அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, March 18, 2009

100வது நாள்..!!!

அடடே.. இன்னிக்கு 100வது நாள். எனக்கும் ரேவதிக்கும் கல்யாணமாகி 100 நாள் ஆகிடிச்சு.. காலையில் அப்பாவை கூப்பிட்டு சொன்னதும் சிரித்தார். "இது என்ன சினிமாவா... நாடகமா.. - சரி சரி.. சந்தோஷமா இரு.." - "எங்கள் ஆசீர்வாதம் என்னிக்கும் உண்டு.. முடிஞ்சா ஏதாவது கோவில் போய்ட்டு வாங்க" - இது அம்மா.. நண்பர்கள் எஸ்.எம்.எஸில் வாழ்த்துகளும் கிண்டலும். அனு நேற்று இரவே கலாட்டா செய்து வாழ்த்தி விட்டாள்.. மாமனார் சிரித்து கொண்டே வாழ்த்தினார்..!!! டிசம்பர் 8 2008ல் இருந்து கணக்கு போட்டால் இன்று 100வது நாள். மே 25 2008 (அன்று தான் பெண் பார்த்த நாள்) கணக்கு போட்டால் 293 நாட்கள் வருகிறது.. இவ்வளவு நாட்களில் சில சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை தவிர மற்றபடி சந்தோஷ ஜீவனம்தான். பெண் பார்க்க போனது, இடைக்கால தொடர்ப்புகள், திருமணம், தேனிலவு, வார இறுதி ஊர் சுற்றுதல்கள், சேர்ந்து செய்யும் சமையல், புத்தகங்கள், உலக திரைப்படங்கள், நல்ல இசை என நிறைய சம்பவங்களும் சந்தோஷங்களும்... இன்று மாலையும் மதியமும் வெளியேதான் உணவு... ரேவதி வாழ்த்து அட்டையும் ஒரு கண்ணாடி பரிசும் கொடுத்தாள் - அழகானது - எங்கள் உறவு போலவே... நிறைய கதைகள் இருக்கின்றன.. வாழ்த்திய - வாழ்த்த நினைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

Tuesday, March 17, 2009

ஆரோக்கியமான நகைச்சுவை.

சென்ற வார இறுதியில் ஒரு நாள் பாண்டி பஜாரில் உள்ள "Music World" சென்றிருந்தோம். கொஞ்சம் பழைய தமிழ் படங்கள் "Moserbaer" ல் வாங்கலாம் என நினைத்திருந்தோம். கிடைத்தது சில படங்கள்தான். "Moserbaer" இணையதளத்தில் உள்ள அளவுக்கு கடைகளில் கிடைப்பதில்லை போலும். ரேவதியின் தந்தையும் பழைய படங்கள் விரும்பி பார்ப்பார் - எனவே அவருக்கு இரண்டு வாங்கவிருந்தோம். பார்க்க பார்க்க - கிட்டதட்ட எல்லா படங்களிலும் நாகேஷ் ஒரு தவிர்க்க முடியாத கதாபாத்திரமாகவே இருந்ததை கவனித்தோம். இது புதிய விஷயம் இல்லை எனினும் - இது பற்றி பேசுவதை எனக்கு ரேவதிக்கும் தவிர்க்க முடியவில்லை. பல படங்களை நினைவுருத்தி கொண்டோம். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் என ஒரு கதாநாயகனுக்கு சமமான திரைப்படங்கள் இருந்தாலும் திருவிளையாடல், ஊட்டி வரை உறவு போன்ற திரைப்படங்களும் மறக்க முடியாது. காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் மேஜையில் குரு ஜெர்ரி லூயிஸின் புகைபடத்தை வைத்திருப்பார். ஜெர்ரி லூயிஸ் திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு நாகேஷ் ஏன் அவரை குருவாக கொண்டார் என புரிந்து கொள்ளலாம்.

நம்மவர் மிக அருமையான ஒரு குணசித்திர வேடத்தை தந்தது. மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரு பிணம் - ஆனால் மிகவும் சிரிக்க வைத்த ஒரு பிணம். ஒரு காலத்தில் திலக நடிகர்கள் கூட தங்கள் படங்களுக்கு நாகேஷின் தேவை மிக அதிகம் என உணர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் கமல் மட்டுமே நாகோஷை சரியான முறையில் உபயோகபடுத்தி கொண்டார். சில ரஜினி படங்களும் உண்டு. சில திரைப்படங்களில் கொடூரமான ஆனால் கொஞ்சம் சிரிக்க வைக்கும் வில்லன் வேடங்களும் உண்டு. வேகமான - மற்றும் எதிர்வினை சார்ந்த நடிப்பும் வசன துள்ளலும் அவர் அடையாளங்கள். அது சார்லி சாப்ளின் மற்றும் ஜெர்ரி லூயிஸின் நடிப்பினை ஆழ்ந்து வாங்கி கொண்ட கவனங்கள். அன்பே வா, பாமா விஜயம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என வித்தியாசங்களை காண்பித்து இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி தாண்டி ஒரு இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்தவர் நாகேஷ். அது அவருக்கும் கே.பாலச்சந்தருக்கும் உள்ள இணக்கம். நடிகர்கள் ஜெமினிக்கும் தங்கவேலுவுக்கு ஒரு புரிதல் சார்ந்த நட்பு இருக்கும் - உதாரணம்: கல்யாண பரிசு. அத்தகைய புரிதல் எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் நாகேஷுக்கு இருந்தது. பல படங்கள் உதாரணமாக சொல்லலாம். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வைரமுத்து - தமிழகத்தின் சிரிப்பு இறந்து விட்டது என சொன்னார். மிகையாகாது. நல்ல நகைச்சுவை, வேகமான எதிர்வினை கொண்ட உடல் அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தேர்ந்த குரல் வளம் கொண்ட வசன உச்சரிப்பு, மேலை நாட்டு நாட்டிய வகை (சந்திரபாபு இதனை அற்புதமாக செய்வார்), அருமையான குணசித்திர நடிப்பு என பல்வகை அதிசயங்களை காட்டியவர் நாகேஷ். நிறைய பேசி கொண்டிருந்தோம். கொஞ்சம் படங்கள் வாங்கினோம். இன்னும் என்ன என்ன படங்கள் வாங்க வேண்டும் என பட்டியல் இட்டு கொண்டிருக்கிறோம். பார்க்க வேண்டும். தமிழில் நல்ல நகைச்சுவை இப்போதெல்லாம் காண கிடைக்காததாகி விட்டிடுக்கிறது.

Monday, March 16, 2009

தெய்வத்தால் ஆகாதெனினும்...

மூன்று வருடத்துக்கு முன்னால் மாதம் கிட்டதட்ட நான்கு லட்சம் சம்பளம். பொறியியல் படிப்பு. டெட்ராய்ட் நகரில் மென்பொருள் வேலை. உங்களில் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்... நீங்கள் யோசிக்கும் அதே வினாடியில் செந்தில்குமார் என்ற இந்த நபர் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தார். கிராமம் கிராமமாக அலைந்தார். தேனூர் என்ற ஊரில் ஒரு சிறிய மருத்துவமனை, ஒரு கணிப்பொறி அமைப்பு, குழந்தைகளுக்காக ஒரு மரத்தடி பாடசாலை - இத்தனையும் கைகாசில். இது வரை நாற்பது லட்சம் செலவாகி இருக்கிறது. மலிவான குழைவான வேஷ்டி - சட்டை, கேரியர் சைக்கிள், சாப்பாட்டு தூக்கு பாத்திரம், மஞ்சம் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி, ஒழுங்குபடுத்தபடாத தாடி மீசை முகம் - இவர் ஒன்றும் பெரிய குடும்ப வாரிசு கிடையாது. சாதாரண குடும்ப பிண்ணனி. "உலக வரலாறு படிப்பதை விட உங்களை சுற்றியுள்ள கிராமங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கல்வி கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த கல்வியை சொல்வோம். இயற்கை வேளாண்மை செய்கிறோம். 3000 மரங்கள் நட்டுள்ளோம். அரசாங்க பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் இன்னும் நிறைய செய்யலாம்." என்கிறார். "நல்லா படிச்சுட்டு நல்ல வேலைல இருக்கும் போதே 'இப்படி ஆயிட்டாரே' - அவருக்கு பொண்ணு குடுத்து என்ன பண்றது' என சொந்தங்கள் சொல்வதாக அவர் அம்மா கவலைபடுகிறார்.

எம்.என். நம்பியார்

ஒரு வில்லன் நடிகராக மட்டுமே எம்.என். நம்பியார் என் இளம் வயதில் அறிமுகமானார். திரையில் உள்ள நடிகரை, குவித்த மணலில் அமர்ந்து டெண்ட் கொட்டாயில் படம் பார்க்கும் அனேகம் பேரும் திட்டுவது எனக்கு குதூகலமாக இருக்கும். அதிலும் என் பாட்டி படம் பாத்துவிட்டு வரும் வழியெல்லாம் திட்டுவார். பிற்பாடு கெட்டவர்கள் என்ற வர்க்கத்தின் அடையாளமே நம்பியாரின் முகமாய் ஆகி போனது. வெகு நாட்கள் பிறகு அவரின் வேறுபட்ட நடிப்பை பாக்கியராஜிம் மற்றவர்களும் எடுத்துகாட்டிய பிறகு மதிப்பு மென்மேலும் உயர்ந்து போனது. வித்தியாசமான குரல் அமைப்பு, வசன உச்சரிப்பு, கண் ஜாடை, குணசித்திர வேடங்களில் மற்றவர்க்கு இடம் கொடுத்து நடிக்கும் பாங்கு - என எந்த திலகத்துக்கும் கொஞ்சமும் குறைந்தவராக அவர் இல்லை. என்னை பொருத்தவரை - எம். ஆர். ராதாவும் நம்பியாரும் இல்லாமல் இருந்தால் திலகங்களின் நடிப்பு மட்டுமே நடிப்பு என பேசபட்டிருக்கும். எந்த வயதிலும் நல்ல உடல் பயிற்சி, ஐயப்ப பக்தி என மேன் மேலும் ஆச்சரியங்களை கொடுத்தவர். அவர் மறைவுக்கு பின்னாலாவது அவரை பற்றி நிறைய பேர் பேசுவது திருப்தி அளிக்கிறது. நாடகதன்மையும் - நாடக தன்மை இல்லாத நடிப்பும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் கொடுத்தது - திலகங்கள் கூட செய்யாதது.

Monday, April 28, 2008

இன்னும் உண்டு வேலைகள்

கோவையில் ஆறுமுக்கு என ஒரு இடம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நானும் நண்பர்களும் முன்னிரவு நேரங்களில் அலுவலகம் முடிந்து வரும்போது அந்த இடத்தை தாண்டி வருவோம். அங்கு ஒரு சிறிய தள்ளுவண்டி வடை போண்டா கடை இருந்தது. நாங்கள் அங்கு பெரும்பாலும் சாப்பிடுவது வழக்கம். அங்கு ஒரு சிறு பையன் இருந்தான். வயது 10 இருக்கும் - மணிகண்டன் - பெயர் என்று நினைவு. சரியாக கணக்கு பார்பான் - மிக சரியான உபசரிப்பு உண்டு. தொந்தரவு தரும் குடித்திருக்கும் பெரியவர்கள் அல்லது சண்டியர் பெண்களை அவன் கவனிக்கும் விதம் தனி விதம். கிட்டதட்ட 4 வருடங்கள் கழித்து இந்த முறை அவனை பார்த்த போது நல்ல மாற்றம் - முன்னேற்றம் எனவும் சொல்லலாம். சிறிய க்டை போட்டாகிவிட்டது. வடை போண்டா போட இன்னுமொரு ஆள். கல்லா பார்த்து கொள்ள மணிகண்டன் - 2 பிலாஸ்டிக் டேபிள் 8 சேர் வீதம் ஒரு சிறிய அறை.. சைக்கிள் நிறுத்த சின்ன இடம்.. ஒரு மாதிரி செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் பழைய மணிகண்டன் மாறவில்லை - பேசும்விதமும், கஸ்டமர்களை கவனிக்கும் விதமும் மாறவில்லை - கல்லாவில் பணம் எண்ணிபோடும் விதம் மாறினாலும் சாப்பிடுபவர்கள் மேல் கண்வைத்து கணக்கு பார்க்கும் குணம் மாறவில்லை. "அண்ணே செளக்கியமா... !!" என்ற பால்யம் மாறாத - குரல் மாறிய குணம் அவனை இன்னும் அவனாகவே காட்டி கொண்டிருந்தது. உண்மையை சொன்னால் மணிகண்டன் போல உழைக்க ஆயிரம் உண்டு வழிகள். அடிப்படை நேர்மையும் அளவான சேமிப்பும் சரியான உழைப்புமே நல்ல முன்னேற்றத்தின் வழிகள் - கார்பரேட் கம்பெனியில் 5 இலக்க சம்பளம்தான் வாழ்க்கை என கொள்ளும் எத்தனை லட்சம் மனிதர்களிடையே இந்த மாதிரி மணிகண்டனும் வாழ்வில் இருக்கிறான். இன்னும் நிறைய மணிகண்டன்கள் பேக்கரி வைத்திருக்கிறார்கள், ஆட்டோமொலைல் வொர்க்சாப் வைத்திருக்கிறார்கள், காப்பி கடை வைக்கிறார்கள் முடி வெட்டுகிறார்கள் இன்னும் என்னவோ செய்கிறார்கள். மொத்ததில் வாழ்க்கை நடத்துகிறார்கள் - கார்பரேட் ஊழியர்களை விட சந்தோஷமாக. இதில் சில மணிகண்டன்களின் எண்ணம் எதிர்காலத்தில் நிறைய பணமாக இருக்கலாம் - ஆனால் அந்த காகிதங்கள் வாழ்க்கையை பறித்துவிடும் என தெரிந்திருந்தால் ஆசைப்பட மாட்டார்கள்.

நாய்களின் அரசியல்

நான் வசிக்கும் தெருவில் 4 நாய்கள் இருக்கின்றன. முதலில் 3தான் இருந்தது - புதியது வந்து 1 மாதம் ஆகிறது. அவற்றுக்குள் பொதுவான அரசியல் என சில உண்டு. ஒரு நாயின் வரம்புக்குள் இன்னொரு நாய் வராது. ஒரு நாள் குரைத்தால் மட்டுமே மற்ற நாய்கள் குரைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் பிச்சைகாரர்களை பார்த்து குரைக்கும் - அல்லது போலீஸ்காரர்களை. இரவில் ஒவ்வொரு நாய்க்கும் ஒரு இடம் உண்டு. வெகு அரிதாக புணர்ச்சியில் இருக்கும் போது மற்ற நாய்கள் விலகி நிற்கும். யாரும் அவைகளுக்கு உணவிடுவதில்லை. கிடைத்தை - குப்பை தொட்டியிலும் அருகில் உள்ள கடைகளின் கழிவுகளில் இருந்து உண்டு வாழ்கின்றன. தெருவில் யாராவது பணக்கார நாய்களை கையில் பிடித்து கொண்டு நடப்பார்கள். அந்த நாய்கள் இவைகளை பார்த்து குரைக்கும். இவை பதிலுக்கு குரைக்காமல் விலகி போய்விடும். ரொம்ப வரம்பு மீறினால் - 2 அல்லது 3 நாய்கள் சேர்ந்து பணக்கார நாயை பார்த்து குரைத்து ஒரு வழி செய்துவிடும் - நாயை கூட்டி கொண்டு செல்பவர் பாடுதான் - சண்டையை தவிர்க்க போராட வேண்டி இருக்கும். அடிப்படையில் அவைகளுக்கு கூட யாரிடம் மோதலாம் - எப்போது மோதலாம் என தெரிகிறது. எல்லை கோடுகள் தெரிகிறது. தேவைபடும்போது தன் எல்லைக்குள் வந்து குரைப்பவர்களை கூட்டு சேர்ந்து மோதி துரத்த தெரிகிறது.

நினைவு மறந்த மனிதர்கள்

நினைவு மறந்த மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா.. பெரும்பாலும் கோவில்கலிலும் சில சாலைஓரங்களிலும் மற்றும் பெறும்பாலான நகர பேருந்து நிலையங்களிலும் கவனிக்கலாம். காலத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு புலப்படாமலேயே இருக்கிறது - மறந்து இருக்கலாம் அல்லது மறக்கவைக்கபட்டு இருக்கலாம். குடும்பத்தால் விரட்டபட்ட ஜுவன்கள்தான் பெரும்பாலும். பெண்களின் நிலை இன்னும் கொடுமை - அவர்களையும் கர்பமாக்கும் வக்கிரகாரர்களை என்ன சொல்ல... சிலரை நான் ஓரளவு கவனித்து இருக்கிறேன். வயதானவர்கள் பெரும்பாலும் ஏதேனும் முனுமுனுத்து கொண்டே இருப்பார்கள் - சில ஓயாமல் பேசுவார்கள். சிலர் அமைதியாக உட்கார்ந்து வெறித்து பார்த்து கொண்டு இருப்பார்கள். ஏதேனும் பொருக்கி கையில் உள்ள பையில் சேமித்து கொண்டே இருப்பார்கள் சிலர். சிலருக்கு காசு கொடுத்தால் புரியாது - பசி மட்டும்தான் பிரதானம். எது சாப்பிட கொடுத்தாலும் கூட உள்ள ஒரு நாய்க்கும் பங்கு கொடுக்கும் பெரிவர் ஒருவர் இருந்தார் - கோவை 10ஆம் நம்பர் வீதியில் - அவரையும் மனநலம் இல்லாதவர் என்றுதான் சொல்வார்கள். நிர்வாணம் கூட சிலருக்கு சகஜமாக இருக்கும். இவர்கள் நிச்சயம் ஆரம்ப காலத்தில் நன்றாக இருந்திருப்பார்கள். நல்ல வாழ்க்கையில் கூட இருந்திருக்கலாம். எந்த புள்ளில் வாழ்க்கை திசை மாறுகிறது என்பது கேள்வி. தனிமைபடுத்தபடுதல் என்பது பெரும் கொடுமை. சக மனிதர்களிடமிருந்து மட்டுமில்லாமல் - தன் வாழ்க்கையில் இருந்தே தனிமைபடுத்தபடுவது நினைக்கவும் முடியாதது. நினைவு மறந்தவர் எல்லாரும் மனநலம் இல்லாதவர் கிடையாது - சிலர் அப்படி மாறுவதுண்டு. நினைவுகள் மறந்து போனாலும் - புதிய வாழ்வின் விஷயங்களை ஆரோக்கியமாக கிரகிக்க முடிந்தவர் - பெரும் நலம் கொண்டவர். நினைவு மறந்த ஒருவருக்கு மறுபடி நினைவு திரும்பினால் அவரை குடும்பம் ஏற்று கொள்கிறது. ஒரு மனநலம் குன்றியவரை அப்படி ஏற்று கொள்ள தயங்குகிறது - ஒரு வகையாக பயம் காரணமாக இருக்கிறது. நினைவுகள் இல்லாத மனிதர்களை நம்மை சுற்றி கொண்டுள்ளோம்.. ஏதேனும் ஒரு நிலையில்லாத புள்ளியில் அவர்களின் வாழ்க்கை மையம் கொண்டலைகிறது. கடந்து போகும் எல்லா மனிதர்களிடமும் மனபிழறு உண்டு - அதன் சராசரி நிலைமட்டுமே நம்மை கோட்டின் இப்பகுதியில் வைத்திருக்கிறது.

இயற்கை விவசாயம்

பாலேக்கரின் இயற்கை விவசாயம் பற்றி கோவையில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி என்பது நிச்சயம் நல்ல விஷயம். நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயிகளின் கருத்துகள் நெடுங்காலமாக கவனிக்கபடாமல் இருக்கின்றன. உணவு முறை பற்றிய ஆரோக்கிய சிந்தனைகளில் எல்லாம் இயற்கை விவசாயமும் கலந்து கொள்வது நல்லது. விவசாயம் அது சார்ந்த மற்ற துறைகளையும் மேம்படுத்தும். வேலை வாய்ப்பும் நல்ல சந்தையும் பெருகும். இன்னும் இதனை பற்றிய சிந்தனைகளை பொதுமக்களிடையே தர வேண்டும். அரசாங்கம் கருத்துகளுக்கும் சாதனைகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சினிமாவுக்கும் கிரிகெட்டுக்கும் செலவு செய்வதை விட ஆரோக்கியமான உணவை பயிரிட என்ன செய்யலாம் என யோசிக்கலாம். தனி மனித சிந்தனையும் முயற்சியும் என்றும் வரவேற்புடையவை. ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் - ஒரு முதல் தர உலக தேவையாக மாறும் நாள் தொலைவில் இல்லை. முயற்சி எடுக்கும் சிறுதுளி அமைப்பிற்க்கும் - உபயோகபடுத்தபோகும் விவசாய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

கலர் பனியன் நினைவுகள்

சமீபத்தில் ஒருமுறை ஒரு சாலை சந்திப்பில் சில மாணவர்கள் பள்ளி பெயர் கொண்ட கலர் பனியன்களோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் என் பள்ளி நாட்களை நினைத்து பார்த்தேன். கலர் பனியன் கொடுத்து அணி பிரிக்கபட்டது மணி மேல்நிலைபள்ளியில் மட்டும்தான். அதற்க்கு முன்னெல்லாம் வெள்ளை சட்டை காக்கி டவுசரோடு புளுதி பறக்க விளையாட்டும் கொஞ்சம் மீறி போனால் சண்டையும் இருக்கும். ஆறாம் வகுப்பில் மணி மேல்நிலைபள்ளி. நான் கண்ணாடி அணிய ஆரம்பித்திருந்த காலம். சேர, சோழ, பாண்டிய, பல்லவ என 4 அணிகள் உண்டு - முறையே சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை பனியன்கள் (போன முறை வீடு மாற்றும்போது ஒரு பனியன் திரும்ப கிடைத்தது). கொஞ்சம் நோஞ்சானாகவும் உயரமாகவும் கண்ணாடி அணிந்தவனாகவும் இருப்பதால் பல்லவா டீமில் ஒப்புக்கு சப்பாணியாக மட்டுமே வாழ்க்கை நகர்ந்தது. விளையாட போகாமல் இருந்ததால் மரத்தடியில் நின்று விளையாட்டு ஆசிரியர்கள் சொல்வதை கவனிக்கவும் நேரம் கிடைக்கும். கபடி, கோ-கோ, வாலிபால் மற்றும் பேஸ்பால் இருந்தது - சில விளையாட்டு நுணுக்கங்களை அவர்கள் சொல்வதில் இருந்து கவனித்து கொண்டு - ஏகலைவன் பாணியில் கற்று கொண்டது போல வட்டாரங்களில் எடுத்து விட உபயோகமாக இருந்தது. குறிப்பாக எதிர்பால் அணியிடம் இருந்து. அதிலும் சில கண்ணாடி தேவதைகள் உண்டு. முதலில் அதிகம் கவனிப்பு இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து நட்பு கொண்டு விட முடிந்தது. அப்புறம் அதன் கலர் விளைவுகள் எல்லாம் இருந்தன... எல்லாம் 2 வருஷம்தான். மறுபடி வேறு பள்ளி - வெள்ளை சட்டை (அழுக்காகும் என கருதினால் உள் பனியனோடு போராடலாம்) - காக்கிடிராயர் என வாழ்க்கை மாறிவிட்டது. அது எல்லாம் விளையாடுபவர்களுக்குதானே. நாம் தான் மரத்தடி சக்கரவர்த்தியாயிற்றே. ஆனால் என்ன - அது வெறும் ஆண்கள் பள்ளி. பின்னர் கல்பாக்கம் வந்த பிறகு - அது வேறுகதை. வேறு தோழர்கள், வேறு மரத்தடிகள் - வேறு வேறு அனுபவங்கள். இன்னும் கலர்பனியன்கள் எல்லாம் நினைவுகளையும் கொடுத்து கொண்டே இருக்கின்றன. நான் என் சிறு வயது பொம்மைகளுக்கு கூட பெயர் வைக்கும் பழக்கம் உள்ளவன். அவைகளுடன் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு - அவைகளை வைத்து நான் நிறைய கதைகளை டைரக்ட் செய்து இருக்கிறேன். அந்த பொம்மைகள், இந்த கலர் பனியன்கள், வாழ்க்கை கல்வி வகுப்பறையில் செய்த ஜிகினா பந்து, பிலாஸ்டிக் சட்டத்தில் நெய்யபட்ட புறாக்கள் (முழுக்க முடிக்கவில்லை) - இவை எல்லாவற்றுடன் சில நோட்டு புத்தக காதிதங்கள் - சிலரின் கை எழுத்துகள் அதில் இருக்கும் (எல்லாம் அவள்கள்தான்..)... இன்று பார்க்கும் போது கொஞ்சம் நமுட்டு சிரிப்பு வந்தாலும் அவை எல்லாம் நந்தவனத்து நினைவுகள் இல்லையா.. பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலத்தை நினைத்து பார்ப்பது...

கூட வரும் தோழர்கள்

நான் வசிக்கும் பகுதிக்கும் என் அலுவலகத்துக்கும் இருக்கும் தொலைவுக்கு கிட்டதட்ட 1 மணி நேரத்துக்கும் மேல் பயண நேரம். ஒரு முறை நண்பர் ஒருவர் கேட்டார் - யாரெல்லாம் கூட பயணம் செய்கிறார்கள் என - அசோகமித்திரனும், ஞானியும், சாருவும் மற்றும் பலரும் என நான் சொன்னதும் சிரித்துவிட்டார். வேறு என்ன செய்வது. தினமும் ஜன்னல் வழியாக உலகம் ரசிக்கலாம்தான் - அதுவும் ஒரே வழியாக போவதால் அலுத்து விடுகிறது. பேசி கொண்டு இருக்கலாம் - நாம் பேசுவது எல்லாம் மற்றவர்களுக்கு வெட்டி வேலையாக தோன்றுகிறது. ஹெட்போன் இசை - ஒரு அளவுக்கு மேல் காது வலிக்க ஆரம்பித்து விடுகிறது. புத்தகம் தான் - நல்ல தோழன். பயணத்தில் படிக்க கூடாது என கண் டாக்டர்கள் அறிவுறுத்தினாலும் - அளவாக படிப்பது தவறில்லை என்பேன். தினமும் 30 நிமிடங்களாவது படிக்கலாம் - மிச்ச நேரம் கண் மூடி படித்ததை கொஞ்சம் யோசிக்கலாம். பெரும்பாலும் நிறைய புத்தகங்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைக்கும் பழக்கம் இன்றெல்லாம் நிறைய பேருக்கு இருக்கிறது. எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்கள் என கேட்க வேண்டும் சில பேரையாவது. உறவுகளை பலப்படுத்தும் புத்தகங்கள் இன்று பெருகி விட்டன. சில புத்தகங்கள் சின்ன சின்ன விஷயங்களை சுவரஸ்யமாக சொல்லி கொடுக்கின்றன. தத்துவங்களும் வாழ்க்கை முறையும் வேறு வகையான வடிவில் அறிமுகபடுத்தபட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றன. இயல்பாக வாழ்வதற்க்கு கற்று கொள்ள கூட புத்தகங்கள் வருகின்றன. அதுவும் நல்லதுதான் - இல்லாவிட்டால் இருப்பவனெல்லாம் ஒரு புள்ளியில் மரத்தில் ஏறிவிடுவான்.

Tuesday, April 01, 2008

நம்மை சுற்றிய உலகம்...

சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை.

செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு சென்று போலீஸ் மற்றும் தூதரக உதவியுடன் தன் மனைவியை மீட்டிருக்கிறார்.


செய்தி 2 - திருமணம் நிச்சயமான பிறகு கை தொலைபேசியில் காதல் உரையாடும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் இளமைக்கால - பள்ளி அல்லது கல்லூரி காலங்களின் நட்புகள் மற்றும் உறவுகள் பற்றிய - அந்தரங்க செய்திகள் பின்னாளின் திருமண முறிவுக்கு காரணமாகிறது என்கிறது சமீபத்திய கோர்ட் ஆதாரம் ஒன்று.


செய்தி 3: 2004 ஆம் வருடம் முதல் வகுப்பில் தேறிய - இன்னும் வேலை கிடைக்காத ஒரு இளைஞர் தன்னையும் விட சுமாராக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து இருப்பதை கண்ட விரக்தியில் குடித்துவிட்டு போதையில் ஒரு கடற்கரையோட கல்லூரியின் ஆய்வு கூடத்தை வெடிகுண்டு தயாரிக்க முற்றுகையிட அவரை போலீஸ் கைது செய்தது


செய்தி4: சென்னையில் "சேர்ந்து வாழ்தல்" கலாச்சாரம் அதிகமாகிறது - பெறும்பாலும் இளம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான தொலைபேசி உதவி நிறுவன ஊழியர்களே என்கிறது ஆய்வு. திருமணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை என்பதால் ஜோடி போல காண்பித்து கொள்ளுதல், உயர்ந்து வரும் தனி மனிதர் வீட்டு வாடகை, குடும்ப உறவுகளிடம் இருந்து தனிமை, பொருளாதார சுதந்திரம், காலதாமதமாகும் திருமணம், நெடு நேர அலுவலக வாழ்க்கை, விளையாட்டான காமம் அறியும் போக்கு, நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, உலகமயமாக்கலின் விளைவு, கார்பரேட் உலகின் உளவியல் வன்முறைக்கான வடிகால் என காரணங்கள் அடுக்கபடுகின்றன.

Sunday, March 23, 2008

ஆட்டமும் பின்புலமும்..

சாருவின் ஒரு சமீபத்திய உரையாடலில் - தற்போதைய டெலிவிஷன் நடன நிகழ்ச்சிகளை பற்றி - ஒரு சமுதாய மட்டதுக்கான செக்ஸுவல் பேண்டஸி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பற்றி கொஞ்சம் இணையத்திலும் ஆராய்ந்தபோது ஒரு சுவரஸ்யமான மனோதத்துவ விஷயம் கிடைத்தது. பொதுவில் விசுவல் மீடியா என சொல்லபடும் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வகை பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் போய் சேருகிறது - அதிலும் பெரும்பாலும் ஆண்கள் - அதன் சதவீதத்தில் 60% பெண்கள். சாதாரணமாக நாம் பார்க்கும் பெண்கள் அல்லது கதாபாத்திரங்களை - கொஞ்சம் உடல் ரீதியாக கற்பனை செய்து - அதன் மூலம் ஒரு விதமான சுகம் அடைதல் ஒரு மனோவியாதி - ஆனால் கொஞ்சம் சாத்வீகமாக மனோவியாதி. இது நிறைய பேருக்கு இருந்தாலும் சமுதாய கட்டுபாடுகள் அவற்றை கொஞ்சம் மட்டுபடுத்துகிறது. கவனித்துபார்த்தால் இந்த நடன நிகழ்ச்சிகளில் வருபவர்கள் எல்லாம் - சின்னதிரை நாடக அல்லது சிறு நடிகர்கள். சினிமா நடிகர்கள் அல்லது நடிகைகள் - சினிமாவின் நடனங்கள் பாடல்கள் மூலம் சாதாரண ரசிகனின் உள் எண்ணங்களை தூண்டுகிறார்கள். அவர்களின் மேல் வருவதை விட இழுத்து போர்த்தி நடிக்கும் சிறு நடிகர் நடிகைகள் மற்றும் சின்னதிரை நடிகைகள் மேல் சாதாரண ரசிகனுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அந்த உடல் ரீதியான ஈர்ப்பை இத்தகைய நடன நிகழ்ச்சிகள் தீர்த்து வைக்கின்றன. உடைகள், மேடை அமைப்பு, பாடல் விதம், ஆடும் விதம், இசை அதிர்வுகள் ஆகியவை ஒரு வகையான ரெக்கார்டு டான்ஸ் அனுபவத்தை சாதாரண ரசிகனுக்கு கொடுக்கின்றன. ஒருவித ரகசிய கவனிப்பு நிகழ்கிறது என தெரிந்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பெண்ணுடை அணியும் ஆண்கள் ஒரு விதமான கவர்ச்சி பார்வையுடன் கவனிக்கபடுகிறார்கள் (உதா: சில உடனடி மேடை சிரிப்பு நிகழ்ச்சிகள்) - அவர்களை கமெண்ட் செய்வது நடுவராக உட்கார்ந்திருப்பவர்களே.. ஒருவகையான கிராஸ் டிரெஸிங் கவர்ச்சி என இதனை கொள்ளலாம் (இதிலும் பெண் மட்டம்தட்டபடுவதுதான் பின்புலத்தில் இருக்கிறது).. அட சிரிப்பு நிகழ்ச்சிதானே - விட்டுவிடலாம் என சிலர் சொல்கிறார்கள். நடன நிகழ்ச்சிகள் சினிமா பாடல்களை முன்னிலையாக கொள்வதில் - உண்மை சினிமா காட்சியில் உள்ள காமிரா, ஒளி மற்றும் இதர விஷயங்களை ஈடு செய்ய மேலும் உடல்ரீதீயான அசைவுகள் புகுத்தபடுகின்றன. எல்லா இந்திய சினிமா பாடல் காட்சியின் அசைவுகளும் காமத்தை அடிப்படையாக கொண்டவை - அதிலும் இந்த புகுத்தபட்ட அசைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது உண்மை. எதுவும் தவறில்லை. ஆனால் புரிந்து கொள்ளுங்கள் - இது ஒருவகையான செக்ஸுவல் பேண்டஸி என்பதை.

காகித பூக்களின் காலம்...

வசந்த காலத்தை வரவேற்க்கும் வண்ணங்களின் பண்டிகை கொண்டாடபட்டு கொண்டிருக்கிறது. நான் வசிக்கும் பகுதியில் வட இந்திய குடும்பங்கள் உண்டு. 2 நாட்களாக அவர்களின் கொண்டாட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். பொதுவாக வட இந்தியர்கள் இத்தகைய பண்டிகைகளை விமர்ச்சையாக கொண்டாடுகிறார்கள். பிள்ளையார் சதுர்த்தியும் தீபாவளியும் போல. தென் இந்தியாவில் மட்டும்தான் இவை அரசியலாக்க படுகின்றன.

அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.

வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.

யாவரும் கேளிர்...

வார்த்தைகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகள் எண்ணங்களை தாண்டி வெறும் ஒற்றை அகராதி அர்த்தத்தை மட்டுமே தொனிக்கின்றன. அது பேசுபவர் அல்லது கேட்பவரின் மனோநிலையும் சூழ்நிலையும் பொருத்து மாறுபடலாம். எனினும் பெரும் சந்தோஷத்தை போலவே மிக துல்லியமான வலியையும் அது உருவாக்கிவிடுகிறது. மனோரீதியாக உணர்வுகளால் கட்டபட்ட உறவுகளின் மத்தியில் இப்படி வலி உண்டாகும் தருணங்கள் மரணத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. ஒரு கடினமான இருட்டின் வெளியில் இருப்பதை போல.


ஒரு நிமிடத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. சில நேரங்களில் பார்க்கும் சாலையோர விபத்து மரணங்களை போல. நெருக்கமான மரணத்துக்கு பிறகு ஒரு வினாடியில் காதலும் உணர்வுகளும் கோபமும் மனவருத்தமும் கருத்து வேறுபாடுகளும் கொண்ட மனம் மன்னித்து இருக்கலாமோ என்ற உணர்வுடன் அழுகிறது.

சிலரை நாம் காரணமில்லாமல் விலக்குகிறோம். விலகி இருக்கவும் விரும்புகிறோம். அவர்களோ நெருங்கிவருகிறார்கள். அன்புடன் பேச விழைகிறார்கள். நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் - சிலர் மன்னிக்கபடவும் கூட. அவர்கள் பிறந்த நாட்களில் ஆச்சரியமாக அழைப்பதுண்டு. வாழ்த்துகள் தவிர வேறு என்ன பேசுவது என்ற நீண்ட மவுனத்தில் சிலரின் மனம் புரிந்து கொள்ளபடுவதுண்டு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம்முடன் பிணக்கு கொண்டவர்களில் சிலரையாவது மன்னிக்கலாம். மனமிருந்தால் எல்லாரையும் கூட. சிறிய வாழ்க்கை. மிக சிறிய வட்டங்கள்... காண்பதும் அறிவதும் மிக குறைவு - இதிலும் கதவுகளை மூடிய வாழ்க்கை யாருக்காக..

நிஜமும் நிழலும்..

வட இந்தியாவின் ஒரு சிறைசாலை. சிறை கைதி மிகவும் வயதானவர். ஆயுள் தண்டனை பெற்றவர். அவருக்கு மணமாகாத ஒரு பெண். தன் பெண்ணின் திருமணவாழ்க்கை பற்றிய கவலையுடன் இருந்த அவர், சிறைசாலை அதிகாரிகளிடம் தன் மனதை பகிர்ந்து கொள்ள, அவர்கள் மற்ற சிறைக்சாலை பணியாளர்களுடன் சேர்ந்து பணம் வசூலித்து கைதியின் மத முறைப்படி மிக நல்ல முறையில் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள். திருமண தம்பதி சிறைசாலைக்குள் வந்து ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்கள். சட்ட விதிமுறைகளின் படி இது தவறு எனினும், மறுபக்கத்தில் இது ஒரு நல்ல மனிதநேய எடுத்துகாட்டு. சிறைகைதியின் அடிப்படை உணர்வுகள் மதிக்கபட்டு, பொருளாதார சூழல் கருத்தில் கொள்ளபட்டு செய்யபட்ட ஒரு நல்ல உதவி. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளால் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மனதளவில் நல்லது செய்த ஒரு திருப்தி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இருக்கும். நடவடிக்கை எடுக்க அரசாங்கம் சொல்லும் காரணம் சிறைசாலைக்குள் சம்பந்தம் இல்லாத வேறு மனிதர்கள் வரக்கூடாது என்பதுதான். அப்புறம் ஒரு நாள் தொலைக்காட்சி பார்க்கும்போது ஒரு குழப்பம் வந்தது. வட இந்திய அல்லது தென் இந்திய திரைப்படங்கள் என்ற எல்லை இல்லாமல், பெறும்பாலும் சிறைச்சாலைகளுக்குள் குத்தாட்ட பாடல்கள் இருக்கின்றன - சம்பந்தமே இல்லாமல் அரைகுறை உடையில் ஒரு அழகி(?) வேறு. இது எல்லாராலும் ரசிக்க படுகிறது. அடிப்படை கேள்விகள் கூட எழுவதாக தெரியவில்லை. நிழலின் அபத்தமும், நிஜத்தின் நெகிழ்ச்சியும் இரு வேறு துருவங்களாகவே இருக்கின்றன.

Friday, March 21, 2008

காலம் கொள்ளும் வாழ்க்கை

அடிப்படையில் வளையல் கடை நடத்தி வந்த ஒரு இளைஞர். 1981-ல் ஒரு திரைப்படம் அவரை நடிகராக்கியது. 82 திரைப்படங்கள் நடித்துள்ளார். அரசியல், சினிமா என வாழ்க்கை வேறு மாதிரி வட்டமடைய, வாழ்க்கை முறை மாற்றம் அடைந்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. கொஞ்சம் யோசிப்போம். ஒரு வேலை அவர் வளையல் கடை மட்டுமே நடத்தியிருந்து - திரைபடமும் அரசியலும் அவர் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் - அவர் எப்படி இருந்திருப்பார். வேறு ஒரு வாழ்க்கை பாதையில் இருந்திருக்கலாம் - இன்னும் கொஞ்சம் குடும்பத்துடன் நேரம் செலவளித்து இருக்கலாம் - இன்னும் உறவினர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் - இன்னும் ஆரோக்கியமாக இருந்திருக்கலாம் - ஏன் இன்னும் உயிரோடு கூட இருந்திருக்கலாம். நான் வாழ்க்கை முன்னேற்றத்தை குறை கூறவில்லை. வளையல் கடையும் ஒரு வாழ்க்கைதானே என்கிறேன். பொருளாதார முன்னேற்றம் வாழ்க்கையின் அடிப்படைகளை பணயம் வைத்துதான் நடக்கும் எனில் - ஒரு நிமிடம் யோசிக்கலாமே. பெசன்ட் நகரில் வாழ்வதும் சைதாப்பேட்டை குடிசைபகுதியில் வாழ்வது அடிப்படையில் வாழ்க்கைதான். நடைமுறை வாழ்க்கையில் இது பலிக்காது என விமர்ச்சனம் வருகிறது. இருக்கலாம் - இல்லாமலும் இருக்கலாம்.

குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்

நம் குழந்தைதனமான மனது எங்கே தொலைக்கபடுகிறது. என் கருத்துபடி - போட்டி உருவாகும் மனோபாவ கல்வி தொடங்குவதிலிருந்து. பள்ளி கூடங்களும், மரங்களும், தோழமைகளும் நிறைய இளம்பிராய கதைகளை நம்முள் பதித்து இருக்கின்றன. அவற்றை பற்றிய கவனமே நம்மை மறுபடி குழந்தை பருவ மனதுக்கு செலுத்துகிறது. பள்ளிக்கு வெளியே கற்று கொண்டவை பள்ளிக்கு உள்ளே கற்று கொண்டதை விட அதிகம் - ஏனெனில் அது வாழ்க்கை கல்வி. நீ முதலா நான் முதலா என்ற இலக்கு நிர்ணயிக்கபட்ட இடத்தை மட்டுமே சென்றடைய வைக்கும் கல்வி அடிமைகளை உருவாக்குகிறது. கல்வி பற்றியும் பள்ளிகூடங்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் மிக அற்புதமான நினைவுகளை கொண்ட புத்தகமாக "இரகசைத்த காலம்" என்ற புத்தகத்தை கருதுகிறேன். பெரும்பாலும் 40 வயது கடந்த சில பிரபலங்கள் - கிராமமும் நகரமும் கொண்ட வாழ்க்கைமுறையில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கல்வி என்பது அடிப்படையான ஒரு தகுதி எனினும் அதில் கற்று கொள்ளும் விஷயங்களை விட - பெற்று கொண்ட பட்டமும் மதிப்பெண்களும் ஒரு மனிதனை முடிவு செய்வது தவறென கருதுகிறேன். இன்றைய குழந்தைகள் நிறைய கற்று கொள்கிறார்கள் - பள்ளி மட்டுமல்ல, மற்ற ஊடகங்களும் நிறைய கற்று கொடுக்கின்றன. விளையாட்டோ, கலையோ, ஒருங்கிணைக்கபட்ட வாழ்க்கைமுறையோ இந்த கல்வியில் குறைவாக இருக்கிறது. ஒரு புள்ளியில் விளையாட்டு என்பது உடல்சார்ந்த விஷயமாக இல்லாமல் மூளை சார்ந்த விஷயமாகவும் போகிறது. 25-30 வயதில் கார்பரேட் யுக ஆரோக்கிய குறைவு என்பது சராசரியாகிவிட்ட காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகளை பெரியவர்கள் போல சிந்திக்க வைக்கிறோம். அப்படி பேசுவது ரசிக்கபடுகிறது - அப்படி ரசிக்கபடுவதனாலேயே அவர்கள் மேலும் பெரியவர்கள் போல நினைத்து கொள்கிறார்கள். அவர்களின் கேள்விகளில் குழந்தைதனத்துக்கு பதிலாக அறிவுஜீவிதனம் வெளிப்படுகிறது என்பது பெற்றோரின் பெருமையாக போகிறது. இதற்க்கு மருந்து மாத்திரை எல்லாம் வந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை ஆண்களாகவும் பெண்களாகவும் வளர்க்கிறோம் - குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்கும் எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. குழந்தைகள் இல்லாத ஒரு வெற்றிட உலகம் மிக அருகில்தான் இருக்கிறது. அங்கே பூக்களை பறிக்கவும், பட்டாம்பூச்சி பிடிக்கவும், பந்து விளையாடவும், கதை சொல்லவும் யாரும் இருக்கமாட்டார்கள் - ஒரு பெரிய கல்லறை இருக்கும் - இங்கே குழந்தைபருவம் புதைக்கபட்டுள்ளது என்ற வாசகத்துடன்.

Wednesday, March 19, 2008

நடிகனின் மரணம்.

இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர் வழங்கியது உண்மை. யாருடனும் ஒப்பிட முடியாத அற்புத கலைஉலக பங்கீடு கொண்டவர். பலருக்கும் நல்ல நண்பர். தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மொழி வேறுபாடு இன்றி பாராட்டபட்டு இருக்கிறார்.

காதல், மனைவி, குழந்தை, ஆன்மீகம், புத்தகங்கள் என வாழ்க்கை சுகமானதாக இருந்திருக்கலாம். குடிப்பழக்கம் உடல்நிலையை கெடுக்க, மணவாழ்க்கையின் கசப்பு மனநிலையை கெடுக்க.. ஒரு நல்ல கலைஞன் ..இன்று மரணமடைந்து விட்டான்.

அவர் நடித்த திரைப்பட வரிசை மற்றும் சிறு தகவல்கள் இங்கே: http://en.wikipedia.org/wiki/Raghuvaran

Monday, March 17, 2008

வீடுகளும் நினைவுகளும்..

சமீப காலங்களில் அலுவகம் செல்வதே ஒரு பயணம் போலதான் இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூட அரைமணியும் ஆகும் - அது போக்குவரத்து நிலவரம் பொருத்து. இந்த பயணம் நிறைய படிக்கவும் பார்க்கவும் நேரம் கொடுக்கிறது. அப்படி ஒரு விஷயம்தான் இன்று பகிர்ந்து கொள்ள தோன்றியது.

நாம் வாழ்ந்த வீடுகளை பற்றிய நினைவுகள் ஏறத்தாழ எல்லாருக்கும் இருக்கும். அந்த வீடு தந்த பாதுகாப்புணர்வும், பால்ய சந்தோஷங்களும் இன்னும் பல ரகசியங்களும்.. மேலும் கொஞ்சம் வலிகளும்.. அப்படிதான் எல்லாருக்கும் வீடுகள் இருக்கின்றன.

திரிசூலம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பழைய வீடு இருக்கிறது. அந்த இடத்தை தாண்டும் போதெல்லாம் மனசு வலிக்கும். பிரமாண்டமான வீடு. யாரோ ஒரு குடும்பம் அங்கு வாழ்ந்திருக்கலாம். இன்று மிகவும் பாழடைந்து இருக்கிறது. இது போல நிறைய வீடுகளை பார்த்திருப்போம். அங்கு வாழ்ந்த குடும்பங்களை பற்றி எவ்வளவு யோசித்திருப்போம் என தெரியவில்லை. அங்கு வாழ்ந்த சிலர் இன்னும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இந்த வீட்டை பற்றிய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த வீடு எத்தனையோ பிறப்புகளையும் இறப்புகளையும் நினைவுகளாக கொண்டிருக்கலாம். கிராமங்களில் சில பழைய வீடுகள் உண்டு, தாழ்வாரமும் தோட்டத்து துளசி செடியுமாய்.. ஆனால் யாராலும் கவனிக்கபடாமல். திருமணங்களும், காதலும் ஏன் மரணமும் கூட அந்த வீடு சுவர்கள் கண்டிருக்கும். பழைய வீடுகள் ஒரு வகையில் வயசாளி உறவினர்களை போல - அவர்களை பார்க்கும் போதெல்லாம் நிறைய நினைவுகள் வரும்.. சில சந்தோஷமானவை - சில துக்கமானவை. எனினும் அவர்களின் நிலைக்கும் இன்றைய நிமிடத்தில் ஏதும் செய்ய முடியாது.. பழைய வீடுகளும் அது போலவே. சில வீடுகளை நான் உள் சென்றும் பார்த்திருக்கிறேன். இருண்ட கரி பிடித்த சமையல் அறைகள், நீளமான தாழ்வாரங்கள், சுவர்களில் கிறுக்கல்கள் கொண்ட படுக்கை அறைகள்.. பழைய காலண்டர்கள் இருக்கும் பரண்கள்.. பொம்மைகள் கிடக்கும் தோட்டம்.. யாரோ வைத்த பூச்செடிகள்.. ஒரு வாழ்வு அங்கு நிகழ்ந்த சுவடுகள் இருக்கும். கூர்ந்து கேளுங்கள்.. குழந்தைகளின் ஓசை, வாழ்ந்த பெண்களின் சிரிப்பு, ஆண்களின் சந்தோஷம்.. சொல்லபட்ட கதைகள்.. கொடுக்கபட்ட சுகங்கள் என .. வாழ்வு சுவடுகளை பதித்திருக்கும்.. ஏதோ ஒரு கவிதையில் படித்ததை போல - பாழடைந்த ஒவ்வொரு வீடும் ஒரு விசும்பலை கொண்டிருக்கிறது. அது அழுகையாக மாறும் வினாடி - ஒரு மரணம் போன்றது.

Wednesday, March 12, 2008

முருகன் என்றொரு ஓவியர்

முருகனை பாண்டிசேரியின் கடற்கரை சாலையில் நானும் தோழியும் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு சிவன் உருவத்தை தரையில் வரைந்து கொண்டிருந்தார். கொஞ்சமாய் குடித்திருந்தார் - எனினும் தெளிவாக பேசினார். அவர் பேச்சின் ஆதங்கம் தான் மதிக்கபடவில்லை என்பது மட்டும்தான். குடும்பம் உள்ளவர் - குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கபட்டு இருப்பவர். சினிமா, பேனர் துறை என தொழில் செய்து இருக்கிறார் - தொழிளாலர் சங்கத்தில் பதிவு செய்ய பணபலம் இல்லாமல் தெருவில் வரைகிறார். சுயமரியாதையும் கலை ஆர்வமும் அவருடன் பேசும் போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா முழுவதும் பயணம் செய்திருப்பதாக சொல்கிறார். ஏதோ ஒரு புள்ளியில் என் வாழ்வும் அவர் வாழ்வும் ஒன்றுபட்டு இருப்பதாக தோழியிடம் சொன்னேன். அவரை சந்திக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் - என் வாழ்வின் இழந்த சந்தோஷங்களை பற்றி நான் அவளுடன் பேசி கொண்டிருதேன். ஒரு வகை புலம்பலாக கூட இருந்தது அது. ஒருவகையான துறவற-வாழ்வுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் பற்றி நான் பேசிய கருத்துகள் - முருகனை பார்த்தவுடன் கொஞ்சம் அந்த வாழ்வை பற்றிய ஒரு பயத்தை தோற்றுவித்தது உண்மை.