அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, June 18, 2006

சில புத்தகங்களும் சில கருத்துகளும்...

சமீபத்தில் ஒரு வார இதழில் எழுத்தாளர் மற்றும் கார்டூனிஸ்ட் மதன் படித்த சமீபகால புத்தகங்களில் அயல் நாட்டு கவிஞர்கள் எழுதிய காமம் சார்ந்த கவிதைகள் பற்றி சொல்லியிருந்தார். நானும் சில கவிதைகளை இணையத்தில் படித்து இருக்கிறேன்.. கவிதை நயமும், மென்மையான காமமும் சொல்லும் அற்புதமான கவிதைகள்.. சிலவற்றை மொழிபெயர்க்கவும் முயற்சித்து கொண்டு இருக்கிறேன்.. இன்றைக்கு நம் சினிமா பாடல்களில் காமம் வெளிப்படையாக தெரிவது போல இருக்காது அந்த கவிதைகள்.. மென்மையானவை.. உணர்வுகளை பேசுபவை.. உணர்ச்சிகளை அல்ல. இங்கே எரொடிக் (Erotic) என்று சொல்லபடும் கருத்துகளை கொண்ட புத்தகங்கள் ரொம்ப கம்மி. எல்லாருக்கும் அந்த புத்தகங்களை ரெண்டு பக்கமும் 'பின்' அடித்த மை குடிக்கும் பக்கங்களை கொண்ட, எழுத்து பிழை உள்ள புத்தகங்கங்களின் முறையில் தான் தெரியும். சிறுகதை இலக்கியத்திலும்.. கட்டுரை இலக்கியத்திலும்..கவிதை இலக்கியத்திலும் இவை குவிந்து உள்ளது.. ஒரு காலத்தில் நான் தேடி தேடி படித்ததுண்டு.. இன்னும் படிப்பதும் உண்டு. ஒரு நல்ல வரிசை தயார் செய்து விட்டு இங்கே பதிப்பிக்கிறேன். கி.ராஜநாராயணன், புதுமைபித்தன், பாரதியார், ல.சா.ரா., கு.பா.ரா, தி.ஜானகிராமன், ரமேஷ்-பிரேம், சாருநிவேதா,சுகிர்தராணி இவர்கள் கொஞ்சமே .. இன்னும் லட்சம் பேர் உண்டு... நான் படித்தவர்களில் நன்கு நினைவு உள்ளவர்கள் இவர்கள்.. சொல்லாமல் விட்டவர்கள் இருந்தால் மன்னிகவும்... போன் செய்து திட்ட வேண்டாம்..

ஒரு முறை ஒரு நண்பனின் திருமணத்துக்காக புத்தகம் பரிசாக கொடுக்கலாம் என தீர்மானித்தோம். சென்னையின் மிக பிரபலமான புத்தக கடை அது.. தமிழுக்கான புத்தகங்கள் ரொம்ப கம்மி. தமிழ் புத்தகங்களை புரட்டி கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது எரொடிக் புத்தங்கள் உள்ள பகுதி. ஆங்கிலத்தில் காமசூத்திரம் வாங்கினோம். அங்கே நின்றாலே பார்ப்பவர்கள் பார்வையில் ஒரு கிண்டல் தென்பட்டது. பில் போடும் இடத்தில் பெண் நமுட்டாய் சிரிக்கிறாள். பக்கத்தில் இருப்பவர் ஏதோ பாவ காரியம் பார்பவர்போல முகம் சுளிக்கிறார்.. ஆனால் எல்லாருக்கும் அங்கே உள்ள புத்தகங்களை பார்க்கம் புரட்டி படிக்க உள்ளே ஆர்வம் இருக்கிறது. .. தைரியம் இல்லை.. இவர்களால்தான் காமம் சரியான் முறையில் உணரபடவில்லை.. தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை. உபயோகபடுத்தி பார்பதில் தெளிவும், கொஞ்சம் கட்டுபாடும் போதும்..

கிடக்கிறார்கள்... அப்புறம் நான் 6 புத்தகங்கள் வாங்கினேன்.. 3 கவிதைகளும், இரண்டு கட்டுரைகளும்.. ஒரு சிறுகதைகளும் கொண்டவை. காமம் அடிப்படை உணர்வாக இருக்கிறது. காதலைவிட..காமமே உறவுகளில் மேலோங்கி இருக்கிறது.. ஒத்து கொள்வதில் மாறுபாடுகள் இருக்கலாம்.. சமூக சூழல், வளர்ப்புமுறை, சொல்லி கொடுக்கபட்டவை, மதம், வயது, வாழ்க்கை முறை, விருப்பு வெறுப்புகள்.. காரணங்கள் பலவாறு உண்டு....இயக்கத்தின் காலம் தொட்டு, மனித இனம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இதில் ஒன்றில்தான் என்பது என் கருத்து. தெளிவான காமம்.. தியானம் போன்றது.. ஒரு வகையில் ஆன்மூகம்.. நான் மட்டும் சொல்லவில்லை.. ஓஷோவும் சொல்கிறார்.. வாழ்கை பற்றி வாஸ்தியானர் சொன்னதை மெல்ல மெல்ல கதைகளில் ஒரு நீரோடை போல பாலகுமாரனும் சொல்கிறார்.. திரிகூட ராசப்பகவிராயர் சொன்னதை.. குறத்தி கவிதைகளில் உள்ளதை வைரமுத்துவும் வாலியும் சொல்கிறார்கள்.. எல்லாம் சொல்லி என்ன..? இங்கே எல்லா பூனைகளும் சைவ வேடம் தான்.

No comments: