக்கும் பரண்கள்.. பொம்மைகள் கிடக்கும் தோட்டம்.. யாரோ வைத்த பூச்செடிகள்.. ஒரு வாழ்வு அங்கு நிகழ்ந்த சுவடுகள் இருக்கும். கூர்ந்து கேளுங்கள்.. குழந்தைகளின் ஓசை, வாழ்ந்த பெண்களின் சிரிப்பு, ஆண்களின் சந்தோஷம்.. சொல்லபட்ட கதைகள்.. கொடுக்கபட்ட சுகங்கள் என .. வாழ்வு சுவடுகளை பதித்திருக்கும்.. ஏதோ ஒரு கவிதையில் படித்ததை போல - பாழடைந்த ஒவ்வொரு வீடும் ஒரு விசும்பலை கொண்டிருக்கிறது. அது அழுகையாக மாறும் வினாடி - ஒரு மரணம் போன்றது.