அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 14, 2006

நர்த்தகி....

எனக்கு அந்த பெண் அறிமுகமானது ஒரு திரைப்பட விழாவின் புத்தக பகுதியில். ஒரு நர்த்தகி என்று அறிமுகபடுத்தபட்டாள். மிக இயல்பாக நட்பு உருவானது. மிக அழகான நேர்த்தியான உடலமைப்பு..நளினம்....இருவருக்கும் பொதுவான பிடித்த நிறைய விஷயங்கள் இருந்தன.. பின்னர் இரவு கிளம்பும் போது தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிடும்படி கேட்டாள். என்னிடம் எந்த ஊர்தியும் கிடையாது..சரியாக எந்த ஊர்தியும் ஓட்டவும் தெரியாது.. பின்னர் ஆட்டோவில் வந்தோம்.. இருவருக்கும் பொதுவான தோழியும் உடன் இருந்ததால் பேச்சும் கருத்தும் சகஜமாகவே இருந்தது. பிரியும் போது கை கொடுத்து பிரிந்தோம்.. பின்னர் சில நாட்கள் தொடர்ப்பு இல்லை. பின்னர் ஒருமுறை பொதுவான தோழியை பார்க்க நேர்ந்தது..பேச்சினூடே அவள் சொன்ன ஒரு விஷயம் கொஞ்சம் வியப்பையும் நிறையவே பெருமையையும் கொடுத்தது.. எங்கள் நர்த்தகி ஒரு மூன்றாம் பாலினம் என்ற செய்திதான் அது. தன்னை பெண்ணாக உருவகபடுத்தி கொண்டுள்ளதாக சொன்னாள்..உடலாலும் மனதாலும்.. பின்னர் ஒருமுறை அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.. தன்னை ஒரு பெண்ணாகவே அறிமுகபடுத்திகொண்டு அவளும் எங்கள் பொது தோழியும் தங்கியுள்ள இடத்தை சொன்னார்கள்...சில நாட்கள் கடற்கரையில் சந்திப்பதுண்டு.. நல்ல உறவும் நட்பு எங்களிடையே உள்ளதை நாங்கள் இயல்பாகவே உணர்கிறோம்.. நான் என் குறும்பட ஆர்வங்கள் பற்றி பேசினேன்.. அவள் சார்ந்துள்ள வருமானம்சாராத ஒரு அமைப்பை அறிமுக படுத்தினாள்.. சில நாட்கள் பல விஷயங்களை நெடுநேரம் பேசுவோம்.. இசை..நாடகம்...சினிமா..புத்தகங்கள்.. பயணங்கள்.. அவளை அவளாகவே நாங்கள் ஏற்று கொண்டு உள்ளோம்.. என்னையும் என் தோழியையும் அவள் ஏற்று கொண்டதை போலவே.. இந்த நட்பும் அது சார்ந்த விஷயங்களும் மிக அற்புதமாக உள்ளன.. இது போன்ற ஒரு தோழமையின் கால கட்டங்கள் இன்னும் எத்தனை காலம் வரை என்று சொல்ல முடியாது.. எனினும் இது ஒரு அற்புதமான தோழமையாக கருதுகிறேன்..

Sunday, May 07, 2006

தீராநதி கவர்ந்தவை

ரமேஷ் - பிரேமின் 'கூத்தாண்டவன்' சிறுகதை... - தற்கொலைக்கு முயலும் ஒரு ஆணின் வாழ்க்கையும், அவன் நண்பனுடன் அவன் கொள்ளும் உறவுகளும், அவன் தாயின் கற்பினை கொள்ளை கொள்ளும் சந்தர்ப்பவாத சூழல்களும், கூத்தாண்டவர் கோவிலுக்கு வேஷம் கட்டி கொண்டு போகும் அவன் தந்தையின் கதையும்.. தன்னை ஒரு இருபாலின உறவு சேர்க்கையாளனாக அவன் உணர்வதும், சமூகத்துக்கு அவன் பார்வையும்...மெல்லிய தான் சார்ந்த உறவுகளின் மேல் கொள்ளும் பொறாமையும் என கதை ஒரு தற்கொலைக்கு உண்டான சூழல்களை சொல்லி போகிறது... தமிழில் இது போன்ற கதைகள் அதிகம் கிடையாது என்று நினைக்கிறேன்.. ரமேஷ் - பிரேமின் சில கதைகளை படித்து இருக்கிறேன்... அதீதமான கற்பனை சவாரிகளும் காமமும் கலந்தவை அவர்...மனித மனங்களின் இருளில் படிந்து உள்ள உதிர்ந்த சுவர்களை போல...

சுகிர்தராணியின் செந்நிறம், மீட்சி மற்றும் ஆயுதம் கவிதைகள்...

கூகை என்ற புத்தக விமர்ச்சனம்... - தலித் இலக்கியத்தில் ஒரு வித்தியாசமான கதை என்று சொல்லபடுகிறது...

எஸ். ராமகிருஷ்ணன் - எழுதியிருக்கும் தென் அமெரிக்க திரைப்படங்களை பற்றிய பார்வைகள்... க்ளோபர் ரோச்சா, வால்டர் செலஸ், கார்லோ கமுராட்டி ஆகியோரின் திரைப்படங்கள் அலசபட்டு உள்ளன.. முக்கியமாக சே-குவாராவின் மறுபக்கத்தை காட்டும் 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்'.

லீனா மணிமேகலையின் ரகசிய உறவுகள் பற்றி ஒரு கவிதை..மெல்லிய காமம் சொன்னாலும் கவிதையின் அர்த்தம் உள் இறங்குகிறது.

சந்தைக்கு வந்த கிளி...

ஒரு முறை துடியலூர் சந்தைவழியாக பெரியநாயக்கன் பாளையம் செல்ல வேண்டியிருந்தது.. நண்பர் வீட்டில் மனைவி ஊருக்கு போயிருந்ததால்...சொந்த சமையல்...துணைக்கு நாங்களும்..போகும் வழியில் சந்தையில் காய்கறி வாங்கிகொள்ள திட்டம்.. நல்ல கூட்டம் அன்று. காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு.. உள்ளே நுழைந்தோம்... அற்புதமான சந்தை...கொஞ்சமே விலையில் நல்ல காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருள்கள்.. இப்படி எல்லா கிராம விளைச்சலும் சரியான முறையில் இடை தரகர்கள் இல்லாமல் வியாபரம் ஆனால்...இலவச பொருள்களில் அரசியல் நடத்தும் முதலைகளை துரத்திவிடலாம்..

சந்தையில் ஓரம் ஒருவர் கிளி கூண்டு வைத்து உட்கார்ந்து இருந்தார்...வயதானவர்...வெள்ளை வேட்டி சட்டையில்...தலையில் முண்டாசு...அடர்த்தியான வெள்ளை மீசை..பட்டை சந்தனம் என்று நல்ல விளம்பரம்... ஒரு சிறிய அட்டையில்... "கிளி ஜோஸ்யம்... 2 ரூபாய்... " என்று இருந்தது.. கூட வந்த நண்பர் அங்கேயே நின்று விட்டார்.. சரி அவருக்காக பார்க்கலாம் என்று போனால்...கிழவர் பேச்சு பிரமாதம்.. பயங்கர வரவேற்ப்பு... எங்களை காட்டி கூட்டம் வேறு சேர்த்துவிட்டார்.. எங்களை சுற்றி 10 - 15 பேர் கூடிவிட்டார்கள்..கிளிக்கு பேர் ஐஸ்வர்யா...!!! அது வெளியே வந்து ஒரு வித வன்மத்துடன் எங்களை பார்த்தது.. 4- 5 சீட்டுகளை கலைத்தது.. பிறகு ரொம்ப பெருமையாக ஒரு சீட்டைஎடுத்து கொடுத்துவிட்டு.. கிழவர் கையில் இருந்து 2 நெல்லு மணிகளை கொத்தி கொண்டு அசுவரஸ்யமாக நடந்து கூண்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது.. நண்பருக்கு வந்திருந்தது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் படம்... கிழவர் பாட்டெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டார்.. "தம்பி உனக்கு ரெண்டு மனைவி.. " என்று வேறு பாட்டெல்லாம் பாடம் கூட்டம் மெல்ல சிரிக்க ஆரம்பித்து விட்டது.. எங்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடம்.. அவசர அவசரமாக கையில் கிடைத்த சில்லரையை அவருக்கு கொடுத்துவிட்டு.. காருக்கு ஓடி வந்தோம்..

சில நேரங்களில் இந்தகைய ஜோசியர்களிடன் ஏற்படும் அனுபவம் நல்ல ரசனைக்குரிய விஷயமாக இருக்கும்...சில நேரங்களில் எரிச்சலும் வருவதுண்டு.. எனினும் அந்த கிழவரின் விஷயங்களை சொல்லும் முறையிம், வார்த்தை பிரயோகங்களும் அற்புதமாக இருந்ததை மறுக்க முடியாது...

சில வருடங்களுக்கு பின்னர் அந்த நண்பரை பார்த்த போது... பம்பாயில் இன்னொரு பெண்ணுடன் சமீபகாலத்தில் தொடர்பு ஏற்பட்டு தற்போது இரு மனைவியருடன் வாழ்வதாக சொன்னார்... அது அவருக்காக சொல்லபட்ட ஜோஸ்யமா...இல்லை ஜோஸ்யர் சொன்னதுக்காக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரா...புரியவில்லை..

தண்டு மாரியம்மன் திருவிழா

இந்த முறை கோவைக்கு சென்றிருந்த போது தண்டு மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருந்தது...மாலை மெல்ல ஒரு நடை சென்றோம்.. நல்ல அலங்காரம்..நல்ல கூட்டம்.. கோவை பெண்களின் உடையலங்கார மாறுதல்களை ரசித்து கொண்டே ( சைட் அடிப்பதற்க்கு இன்னோரு பெயர்...) கோவில் சுத்தி வந்தோம்.. ரோட்டை மறித்து பந்தல் போட்டிருந்தார்கள்... ஆர்கெஸ்டிரா என்று ஒரு சமாச்சாரம்.. கொஞ்சம் நின்று பார்ப்போம் என்று ஒரு பழரசம் வாங்கி கொண்டு கவனித்தோம்...அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர்...முதலில் புன்னகைத்தார்...பதிலுக்கு புன்னகைத்தது தப்பாக போனது... மனிதர் ஆரம்பித்து விட்டார்..."தம்பி ... நான் இந்த கோவிலுக்கு எத்தனை செய்ஞ்சுருகேன்...அந்த காலத்திலே..." என்று.. "இந்த காலத்து பொண்ணுகளுக்கு துணி போடவே கஷ்டமா இருக்கு போல தம்பி.. என்ன துணி இது...சகிக்கில " புலம்பல் வேறு.. பிடிச்சா பாரு.. பிடிக்கலேனா மறைக்காம நகர்ந்து போலாம்ல.. என்று சொல்ல முடியவில்லை.. முந்தய ஆச்சார உடை அலங்காரங்கள் மறைந்து கொஞ்சம் கவர்ச்சி இருந்தது மறுக்க முடியாது எனினும்..இன்றைய காலங்களில் இது எல்லாம் பேச முடியாது.. எனினும் அவர் புலம்பலையும் பேச்சையும் ஒரு கூட்டம் நின்று ஆமோதித்து கொண்டு இருந்தது... எல்லாரும் 40 வயதை தாண்டியவர்கள்... கடவுள்,பக்தி, கற்பு...என்றெல்லாம் பேச்சு வளர...என் கையில் இருந்த பழரசமும் தீர்ந்து போகும் நேரத்தில் நல்ல நேரம்...கச்சேரி ஆரம்பமானது.. ஆரம்பத்தில் ஒரு கடவுள் பாட்டு.. அப்புறம் ஒரு கடவுள் பாட்டு... அப்புறம்.. " தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா... " என்று ஒரு பெண் அபஸ்வரமாய் பாட ஆரம்பிக்க... இந்த பாட்டுக்கு அர்த்தம் என்ன..? கோவில் திருவிழாவில் இது சரியா என்ற உள் கேள்விகளோடு திரும்பி பார்த்தால்.. அந்த மானஸ்தர்கள் யாரையும் காணோம்...எல்லாம் ஆர்கஸ்டிரவின் முதன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்...

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்.

சென்ற திங்கள் கிழமை காலை 6 மணி. மொபைல் போனில் அலாரம் அடித்ததும் திடுக்கிட்டு கண் விழித்து சைட்பர்த்திலிருந்து குதித்து இறங்கி கண்ணை கசக்கி கொண்டு ரயிலின் கதவுக்கு வந்தால்...ரயில் நகரவே இல்லை. இன்னும் சிலர் கதவோரம் நின்று கொண்டு இருந்தார்கள்.. "எங்க சார் இருக்கோம்..."என் கேள்விக்கு நக்கலாக பதில் வந்தது... "அத கண்டுபிடிக்கத்தான் நாங்களும் பார்க்கறோம்.." கொஞ்சம் தெலுங்கு வாசம்..பதில் சொன்ன ஆசாமி கொஞ்சம் ஆஜானுபாவமாக இருந்ததால் மேற்கொண்டு பேசும் எண்ணத்தை கைவிட்டேன். பின்னர் மெல்ல ரயில் நகர்ந்து ஒரு ரயில்வே கேட் முன்னால் நின்றது.. வெளியே இருந்த பெயர் பலகை 'சாம்பல்பட்டி' என்றது. இந்த ஊர் எங்கே இருக்கிறது...??? பக்கத்தில் ஒரு பெரியவர் சொன்னார்.. ஜோலார் பேட்டைக்கு முன்னால்... ரயில் ஏன் நகரவில்லை.. பதில் இல்லை.. டி.டி.ஆர்.. ஆளே காணவில்லை.. மணி 8 ஆகும் வரைக்கு அங்கேயே இருந்த ரயில் மெல்ல மெல்ல நகர... பசி வயிற்றை பிறண்ட ஆரம்பித்துவிட்டது.. 1:25ரூபாய்க்கு கூட விலை பெறாத 4 இட்டிலிகள் 20 ரூபாய்க்கு வாங்கினோம்...எல்லாம் ரோட்டோர திடீர் வியாபார்கள் கைவண்ணம்..ரயில் நிற்பதையும், மக்கள் பசி முகங்களையும் பார்த்தவர்களின் வியாபார நோக்கம்...20 ரூபாய் அதிகம் என்று யாரும் பேரம் பேசவில்லை.. மாறாக ரயிலில் அதிகம் பேர் வாங்கினார்கள்..கை கழுவும் போது என்னுடன் நின்ற ஒருவர் சொன்னார்..."விலை அதிகம் என்றாலும் நாம் வாங்குவோம் என்று அவர்களுக்கு தெரியும்...நாம் நிறைய சம்பாரிப்பவர்கள் என்பது அவர்களின் கருத்து..தவறில்லை...ஆனால் இந்த சம்பாதனைக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே படிப்பு, லஞ்சம், சுய தேவைகளின் பலி என நாம் இழந்திருப்பதையும் அவர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்..." ரயில் அன்று முழுவதும் மெல்ல மெல்ல நகர்ந்து ஜோலார்பேட்டைக்கும் அரக்கோணத்துக்கும் இடையே உள்ள தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்தது.

நல்ல வெயில். சரியான உணவு வசதிகள் கிடையாது. இரவு ரயில் ஆகையால் உணவு சமைக்கும் பெட்டியும் ரயிலில் இல்லை. யாரும் உணவு பொருள்களும் கொண்டு வரவில்லை. தண்ணீரும் கிடையாது.. எல்லா ரயில் நிலையங்களிலும் மே முதல் தேதிக்காக "உழைப்பாளர் தின" விடுமுறை.. சுகாதாரமில்லாத கிராம ரயில்நிலைய தண்ணீரை குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து சிப் சிப்பாக தண்ணீர் குடித்து கொண்டு இருந்தார்கள்..10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் 25 ரூபாய்.. பழங்கள் கிடையாது. ஏ.சி. பெட்டியில் காற்று வசதியும் இல்லாததால் எல்லாரும் வெளியேதான் நின்று கொண்டு இருந்தோம்.. என்னுடன் ஒரு ஆங்கிலேய பெண் பயணம் செய்தால்..கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து கொண்டு இருக்கிறாள். அரைமணிக்கு ஒரு சிகரெட்..கொஞ்சம் தண்ணீர்..வேறு எதுவும் சாப்பிடவில்லை...முதலில் புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பேச்சில் நின்றது. ஒரு அந்துவான காட்டில் ரயில் நின்ற போது நானும் அவளும் அருகில் தெரிந்த நீர் தேங்கியுந்த நீர் நிலைக்கு நடந்தோம். வெயிலில் தண்ணீரின் மேல் பகுதி சூடாக இருந்தாலும் கலைத்து விட்ட பின்னர் தண்ணீர் குளுமையாக இருந்தது.. குடிக்க முடியாது எனினும் முகம் கழுவ முடியும்...நிறைய பேசினாள்...கொஞ்சம் கோவமும் அவள் பேச்சில் இருந்தது..இத்தகைய சூழலில் தண்ணீரும் உணவும் கூட ஏற்பாடு செய்ய முடியாத ரயில்வே டிபார்மெண்டை அவள் திட்டிய போது எனக்கும் பதில் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக என் பகுதியில் இந்த சிலர் நட்பாகிவிட்டோம்...சுருதி என்று ஒரு குட்டி பெண்..பயங்கர குறும்பு... பயங்கர சத்தம்... வயதான சிலர்...பழங்கால கதைகள்...பசி மறக்க வேண்டுமே.. !! அரக்கோணத்தில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டதால் கால தாமதம் ஆகிறது என்றார்கள்..ஒரு வழியாக ரயில் ஊர்ந்து சென்னை சென்ரலில் நுழைய எல்லாரும் அவரவர் பெட்டிகளை தயார் செய்தோம்.. அந்த ஆங்கிலேயெ பெண் ரயில் கொடுக்கபட்டிருந்த போர்வைகளையும் தலையணைகளையும் ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தாள்...