என்ன படிக்கிறீங்க...? எஞ்சினீரிங்... கம்யூட்டர்...ஜாவா...மைக்ரோசாப்ட் .நெட்... பொதுவில் எல்லா மாணவர்களுக்கும் ஒரே எண்ணம் சமூகத்தாலும் குடும்பத்தாலும் வளர்க்கபடுகிறது. அது பணம் சம்பாரித்தல். இது படித்தால் பணம் அதிகம் கிடைக்குமா...அது படித்தால் நிறைய பணம் கிடைக்கும் வேலை கிடைக்குமா.. இது எல்லாம் படித்தால் வெளிநாடு போகலாமா.. அது எல்லாம் படித்தால் பெரிய சம்பள பெண் கிடக்குமா..கேள்விகள்...கேள்விகள்...
அப்துல்கலாம் ஒரு முறை சொன்னார்... நிறைய விஞ்யானிகளை தேசம் எதிர்பார்க்கிறது என்று... ஒட்டுமொத்த பூமியின் தேவைப்படுகின்ற பொறியியலாலர்கள் ஒரு பக்கம் இருக்க... நம் நாடு மும்மடங்கு பொறியியலாலர்களை ஒவ்வொரு வருடமும் உருவாக்கி கொண்டிருக்குறது. அறிவியல் சார்ந்த படிப்பை முடித்தவர்களும் டெக்னிகல் பக்கம் சாய்வதற்கு சம்பளபணம் ஒரு காரணமாகிறது. கணிதமும், வேதியலும், மற்றும் அறிவியலும் படித்தவர்கள் இந்தியாவில் டெக்னிக்கல் வேலை செய்து கொண்டிருக்க, வெளிநாடுகளில் டெக்னிகல் வேலைகள் குறைத்து அறிவியலை வளர்க்கிறார்கள். மேலும் 250 வகையான டெக்னிகல் அல்லாத வேலைகள் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் அறிமுகபடுத்தபட்டு இருக்கின்றன. அவற்றில் மன அழுத்தம் கிடையாது. போதுமான சம்பளம் உண்டு (அளவுக்கு மீறி கிடையாது... நிறைய பேர் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதை பெருநகரங்களில் காண்கிறேன்). நல்ல வாழ்க்கை முறை உண்டு. குடும்பத்துடன் செலவிட நேரம் உண்டு. நல்ல உணவும் உடல் உழைப்பும் ஆரோக்கியமும் இருக்கிறது. வாழ்க்கையின் உண்மையை அனுபவிக்கிறார்கள். அங்கேயும் இங்கேயும் இது எல்லாம் இல்லாமல் இருப்பவர்கள் நம் இந்திய தேச உழைப்பாளிகள்தான். மூளையை மட்டுமே முதலீடாக்கும் அறிவாளிகள்தான்... கல்விசார்ந்த நண்பர்கள் இருந்தால் இது பற்றி மேலும் விவாதிக்க விரும்புகிறேன். நம் தேசத்தில் மேலும் டெக்னிகல் சாராத வேலை வாய்ப்புகளைபற்றி சில கல்லூரிகளில் பேசிய போது நல்ல வரவேற்ப்பு இருந்தது. வெகு அரிதாக சில மாணவர்கள் இத்தகைய வேலை வாய்ப்புகளை விரும்புகிறார்கள்... மதிப்புகளை தெரிய வைப்பது ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது.
அறிமுகம்...
- முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்
- சென்னை, தமிழகம், India
- இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404
Saturday, January 21, 2006
எண்ணங்களின் சிறகுகள் ...
கடிதங்கள் மெல்ல மெல்ல நம் வாழ்வில் இருந்து விடைபெற்று கொண்டு இருக்கின்றன. இளம் மஞ்சள் நிற அட்டைகள், இளம் ஊதா நிற காகிதங்கள் நம் வாழ்வின் கதைகளை உறவுகளுக்கு சொன்ன காலங்கள் மெல்ல மெல்ல கருப்பு வெள்ளையில் குறுகி கொண்டு இருக்கின்றன. கடிதங்கள் எழுதுவது ஒரு இனிய அனுபவமாக இருந்த காலம் ஒன்று உண்டு. என் இளம் வயதில் - 3ஆம் வகுப்பு படிக்கும்போது நான் பாட்டியுடன் கிராமத்தில் வாழ்ந்து இருந்தேன். அப்போது அம்மா அப்பாவிடம் இருந்து வாரம் ஒரு கடிதம் வரும். தம்பியும் தன் மழலை கிறுக்கல் கையெழுத்தில் கடிதத்தின் கடைசிப்பகுதியில் எழுதுவதுண்டு. பாட்டிக்கு படிக்க தெரியாது. நான் தான் படித்து சொல்வேன். அதுவும் தவிர அக்கம் பக்க வீட்டு கடிதங்களுக்கும் படிப்பாளி நாந்தான். அப்பா அம்மா கடிதத்துக்கு காத்து கொண்டிருந்த காலம் உண்டு. ஊதா இங்கில் எழுதப்பட்ட நலம் விசாரிப்புகளும், அறிவுரைகளும், சின்ன கதைகளும், சில ஸ்லோகங்களுமாக அம்மாவின் கடிதம் அம்மாவின் வாசம் சுமந்து கொண்டிருக்கும். பாட்டிக்கு நலம் விசாரிப்புகளும், ஊர் தகவல்களும் மற்றும் பணம் அனுப்பும் விஷயங்களும் உண்டு. பாட்டி சொல்ல சொல்ல கடிதங்கள் எழுதுவண்டு நான். பெறும் பாலும் என் குறும்புகள் பாட்டியினால் பாராட்டிகளாகவே கடிதத்தில் சொல்லபடும். கடிதங்களின் மடிப்புகளில் கூட பாட்டி எழுத சொல்வதுண்டு. நான் படங்கள் வரைந்திருப்பேன். என் கேள்விகள் பெரும்பாலும் அம்மா அப்பாவின் கிராம வருகை தொடர்பானதாகவே அமைந்திருக்கும். தபால்காரம் ஒரு அற்புதமான தாத்தா. நரைத்த மீசையுடன் உறவுகளை இணைக்கும் நண்பர். எல்லா வீட்டிலும் மோரும் தண்ணீரும் குடிப்பார். சில வருடங்களுக்கு பின்னர் என் பாலிடெக்னிக் காலத்தில் கடித போக்குவரத்துதான் ஒரே பொழுது போக்கு. கொஞ்சம் இலக்கியமும் சினிமாவும் அறிமுகமாகியிருந்தால் கடித போக்குவரத்து அம்மா அப்பா தாண்டிய உலகத்துக்குள் பிரெவேசித்து இருந்தது. சின்ன மருத்துவ குறிப்புகள், மேலும் ஸ்லோகங்கள், பண விஷயங்கள், நல விசாரிப்புகள் என கடிதங்களும் நிலையில் உயர தொடங்கியிருந்தன. அப்புறம் குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு என் பக்கமிருந்த கடிதங்கள் குறைந்துவிட்டன. அப்பா அம்மா மட்டும் உறவுகளுக்கு கடிதம் எழுதுவார்கள்... அப்புறம் மெல்ல மெல்ல தொலைபேசியில் கடிதங்கள் நிறம் மங்கிவிட்டன. பின்னர் கணிப்பொறியும் இணையமும் கடிதங்களை மேலும் ஊனமாக்கிவிட்டன். இன்றெல்லாம் கடிதங்கள் தொலைபேசி பில்களையும், பல்கலைகழக பரீட்சை அழைப்புகளையும் சில வங்கி விஷயங்களையும் மட்டுமே கருத்தாக கொண்டு என் வீட்டு வாசல்களில் இறைந்து கிடக்கின்றன. தபால்காரருடனனான உறவுகள் இன்று ஏதுமில்லை. கடிதங்கள் என் வாழ்வில் இருந்து மெல்ல மெல்ல விடை பெற்று கொண்டு இருக்கின்றன. என்னதான் தொலைபேசியில் பேசினாலும், இனிமேல் வாரம் ஒரு கடிதம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எழுத வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். கடிதம் எழுத தொடங்கும் போது இருக்கும் வார்த்தைகளும் கருத்துகளும், எழுத தொடங்கியதும் மேலும் மேலும் பொங்கிவரும்...அது ஒரு சுகானுபவம். வார்தைகளை விட எழுத்துகள் பலமும் உணர்வும் பெறும் இடங்கள் கடிதங்கள்தான்.
தமிழில் Erotica...
தமிழ்ல் Erotica நான் தேடியலைந்த விஷயங்களின் ஒன்று. இதுவும் ஒரு வகை இலக்கியம் என்பதை புரிந்துகொண்டவர்கள் மிக சிலரே. பொதுவில் Erotica என்பது இரண்டு பக்கமும் பின் அடிக்கபட்ட இங்க் உறிஞ்சும் மஞ்சள் காகிதங்களில் எழுதபட்ட 40 பக்க புத்தகமாகவே புரிந்து கொள்ளபட்டு இருக்கிறது. கி.ராஜநாராயணன் அவர்களின் பாலியல் கதைகள் வேறுபட்ட தொகுப்பு. கிராமத்து மக்களின் வாழ்க்கைமுறையும் உறவு முறைகளும் அவர்களின் உறவுசார் கற்பனைகளையும் வசவுகளின் உட்கருத்துகளையும் மேலும் சின்ன வயதில் சிரிப்பை அடக்கி கொண்டு கிராமத்து பெரிசு பெண்டுகளிடம் அரைகுறையாக கேட்ட கதைகளையும் அற்புதமாக தொகுத்து இருக்கிறார். பெறும்பாலான இலக்கிய உணர்வுசார் கதைகளிலும் கட்டுரைகளிலும் (எ.கா: ஜெயமோகன், கு.பா.ரா, ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், புதுமைபித்தன், பாரதி, ஆண்டாள், திருவள்ளுவர், நா.பார்த்தசாரதி...மேலும் பலர்) ஆண் பெண் கவிஞர்களின் கவிதைகளிலும், வெகு அரிதாக சில சினிமா பாடல்களிலும் Erotica மென்மையாக வாழ்கிறது. 1970களில் சுஜாதா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான கணையாழியின் கடைசிபக்கங்களில் கூட கமலஹாசனும் சுஜாதாவும் தமிழில் Erotica தேடியிருக்கிறார்கள். இதுபற்றி பொதுப்படையாக பேசமுடியாத சூழ்நிலை இன்னும் உள்ளது. சென்னை லேண்ட் மார்க்கில் ஒரு தனி பகுதி உள்ளது. அங்கே நின்றாலே வில்லங்கமாக பாப்பார்கள். ஆனால் யாரும் இல்லாதபோது ரகசியமாக நின்று பொம்மை பார்ப்பார்கள். இவர்களை பற்றி கவலைபடாமல் ஒரு தனி தொகுதி அமைத்து விவாதம் செய்ய இணையமும் மின்-அஞ்சலும் வழிசெய்கிறது. விவாத தொடர்ப்புகள் வரவேற்க்கபடுகின்றன.
எழுதபடாத கதைகள்...
கதைகள் படிப்பவர்களுக்கு இயல்பாகவே எழுதவேண்டும் என்ற ஆர்வமும் வருவதுண்டு. எழுத கருத்துக்கள் வேண்டும். கல்லூரிகாலங்களில் மாணவ அமைப்பின் புரட்சிகருத்துகளும் காதலும் மட்டுமே எழுத தொடங்கிய விஷயங்களாக இருந்தன. சினிமா கதைகள் படிக்கவும் எழுதவும் தொடங்கிய போதும் காதல் மட்டுமே பிரதானமாக சொல்லிகொடுக்கபட்டது. ரொம்பவும் விதிவிலக்காக சில திரைப்படங்கள் இருந்ததை மறுக்கமுடியாது. கதாநாயகர்களும் கதாநாயகிகளும் எல்லா கதைகளிலும் உண்டு. சாகசங்கள் செய்வார்கள், காதல் செய்வார்கள், வாழ்வில் ஏற்ற இறக்கங்களில் பயணிப்பார்கள், உலகம் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள். நான் படித்த அதிக பட்ச கதைகளில் இவை எல்லாம் உண்டு. நானும் கொஞ்சம் எழுத தீர்மானித்து இருக்கிறேன். என்னை சுற்றியுள்ள உண்மையான கதாநாயகன் கதாநாயகி பற்றி. என் அப்பாவும் அம்மாவும் தவிர என் கதாநாயகனும் கதாநாயகியும் யார். அவர்கள் வாழ்க்கையில் வாழ்ந்து வந்ததை யார் பதிவு செய்வது. சொல்லபோனால் இது மகன் அல்லது மகளின் கடமை. நமக்காகவே வாழ்ந்து அம்மா அப்பா பற்றி நம்மில் எத்துனை பேருக்கு எல்லாம் தெரியும்? அவர்களின் இளம்வயது, பள்ளி கூடம், வாத்தியார்கள், ஆர்வங்கள், நட்புகள், வாழ்க்கை, சுகங்கள், துக்கங்கள், சொந்தங்கள், சிந்தனைகள், பார்வைகள், கருத்துகள் எல்லாம் எங்கே பதிவு செய்யபடுகின்றன..? ஒரு முழுமையான நாவலுக்கு ஏற்ற வாழ்க்கையை அல்லவா அவர்கள் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்... அடுத்த தலைமுறைக்கு இவர்களின் வாழ்க்கை பாடங்கள். தலைமுறை படிக்குமோ இல்லையோ... ஒருவகையில் நம்பிக்கைதரும் நிஜங்களை கொண்ட வாழ்க்கையை படிக்கும்போது அது தரும் தைரியம் தனி. கிராமத்து கோவில் தேவதைகள் பார்த்ததுண்டோ..? எல்லா கோவில் தெய்வங்களும் ஒரு வகையில் அங்கே அந்த பகுதியில் வாழ்ந்து மறைந்த மனிதர்கள்தான்... அவர்களின் நினைவாகவே அவர்கள் தெய்வங்களாக அங்கே பிரதாபிக்கபட்டு இருக்கிறார்கள். ஆன்மீகங்கள் மாதாவையும் பிதாவையும் தெய்வமாக கொள்கின்றன. அவர்களை பற்றிய பதிவுகள் மிக அவசியம் என்றே நினைக்கிறேன்.
மாறுபடும் பாலுணர்வில்...
சமீபகால சில குறிப்பிட்ட பாலுணர்வு கருத்துகணிப்புகளில், ஆர்வங்கள் பற்றிய பகுயில் ஒரு வேறுபாட்டை கவனிக்கின்றேன். முன்றைய கால ஆண்கள், கட்டுமஸ்தானமாக மீசையும் உடல் ரோமமுமாக இருந்ததை படித்திருக்கிறேன். பெண்களை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. தஞ்சையிலும், கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும், மேலும்பல கோவில் சிற்பங்களிலும் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என கண்டதுண்டு. இன்று கொஞ்சம் நிலவரம் மாறி வருகிறது. சமுதாய வாழ்க்கைமுறை இந்த மாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது. என் கருத்து தவறில்லை என்றால் கொஞ்சம் பெண் தன்மையுள்ள ஆண்களும், ஆண்தன்மையுள்ள பெண்களும் எதிர்பாலினரால் ஈர்க்கபடுவதாக கருத்துகளில் அறிகிறேன். மீசை இல்லாத, உடல் ரோமம் முற்றிலும் மழிக்கபட்ட, கொஞ்சமும் தலைசீவாத பெண்கள் போல அலையாயும் தலைமுடியும் கொண்ட ஆண்களை பெருநகரங்களில் காண்கிறேன். நளினமில்லாத, ஆண்பிள்ளைகளின் தன்மையான உடையலங்காரமும், ஆண்போல பேச்சும் ஒரு தலையான கருத்தும் கொண்ட பெண்களையும் காண்கிறேன். இதற்கு காரணங்கள் பல உண்டு எனினும் இவர்களில் பெண்களின் ஈர்ப்புகள் குறைந்த ஆதிக்கமனப்பான்மை உடைய எதிர்பாலினர்மேலும், ஆண்களின் ஈர்ப்புகள் அதிக ஆதிக்கமனப்பான்மை உடைய எதிர்பாலினர்மேலும் கொள்வதாக கருத்துகள் சொல்கின்றன. மருத்துவ ரீதியாகவும் இன்றைய தலைமுறையின் உடலமைப்பு உடல் அங்கங்களை கொண்டு கொஞ்சம் மாறுபட்டு வருவதாகவும் சில மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்காலத்தில் ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்பு அவன் வாகனத்திலும் பண வசதியிலும் சொல்லப்பட்டு, பெண் பற்றிய கணிப்பு உடல் அங்கங்களின் வனப்பிலுமே சொல்லபட்டு இருப்பதாக ஒரு மனோதத்துவ மருத்துவர் அஜ்தக் தொலைகாட்சி பேட்டியில் சொல்லிகொண்டிருந்தார். ஆண் போல பெண்ணும், பெண்போல ஆணும் கருதி கொள்ளும் வேறு ஒரு உலகத்துக்குள் இது மெல்ல மெல்ல நாசுக்கான நாகரீகமாக கருதபட்டு சமுதாய வட்டதுக்குள் உள்ளீடு செய்யபட்டு வருகிறது. மேலும் விவாதங்கள் வரவேற்க்கபடுகின்றன.
Subscribe to:
Posts (Atom)