அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Tuesday, March 31, 2009
நம்மால் முடியுமா..!
Wednesday, March 25, 2009
வங்காள திரைப்படங்கள்...
Tuesday, March 17, 2009
கபி கபி...
ஆரோக்கியமான நகைச்சுவை.
நம்மவர் மிக அருமையான ஒரு குணசித்திர வேடத்தை தந்தது. மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரு பிணம் - ஆனால் மிகவும் சிரிக்க வைத்த ஒரு பிணம். ஒரு காலத்தில் திலக நடிகர்கள் கூட தங்கள் படங்களுக்கு நாகேஷின் தேவை மிக அதிகம் என உணர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் கமல் மட்டுமே நாகோஷை சரியான முறையில் உபயோகபடுத்தி கொண்டார். சில ரஜினி படங்களும் உண்டு. சில திரைப்படங்களில் கொடூரமான ஆனால் கொஞ்சம் சிரிக்க வைக்கும் வில்லன் வேடங்களும் உண்டு. வேகமான - மற்றும் எதிர்வினை சார்ந்த நடிப்பும் வசன துள்ளலும் அவர் அடையாளங்கள். அது சார்லி சாப்ளின் மற்றும் ஜெர்ரி லூயிஸின் நடிப்பினை ஆழ்ந்து வாங்கி கொண்ட கவனங்கள். அன்பே வா, பாமா விஜயம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என வித்தியாசங்களை காண்பித்து இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி தாண்டி ஒரு இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்தவர் நாகேஷ். அது அவருக்கும் கே.பாலச்சந்தருக்கும் உள்ள இணக்கம். நடிகர்கள் ஜெமினிக்கும் தங்கவேலுவுக்கு ஒரு புரிதல் சார்ந்த நட்பு இருக்கும் - உதாரணம்: கல்யாண பரிசு. அத்தகைய புரிதல் எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் நாகேஷுக்கு இருந்தது. பல படங்கள் உதாரணமாக சொல்லலாம். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வைரமுத்து - தமிழகத்தின் சிரிப்பு இறந்து விட்டது என சொன்னார். மிகையாகாது. நல்ல நகைச்சுவை, வேகமான எதிர்வினை கொண்ட உடல் அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தேர்ந்த குரல் வளம் கொண்ட வசன உச்சரிப்பு, மேலை நாட்டு நாட்டிய வகை (சந்திரபாபு இதனை அற்புதமாக செய்வார்), அருமையான குணசித்திர நடிப்பு என பல்வகை அதிசயங்களை காட்டியவர் நாகேஷ். நிறைய பேசி கொண்டிருந்தோம். கொஞ்சம் படங்கள் வாங்கினோம். இன்னும் என்ன என்ன படங்கள் வாங்க வேண்டும் என பட்டியல் இட்டு கொண்டிருக்கிறோம். பார்க்க வேண்டும். தமிழில் நல்ல நகைச்சுவை இப்போதெல்லாம் காண கிடைக்காததாகி விட்டிடுக்கிறது.
Monday, March 16, 2009
எம்.என். நம்பியார்
Friday, March 21, 2008
காலம் கொள்ளும் வாழ்க்கை
Wednesday, March 19, 2008
நடிகனின் மரணம்.
இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர் வழங்கியது உண்மை. யாருடனும் ஒப்பிட முடியாத அற்புத கலைஉலக பங்கீடு கொண்டவர். பலருக்கும் நல்ல நண்பர். தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மொழி வேறுபாடு இன்றி பாராட்டபட்டு இருக்கிறார்.
காதல், மனைவி, குழந்தை, ஆன்மீகம், புத்தகங்கள் என வாழ்க்கை சுகமானதாக இருந்திருக்கலாம். குடிப்பழக்கம் உடல்நிலையை கெடுக்க, மணவாழ்க்கையின் கசப்பு மனநிலையை கெடுக்க.. ஒரு நல்ல கலைஞன் ..இன்று மரணமடைந்து விட்டான்.
அவர் நடித்த திரைப்பட வரிசை மற்றும் சிறு தகவல்கள் இங்கே: http://en.wikipedia.org/wiki/Raghuvaran
Monday, March 10, 2008
இசை பாடல்கள்
Monday, November 05, 2007
மனசு இழுத்து செல்லும் பாதைகள்
Thursday, March 22, 2007
திரைப்படமும் வாழ்வும்...
திரைக்கதை. படம் முழுவதும் பார்த்தால்தான் புரியும். ஜப்பானிய பெண்ணின் மனோதத்துவம் தொடர்ப்பான நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நிறைய விமர்ச்சனங்களை கொண்டுவரலாம். புரூப் - சிறிய ஆனால் சொல்ல தகுந்த கதை. ஒரு வகை மனோ வியாதியால் பாதிக்கபடும் தந்தையும், அவர் மகளுக்கும் கணிதம் சார்ந்த விஷயங்களில் இருக்கும் அதீத ஆர்வம் - அவர்கள் / அவள் எழுதும் கணித முறை - அது சார்ந்த - அவளுக்கும் அவள் சகோதரி மற்றும் காதலனுக்குள்ளான மனோரீதியான இடைவெளிகள் என கதை அமைகிறது. திரைப்படத்தின் வசனங்கள் ஒரு நல்ல விஷயம். திரைக்கதை அமைப்பு திரைப்படத்தின் சில காட்சிகளுக்கு பின்னரே புரியும்படி இருக்கிறது. இரண்டு படங்கள் இந்த வாரம் - டிவிடி புண்ணியத்தில்.
எந்த ஒரு சம்பவமும் - அது சார்ந்த கருத்துகளும் ஒவ்வொருவரின் சுய அனுபவங்களின் அடிப்படையிலேயே எடுத்துகொள்ளபடுகிறது என்பதற்க்கு சமீபத்திய ஒரு திரைப்படத்தின் இறுதிகாட்சியாக வரும் கற்பழிப்பு காட்சி உதாரணம். அந்த சம்பவம் - அந்த மண்ணில் நடந்திருக்கிறது - இன்னும் நடப்பதற்க்கான சாத்தியம் இருக்கிறது. தென் தமிழ் கிராமங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த சம்பவத்திற்க்கான சாத்தியமும்
இருக்கிறது - சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். சம்பவம் திரைப்படத்தில் காண்பிக்கபட்ட முறை பற்றிய கருத்துகளும் - அதற்க்கான இயக்குனரின் கருத்துகளும் பத்திரிக்கை செய்திகளாகிவிட்டாலும், திரைப்படம் மக்களிடையே சென்று சேர்ந்துவிட்டது. இதனை பற்றி பேசுபவர்களுக்கு நிறைய தீனியும் கிடைத்துவிட்டது.
Sunday, October 08, 2006
சினிமா - பார்வை கோளாறுகள்.
பாடல்களையும் சண்டை காட்சிகளையும் நீக்கிய பிறகு (பெறும்பாலும் இவை நிஜம் சார்ந்து இருக்காததால்). திரைப்பட விழா படங்களிலும் குறும்படங்களிலும் பெறும்பாலும் தெளிவான திரைக்கதையும் பாத்திர அமைப்புமே முன்னுறிமை பெறுகின்றன என்றாலும் இசை, ஒளிப்பதிவு, நடிப்பு ஆகியவனவும் கருத்தில் கொள்ள படுகின்றன. இன்றைய நிறைய தமிழ் படங்களை பார்க்கும் போது 3 நாள் பாம்குரோவில் ரூம் போட்டு, 4 புல்
பாட்டில் ரம்மும், மூன்று நேரமும் கோழி பிரியாணியும், பர்மா பஜார் டிவிடிகளும் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் வந்த ஒரு இயக்குனர் நடிகராக நடித்த வழக்கமான ரவுடியிஸ திரைப்படம் ராம் கோபால் வர்மாவின் திரைப்படத்தின் அப்பட்டமான காட்சி தழுவல். கதை கொஞ்சம் மாற்றபட்டு காட்சிகள் (கோணம், ஒளி உட்பட) அனைத்தும் அப்பட்டமான தழுவல். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யபடும் தமிழ் படங்கள்
இன்னொரு வகை கொடுமை.. லாஜிக் என்ற வார்த்தையை குழி தோண்டு நிறைய உப்பு போட்டு உயிரோடு புதைத்து விடுகிறார்கள்.. திரைக்கதையும் பாத்திர அமைப்பும் நிறைய கதைகளில் இருப்பதில்லை. நல்ல திரைப்படங்கள் நாவல்களில் இருந்து உருவாக்க படுகின்றன. அவை மனித வாழ்க்கையை, வாழ்வின் பிரதிபலிப்புகளை, மனித உறவுகளின் வலிமையை சொல்கின்றன. உலகின் எந்த போற்றபடும் திரைப்படத்தையும் எடுத்து
பாருங்கள். அவற்றில் இவை இருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் சித்தார்த்தா... அமைதி தேடும் துறவியையும் அவன் வாழ்க்கையும் சொல்லும் சுலபமாக புரிய கூட ஆங்கில படம். இன்னொரு திரைப்படம் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு மாற்றமடையும் மனித வாழ்க்கை பற்றி பேசும் ஒரு திரைப்படம்... ஒருவன் தொழில் அதிபர், ஒரு பெண் - கலெக்டர் மனைவி - இன்னொருவன் நக்ஸலைட்...இவர்களின் உறவு சிக்கல்கள்.. அரசியலும் நிஜமும் கலந்த பின்னனியுல். மற்றுமோர் திரைப்படம் - அகதியாக வந்து மக்கள் தலைவனாக உயரும் ஒரு கருப்பின சமூக கதை... இந்த திரைப்படங்கள் எந்த வித கதாநாயகதனமோ கிடையாது... பாடல்கள் பிண்ணனியில் மட்டும்.. தெளிவான அதிக புத்திசாலிதனம் காட்டாத வசனங்கள். நல்ல ஒளி ஒலி அமைப்பு... ஆரவாரமில்லாத நடிப்பு.. ஒரு திபேத்திய திரைப்படம் சென்னையில் திரையிடபட்ட போது அதில் வரும் 15 நிமிட உடலுறவு காட்சி மட்டுமே பெரும்பாலும் பேசப்பட்டது உச்சகட்ட முட்டாள்தனம். பெரும்பாலும் இந்த திரைப்படங்களை திரையிடும் அரங்குகளில் கூட்டம் இருப்பதில்லை. யாராவது சில காதல் ஜோடி (காந்தி மண்டபத்திலோ வள்ளுவர் கோட்டத்திலோ இடம் கிடைக்காதவர்கள்)அல்லது கொஞ்சம் தாடி வைத்த திரைப்பட ஆர்வலர்கள், அபூர்வமாக சில வெளிநாட்டினர்...மற்றபடி யாரும் ஓடி விளையாடும் அளவுக்கு இடம் கிடக்கிறது. செலவுக்கு பயந்து என் போன்ற ஆசாமிகள் டிவிடியில் திரைப்படங்களை பார்ப்பதும் காரணமாக இருக்கலாம்... நல்ல சினிமா நல்ல நாவலில் இருந்து கிடைக்கிறது. நல்ல நாவல் விற்பது இல்லை.
Sunday, July 30, 2006
போபால் எக்ஸ்பிரஸ்..
Sunday, May 28, 2006
சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் பிடித்தது..
சோக்கர் பாலி
பனாரஸ்
வாட்டர்
நான்கும் இந்தி திரைப்படங்கள்.. DVD புண்ணியத்தில் சென்ற வாரம்
பார்த்தேன்.. அதில் முக்கியமாக ரெயின் கோட் என்ற திரைப்படம் ஒரு இரவு
தூக்கத்தை முழுக்க கெடுத்து விட்டது... உங்கள் காதலியை அவள்
திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் கழித்து பார்த்தால் நீங்கள்
எப்படி நடந்து கொள்வீர்கள்.. அவள் எப்படி நடந்து கொள்வாள்.நீங்கள்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்படி உங்கள் சூழ்நிலைகளை மறைத்து
நடிப்பீர்கள்.. பொய் சொல்வீர்கள்.. ஒருவருக்கு ஒருவர் எப்படி உதவுவீர்கள்.. உங்கள்
சூழ்நிலைகளை தாண்டு அடுத்தவரை எப்படி கவனிப்பீர்கள்..
அடுத்தவரது உறவுகளை எப்படி விசாரிப்பீர்கள்.. உங்கள் பொறாமைகள்
வெளிப்படுமா...? உங்கள் இயலாமைகள் வெளிப்படுமா..? பழிவாங்கும்
மெல்லிய நடவடிக்கைகள் இருக்குமா..? போலி பந்தாக்கள் இருக்குமா...? இந்த
திரைப்படம் சொல்லும் நிகழ்ச்சிகள் நிச்சயம் என் வாழ்விலும் ஒருநாள் நடக்கும்..
மனது கொஞ்சம் கனத்து விட்டது இந்த திரைப்படம் பார்த்த பிறகு.
Sunday, March 26, 2006
" ஜன ஆரண்ய " 1977 - 2006
Tuesday, May 24, 2005
நல்ல சினிமா...
தொழில். ஒரு சாதாரண ரசிகனின் நிலையிலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பொதுவில் இன்று சினிமாவின் தொழிற்நுட்பம் சார்ந்த அறிவு மீடியாக்களின் புண்ணியத்தில் கொஞ்சம் பேருக்கு இருக்கிறது. லைட்டிங், எடிட்டிங், கேமரா, காஸ்டீயும், கவிதை சார்ந்த பாடல்கள், சண்டைகள் எடுக்கபடும் முறை என பேசவாவது தெரிகிறது. எனினும் நல்ல சினிமா எது..? இந்த கேள்வியின் பதில்...!!! பல நேரங்களில் குழப்பம்தான்.
ஒரு முறை நண்பர்களுடனான விவாதத்தில் நல்ல சினிமா பழைய படங்கள்தான் என்ற கருத்து வந்தது..சிவாஜியும், எம்ஜியாரும், ஜெமினிகணேசனும் மற்றும் கருப்பு வெள்ளை கால திரைபடங்கள் மட்டுமே நல்ல சினிமா என்றார்கள்.. நான் மகேந்திரனின் உதிரிப்பூக்களையும், மெட்டி, நண்டு போன்ற படங்களை குறிப்பிட்டேன். துரதஷ்டவசமாக யாரும்
அந்த திரைப்படங்களை அறிந்திருக்கவில்லை. பாலுமகேந்திராவின் ஓடாத படங்களையும் யாரும் அறிந்திருக்கவில்லை. வியாபாரரீதியாக ஓடும் திரைப்படங்கள் நல்ல திரைப்படங்களாக ஒத்து கொள்ளபடுவதில்லை. ஓடாத படங்களே நல்ல படங்களாம்... அந்திமந்தாரை, ஹேராம், ஆறிலிருந்து அறுபதுவரை, அன்பே சிவம்... என அவர்கள் வரிசைப்படுத்தினார்கள்... இக்காலங்களில் அழகியும், ஆட்டோகிராப்பும் நல்ல திரைப்படங்களாக
ஒத்துகொள்ளபடுபவை ஆனால் எப்படியோ வசூலும் கொஞ்சம் கொடுத்தவை. நான் நிழல்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே, வானமே எல்லை, இது நம்ம ஆளு, சிந்துபைரவி, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், கேளடி கண்மணி போன்றவையும் நல்ல படங்கள் என்றேன். எல்லாவற்றிலும் கருத்தும் நல்ல திரைப்படமாக்கலும் உள்ளது. எனினும் வசூலும் கொடுத்தது. குமுதம் அரசு பதில்களில் ஒருமுறை "தேசம்"
திரைப்படம் பற்றிய ஒரு கேள்விக்கு.. " நல்ல கருத்துகளை சொல்வதற்று ஒரு திரைப்படம் தேவையில்லை என்று பதிலளிக்கபட்டிருந்தது.. " .. அப்புறம்.. மலையாளமும் பெங்காலியும் நல்ல படங்களை என்று பேச்சு திரும்பியது... ஏனோ தமிழ் படங்கள் பற்றி .... படம் பார்க்கும் முறை பற்றி தெளிவான எண்ணங்கள் எல்லை. பதேர்பாஞ்சாலி, செம்மீன் படங்களை யாரும் பார்க்காமலேயே கேள்வி ஞானத்திலேயே அவை நல்ல படங்கள் என
விளம்பரபடுத்துகிறார்கள். தமிழின் நல்ல திரைப்படங்கள் மிக சிலருக்கே தெரிந்துள்ளன. நண்பர்களுடன் ஒரு நாள் ஒரு விசிடி கடைக்கு போய் "Mr. & Mrs. Iyar" என்ற திரைப்படத்தின் விசிடி பற்றி விசாரிக்கையில்... "மலையாள செக்ஸ் சினிமா சிடி எல்லாம் கிடையாது சார்" என்றார் கடைக்காரர்.. தலையில் அடித்துகொண்டு திரும்பினோம். ராகுல் போஸையும், கொங்கனா சென்னையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த நான் தயாரில்லை. நான் விரும்பிய திரைப்படங்கள் பற்றி பேச நிறைய உள்ளது. பின்னர் ஒருநாள் பேசலாம்.
சரி உன் கருத்து என்ன என்று கேட்பவர்களுக்கு.. யதார்த்தமும்...வாழ்வின் அற்புதங்களையும் அனுபவங்களையும் சொல்லும் எந்த மொழி சினிமாவும் நல்ல சினிமாதான்.
அப்புறம் சமீபத்தில் படித்ததில் பிடித்தது.
ஒரு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இயக்குனர் மகேந்திரன் " மனதில் எதிர்பார்ப்பும், அதற்கேற்ற வேகமும் இருக்கிறதா..? நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை அதற்கேற்ற போக்கில் செய்து கொண்டிருங்கள். அதன் விளைவு எப்படியாவது வந்துதான் தீரும். கால ஓட்டத்தில் சற்று பிந்தலாம். அவ்வளவுதான்... "
அப்புறம் சல்மாவின் கவிதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கவிதை
விபத்தில் இருந்து மீண்ட நாளின் உடை
நாம் சந்தித்து கனிந்திருந்த
வேளையில் பகிர்ந்திருந்த உணவு
நெருங்கியவரின் மரண செய்தி
வந்து சேர்கையில்
என் கண்களை கவர்ந்த
சிவப்பு வண்ண கார்
வியப்பாகதானிருக்கிறது
பொருட்களின் மீது
காலம் பதிந்து நிலைபெறுமென்பது...