அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, April 30, 2006

பயணங்களில் தோழமை...

என் தோழமைகள் எல்லாம் நேரில் மட்டுமே சந்தித்து தோழமை கொண்டவர்கள் கிடையாது... நிறைய மின் அஞ்சலிலும், இணைய பேச்சு மூலமாகவும், சமீப காலமாக கை தொலை பேசியிலும் அறிமுகம் ஆனவர்கள்... இவர்களை நேரில் சந்திப்பது ஒரு அற்புதமான விஷயம்... முகம் பார்க்காமல் பேசியும் பழகியும் ஒருவருக்கு ஒருவர் அடுத்தவரை பற்றி ஒரு பிம்பம் வைத்திருப்போம்...அவற்றை ஒப்பிட்டு பார்க்கும்... எங்கனம் இருப்பினும் அதனை ஏற்று கொள்ளும் ஒரு அற்புதம். பெரும்பாலும் ஓவியங்களாலும், சில கவிதைகளாலும், சில கட்டுரைகளாலும்தான் எங்கள் தொடர்ப்பு ஏற்படுகின்றது..சில விதி விலக்குகளும் உண்டு. ஒரு இணைய பேச்சு மூலமாக அறிமுகமான ஒரு தோழியை சந்திக்க சில வருடங்களுக்கு முன்பு தென் தமிழ்நாட்டுக்கு பயணபட்டு இருந்தேன். என்னுடம் இன்னொரு தோழியும் இருந்தாள். பெண்களை சந்திக்க நான் எப்போதும் தனியாக போவது கிடையாது. சில சங்கடங்களை தவிர்க்கதான். எங்கள் பயணம் இனிமையாக இருந்தது. சொல்லபோனால் அந்த பயணத்தின் என் உடன் வந்த தோழியும் நானும் நன்றாக நெருங்கிவிட்டோம். புதிய தோழியின் வீட்டுக்கு சென்ற போது அற்புதமான வரவேற்பு..நல்ல உணவு..நல்ல கவனிப்பு.. ஒரு சிறு நெருடல் என்னவென்றால் எங்களை கணவன் மனைவியாக அவர்கள் எண்ணி கொண்டதுதான்...அவர்களின் கலாச்சாரத்தில் திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் ஒரு ஆணுடன் வெளிவருவது இல்லை என்பது புரிந்தது...நாங்களும் நன்றாகவே நடித்தோம்... அது ஒரு இனிய அனுபவம்...தங்கியிந்த இரண்டு நாட்களும் அற்புதமாக போனது. புதிய தோழி நல்ல ரசிகை..நல்ல ஓவியர்... இருவரும் வரைந்து தள்ளினோம்...
நடந்தே சில கோவில்களையும் வயல் பகுதிகளையும் சுற்றினோம்...அவளுக்கு எங்கள் நிலை பார்த்து நல்ல களிப்பு.. சரியான கிண்டல்... எங்களுக்கும் புதிய அனுபவம்... போட்டோக்கள் எடுத்தோம்... கோவில்களில் அர்ச்சனை...சேர்த்து எங்களுக்கு மாலை... வெளியில் சொல்ல முடியாத தர்மசங்கடம் ஒரு பக்கம் இருந்தாலும் இருவருமே அதனை ரசித்து இருந்தோம்... பின்னர் ஊர்வந்த சேர்ந்த பிறகும் சில மாலை வேலைகளில் எங்களை கிண்டல் செய்ய இந்த சம்பவம் ஒரு காரணமாக இருந்தது... சென்ற வருடம் என் உடன் வந்திருந்த தோழிக்கு திருமணம் ஆகிவிட்டது.. திருமணத்துக்கு தென்
தமிழ்நாட்டு தோழி மட்டுமே வந்திருந்தாள்... யாருக்கும் சொல்லாத ஒரு இனிய அனுபவத்தை எங்களுக்கு கொடுத்தமைக்காக அவளுக்கு நாங்கள் நன்றி சொன்னோம்... திருமணம் முடிந்து அவள் வெளிநாடு கிளம்பி சென்ற இரவில் நானும் என் தென் தமிழ்நாட்டு தோழியும் பேருந்து நிலையத்தில் இரவு காத்திருந்தோம். மனம் கனத்து இருந்தது... ஏதோ ஒன்றை இழந்த நினைவு... தொடர்ந்த மாதத்தில் வந்து சேர்ந்த ஒரு தோழியின் கடிதமும் அதனை சொல்லியிருந்தது.

க.சீ. சிவக்குமார்..ஒரு கவிதை

வேப்பம் பூக்கள்
பூக்கின்ற காலத்தில்தான்
பூக்கும்...
வேறுவழியின்றி
பழங்காலத்தில்
அவற்றின் வாசத்தின்
ஞாபகத்தைச்
சேமித்தேன்...

No comments: