அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, April 18, 2006

வரிகளை தொலைக்கும் புலிகள்...

பொதுவாக எனக்கு திருமணம் என்ற சடங்கில் கொஞ்சமும் சமூக நம்பிக்கையில்லை...நேரடியாக சொல்லபோனால் ஒரு பெண்ணை ஒரு ஆண் புணர்வதற்கான ஒரு உரிமம் போல திருமணம் என்ற சடங்கு நம் சமுதாயத்தில் உள்ளது. அடிப்படைவாத சமூக அமைப்பில் பெண் ஒரு ஆணின் படுக்கை அறைக்காகவே வளர்க்க படுகிறாள். படிப்பு, வேலை, தகுதி, சுதந்திரம் மற்ற எல்லா ஈர வெங்காயங்களும் வெறும் நிற பூச்சுகள். உடல்தேவைக்காவே திருமணம் அடிப்படையில் நடத்தபட்டு, பின்னர் அவர்களுக்குள் ஒரு ஒருமித்த உணர்வு உணரபட்டு, ஒரு காதலாகவும் பாசமாகவும் சித்தரிக்கபட்டு...ஒரு வழியாக தமிழ் கூறும் நல்லுலகில் வாழ்க்கை பயணத்தை நடத்துவது கலாச்சாரம் ஆகிவிட்டது.. இதில் யாரும் தப்பி பிழைக்க போவதில்லை.. நான் உட்பட.

காதல் ஒன்று மட்டும்தான் உடல் தேவையும் சார்ந்த அதே நேரம் சுய மரியாதை உணர்வாக கருதிகொண்டு இருந்தேன்..அதுவும் சமீபகாலங்களில் கரையான் அரிக்க தொடங்கிவிட்டது. காதலில், உறவில், உணர்வில் விட்டு கொடுத்தல் என்று ஒரு சமாச்சாரம் இருக்கிறது. சுய அடையாளங்களை விட்டு கொடு என்று யாரும் சொல்லி தரவில்லை. இதில் வேடிக்கை - பாரதியும் பாலச்சந்தரும் சொல்லும் புதுமை பெண்கள் நிலைதான்...சமுதாய சுய தேவைகளை பூர்த்தி செய்யும் கட்டாயங்கள் ஒருபுறம், புதுமை பெண்ணாக உருவகம் செய்யபட்டு உள்ள நிலையை காப்பாற்ற வேண்டிய கடமைகள் ஒருபுறம் என தவிக்கிறார்கள்.

சாதாரண பெண்களில் இருந்து சுய மரியாதை கவிஞர்களாகவும் திறமையான அரசியல் வல்லுனர்களாகவும் உணரபட்ட பல பெண்களுக்கும் இதே நிலைதான். தன் சுய அடையாளங்களை காதலுக்காக ஒரு ஆணும் பெண்ணும் தியாகம் செய்வதாக இருந்தால் - இருவருக்கு இடையே உள்ள காதல் எதனை அடிப்படையாக கொண்டது? தியாகம்? அல்லது சுய அடையாளங்கள்..? எதனை அடிப்படையாக கொண்டு (உடல் தவிர) காதல் வந்ததோ, காதலின் வெற்றி அதனை பலி வாங்கும் என்றால் சுய அடையாளங்கள் எதற்கு - யாருக்காவது பலி கொடுப்பதற்கா..? என்னை பொருத்தவரை சுய அடையாளங்களே ஒரு மனித உயிரின் முகவரி. அதனை பலி கொடுப்பது என்பது தன்னையே பலி கொடுப்பதற்க்கு சமம். புலிகளின் அடையாளம் அதன் உடலில் உள்ள வரிகள்தான். வரிகளை தொலைக்கும் மொட்டை புலிகள் வெண்மையை சமாதானத்தின் அடையாளமாக - விட்டு கொடுத்தலின் அடையாளமாக - காதலின் அடையாளமாக சொல்லி கொள்ளட்டும். ஆனால் இன்னமும் புலிகள் என்று சொல்லி கொள்ள வேண்டாம்.

No comments: